"உண்ணற் கரிய நஞ்சையுண்டு ஒருதோழந் தேவர்
விண்ணிற் பொலிய அமுதளித்த விடைசேர் கொடியண்ணல்"
(திருப்புறவம்.)
எனவரும் திருஞானசம்பந்த அடிகளார் தேவாரத்தானும் உணர்க.
மந்தரமலையிற் சுற்றி ஒருதோழங்காலம் கடைதற்கு
நாணாகிக் கிடத்தற்கு
அவர்தம் சிந்தாத வலிமையே காரணம் என்பார் 'உகாஅ வலியின்' என்றார்.
அறாஅது - இடையறாமல். அணிதல் - நாணாகி அப் பொன்மலைக்கும்
அழகுண்டாக்குதல்.
72 - 18: மிகாஅ . . . . . .. . . .தந்தாருந்தாம்
(இ - ள்.) மிகாஅ மறலிய மேவலியெல்லாம் - மேருமலையினைப்
பேர்ப்பல்
என்று மிக்கு வந்து மோதிய காற்றுத் தேவனுடைய மேம்பட்ட வலிமை யெல்லாம்
தம்மைக் கடந்து, புகாஅ - அம் மலையிற் புகுதாதபடி, எதிர் பூண்டாரும் -
அக் காற்றிற்கு மாறாக அம் மலையினைச் சுற்றிக் கொண்டவரும்
அவ் வாதிசேடனாரே ஆவர், மணிபுரை மாமலை ஞாறிய ஞாலம் - மேலும்
மணியை நிறத்தாலே ஒத்த பெரிய மலைகள் தோன்றிய இம் மண்ணுலகத்தையே
அணிபோல் பொறுத்தாரும், தாஅம் - தமது தலையின்கண் சூட்டப்பட்டதொரு
அணிகலனைத் தாங்கும் அத்துணை எளிதாகவே தாங்கியவரும்
அவ்வாதிசேடனாரேயாவர், பணிவு இல் சீர் செல்விடைப் பாகன் திரிபுரம்
செற்றுழி - தன்னைப் பிறர் பணிதல் அன்றித் தான் பிறரைப் பணிதல் இல்லாத
தலைமைத் தன்மையினையும் விரைந்து செல்லும் காளையூர்தியினையும் உடைய
பிறவாயாக்கைப் பெரியோன் முப்புரத்தை அழித்த காலத்தே, கல்லுயர் சென்னி
இமயவில் நாண் ஆகி - ஏனை மலைகளினுங் காட்டில் உயர்ந்த
சிகரத்தினையுடைய இமயமலையாகிய அப்பெருமான் கொண்ட வில்லிற் கேற்ற
நாணாகி தொல்புகழ் தந்தாரும் தாம் - அப் பெருமானுக்குப் பழைதாகிய புகழினை
அளித்தவரும் அவ்வாதிசேடனாரே ஆவர்;
(வி - ம்.) ஆதிசேடனைக் குண்டலினி சத்தி என்பர்
அளவை நூலோர்.
அஃதாவது உலகத்துள்ள பல்வேறு சக்திகளை எல்லாம் ஒன்றற்கொன்று மிக்கு
ஒன்றனை ஒன்று அழிக்காதபடி சமனிலைப் படுத்து அவற்றை அடக்கி
நடத்துவதொரு சக்தி என்பதாம். இங்ஙன மாகலின் மிகாஅ மறலிய
மேவலியெல்லாம் புகாஅ எதிர்பூண்டா ருந்தாம் என்றதற்கு, ஐம்பெரும்
பூதங்களின் வலியெல்லாம் தம்முள் ஒன்றனை ஒன்று மிகாது தன்கண் அடங்க
அவற்றைச் சமனிலைப் படுத்து அடக்கிப் பொறுத்தாரும் தாம் எனினுமாம்.
நிலந்தாங்குங் கால் மிக எளிதாகவே தாங்குவர் என்பார் "ஞாலம் அணி போல்
பொறுத்தார்" என்றார். அணிகலனைப் பொறுக்கு மத்துணை எளிதாகப் பொறுத்தார்
என்றவாறு. |
|
|
|