"விசும்பிற் றுளிவீழி னல்லான்மற் றாங்கே
பசும்புற் றலைகாண் பரிது"
(குறள் - 16)
என்றும்,
"வானின் றுலகம் வழங்கி வருதலாற்
றானமிழ்தம் என்றுணரற் பாற்று"
(குறள் - 11)
என்றும், ஆசிரியர் திருவள்ளுவனாரும் மழை "ஆனா மருந்தாதல்"
குறித்தமையுணர்க.
மலிதுறை: வினைத்தொகை. துறை - வையைத்துறை. இருந்தையூர்
- வையைத் துறையிடத்தே உளதாகியதொரு திருமால் திருப்பதி. இதனை
"நீடு நீர் வையை நெடுமால் அடியேத்த" எனவரும் சிலப்பதிகார அடிக்கு
(துன்ப - 4) அரும்பதவுரைகாரர். நெடுமால் - ஸ்ரீ இருந்த வளமுடையார்
எனக் குறிப்பதனானும் உணர்க.
திருந்தடி - பிறக்கிடாத அடியுமாம். செல்வன் - உயிர்கட்குச்
செல்வமாக உள்ளவன்; உலகமெல்லாம் தன்னுடைமையாகப் பெற்றவன்
எனினுமாம். தொழுது பரவுதும் என மாறுக.
வையைத் துறையில் மேய இருந்தையூரமர்ந்த செல்வ நின்
அடி
தொழுது பரவுதும் என முடிக்க.
7-9: ஒருசார் . . . . . . . . .மலை
(இ-ள்.) ஒருசார் - எம்பெருமானே! நீ எழுந்தருளியிருக்கும்
இத் திருப்பதியின் ஒரு பக்கத்தே, அணி மலர் வேங்கை மராஅம்
மகிழும் பிணி நெகிழ் பிண்டி நிவந்து - அழகிய மலர்களையுடைய
வேங்கையும் வெண்கடம்பும் மகிழ மரமும் அரும்புகள் கட்டலர்ந்த
செயலையும் இன்னோரன்ன பிற மரங்களும், சேர்பு நிவந்து ஓங்கி
- ஒன்று கூடி மிகவும் வளர்ந்து நிற்பதனாலே, மணிநிறம் கொண்ட
மலை - நீல மணியினது நிறமுடைத்தாய்த் திகழும் மலை விளங்காநிற்கும்.
(வி-ம்.) அணி - அழகு. வேங்கை - ஒருவகை மரம்.
மராஅம்
- வெண் கடம்பு. பிணி நெகிழ் - மலர்ந்த. பிண்டி - செயலை;
அசோகமரம் முதலிய இன்னோரன்ன மரங்கள் என்க: சேர்பு -
அடர்ந்து. நிவந்து ஓங்கி, ஒரு பொருட் பன்மொழி. மிக வுயர்ந்து
வளப்பமுடைய மலை சேய்மையினின்று நோக்குவோர்க்கு நீலநிற
முடைத்தாய்த் தோன்றுதல் இயல்பாகலின் மணி நிறங் கொண்ட மலை
என்றார். இதனால் நானிலத்துள் முதனிலமாகிய குறிஞ்சி வளம்
கூறினாராயிற்று.
ஒருசார் மலை நின்று திகழும் என்க.
10 - 13: ஒருசார் . . . . . . .கயம்
(இ - ள்.) ஒருசார் - பெருமானே! நினது திருப்பதியின்
மற்றொரு
பக்கத்தே, கயம் - நீர் நிலைகள், தண் நறு தாமரைப் |
|
|
|