பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்382

கிடத்தலையுடைய குளவாய் என்னும் திருப்பதியிலே எழுந்தருளிய
அவ் வாதிசேடனாருடைய திருக்கோயில் வணங்குமளவிலே அவர்க்கு,
அல் இகப்பப் பிணி நீங்க நல்லவை எல்லாம் இயைதரும் - துன்பம்
நீங்காநிற்ப அறம் பொருள் இன்பம் ஆகிய நல்லன அனைத்தும் தாமே
வந்து பொருந்தா நிற்கும்;

      (வி - ம்.) மணி - நீலமணி. இது கூந்தலுக்கு நிறம்பற்றி வந்த
உவமை. தகை - அழகு. வகை - கூறுபாடு. நெறி - நெறிப்பு; அறல்
செறி - செறிந்த. ஒலி - ஒலித்த; தழைத்த. பொலி - பொலிவு. அவிர்
- விளங்கும். நிமிர் - எழுச்சியுடைய. கண்டோராலே பாராட்டப்பட்ட
கூந்தல் என்பார் புகழ் கூந்தல் என்றார்.

      நெகிழ்பிணி என மாறுக. நெகிழப் பூட்டப்பட்ட (சிலம்பு)
என்றவாறு. சிலம்பு இறுகப் பூட்டப்படாமல் நெகிழப் பூட்டப்படும்
அணிகலனாதல் அறிக. துணை இணை - இரண்டும் தம்முள் ஒத்த
என்க. தெளியொளி - தெளிந்த ஒளி. ஞெகிழ் - சிலம்பு. "21 ஆம்
பாடலில் (18) "சுடுபொன் னெகிழத்து முத்தரி சென்றார்ப்ப"
என்பதனானும் "ஓடவைத்த பொன்னாற் செய்த சிலம்பில் முத்தாகிய
அரி எங்கும் கேட்ப ஆர்ப்ப" என அதற்குப் பரிமேலழகர் வரைந்த
உரையானும் அஃதப் பொருட்டாதல் உணர்க.

      தெரியரிமது: வினைத்தொகை யடுக்கு. ஆராய்ந்து அரித்துச்
சமைத்த கள் என்க. மயிலின் தொழிலோடும் எழிலோடும் மாறுபட்டு
வந்து இறைஞ்ச என்க. மயில்போல நடையினையும் சாயலினையும்
உடையராய் என்பது கருத்து. பிணி என்பது உடற்பிணி பிறவிப்பிணி
என்னும் 'இருவகைப் பிணியையும் குறித்து நின்றது. அல்லல்
எனற்பாலது. அல் என ஈறு கெட்டு நின்றது. அல் - இருள் எனக்
கொண்டு துன்பத்திற்கு உவம ஆகுபெயராக்கினும் அமையும்.
குளவாய்-சேடன் கோயில் இருக்கும் இடப்பெயர் என்க.

      இத்துணையும் திருமால் திருப்பதி மாண்பும் அத் திருப்பதியில்
குளவாய் என்னுமிடத்தே எழுந்தருளியிருக்கும் சேடனார் திருக்கோயிற்
சிறப்பும் கூறி மேல் அச் சேடனாருடைய பல்வேறு மாண்புகளையும்
பாரித்து ஓதுகின்றார்.

64-71: திகழொளி . . . . . . . அணிந்தாருந்தாம்

      (இ - ள்.) ஆழியான் - சக்கரப்படையையுடைய திருமால்,
புகழ்சால் சிறப்பின் இருதிறத்தோர்க்கும் - புகழ் நிறைந்த
சிறப்பையுடைய தேவர்களும் அசுரர்களுமாகிய இருபாலார்க்கும், திகழ்
ஒளி முந்நீர் கடைந்த அக்கால் - விளங்காநின்ற ஒளியையுடைய
திருப்பாற்கடலைக் கடைந்த அக் காலத்தே, வெற்பு திகழ்பு எழ
வாங்கி - மந்தரமலை விளக்கமுறும்படி மேலே எழ எடுத்து,
மகரமறிகடல் தன் சீர் சிரத்து ஏற்றி வைத்து நிறுத்து -
மகரமீனையுடைய அலைபுரள்கின்ற அப் பாற்கடலின்கண் ஆமை
உருக்கொண்ட தனது அழகிய முதுகின்