பக்கம் எண் :

பரிபாடல்- வையை179

அவள் கொள்ளை கொண்டாள்; அதனால், அவன் கை சோர்ந்தது;
அவன் கண்கள் அம் மடந்தையின் எழிலில் திளைத்தன; நீரோட்டம்
அவனைத் தன் போக்கில் தள்ளிச் சென்றது; அது கண்ட அம் மகள்
ஆயத்தினின்றும் பிரிந்து அவனைத் தொடர்ந்தாள்; அவளை, 'ஏடி!
ஆயத்தை விலகிச் செல்லாதே' என்று அவள் தாய் கடிந்தாள்; அதனால்
அவள் ஆற்றாமையால் அரற்றினாள்; இவ்வாறு அரற்றும்படி கார்காலத்து
வெள்ளம் கரை பொருது நிமிர்ந்து வந்தது.

115-121: இப்பொழுது அங்ஙனம் நிமிர்ந்து வராமல் தைந்நீரே யாம்
ஆடத்தகுந்த அளவின் தெளிந்து வருகின்றனை; நீ தக்காய் எனப்
பாராட்டுவர் சிலர்; வேறுசிலர் யாம் எம் காதலரைத் தழுவும் வீறு பெறுக
என்று வேண்டுவர்; வண்டு தாம் விரும்பிய மலரை நீத்துப் போவது
போல எங் கணவர் எம்மை விட்டுப் போகாமல் பாதுகாப்பாராக என்பர்
சிலர்; வேறு சிலர், யாமும் எங்கணவரும் முதுமை எய்தாமல் இத்தைந்
நீராடற்றவம் நிலைபெற்ற இளமையைத் தருவதாக! யாம் செல்வத்தோடு
சுற்றம் சூழ நிலை பெறுக என வேண்டுவர்;

122-132: இனி, ஆடவர் சிலர் அங்குள்ள மகளிரைத் தம் நண்பர்க்குக்
காட்டிப் பின்வருமாறு கூறினர்:-

"இவளைக் காண்மின்! இவள் தீண்டிவருத்தும் தெய்வம் போல்கின்றாள்;
இவளைக் காண்மின்! இவள் காமனுக்குக் கருவூலமும் படையுமாவாள்;
அவளுடைய கோதையில் யாழ்போல வண்டுகள் இசைத்தல் கேண்மின்!
அதோ பாலைபாடும் வண்டிசை கேண்மின்! உதோ யாமப்பண்பாடும்
தும்பியிசை கேண்மின்! தான் விரும்பிய மலரை நெரித்தா
ளொருத்தியைப் புடைத்து மீண்டும் புடைக்கவரும் வண்டினைக் காண்மின்!"

133-140: பரிபாடலானே புகழ்பெற்ற வையையே! இவ்வாறு கைக்கிளைக்
காமத்தைத் தருகின்ற நின்னிடத்தே இத்தைந்நீராடலை முற்பிறப்பிற்
செய்த தவத்தாலே இப் பிறப்பிற் பெற்றோம்; அதனை யாவரும்
நயக்கத்தக்க நினது நீர் நிறைவின் கண்ணே மறுபிறப்பினும் பெறுவேமாக.

விரிகதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப
எரிசடை யெழில்வேழந் தலையெனக் கீழிருந்து
தெருவிடைப் படுத்தமூன் றொன்பதிற் றிருக்கையுள்
உருகெழு வெள்ளிவந் தேற்றியல் சேர
வருடையைப் படிமகன் வாய்ப்பப் பொருடெரி