தலைமகள் அவர் கூற்றாகவே கூறி மேலும் விறலிக்குக்
கூறுகின்றாள் என்பது கருத்து.)
96 - 104: சினவல் . . . . . . . . . . கூடுப
(இ - ள்.) (101) இல்லவர் - இங்ஙனம் ஊடிநின்ற
காதற்
பரத்தையின் இல்லின்கண்ணுள்ள முதுபெண்டிர் அவளை நோக்கி,
சினவல் - ஏடி நீ இவ்வாறு வெகுளாதேகொள், நின் உண் கண்
சிவப்புஅஞ்சுவாற்கு - தலைவனோ நினது மையுண்ட கண் சினத்தாலே
சிவத்தலுக்குப் பெரிதும் அஞ்சாநின்றான் அங்ஙனம் அஞ்சுபவனிடத்து,
துனி நீங்கி ஆடல் தொடங்கு - நீ ஊடல் தவிர்ந்து அவனோடு
விளையாடுதலைத் தொடங்குவாயாக, துனி நனி கன்றிடின் -
அங்ஙனமன்றி நீ செவ்வியுணராது ஊடலின்கண் மிகுவாயாயின்,
காமங் கெடும் - அவன் காமவின்பம் பதனழிந்து கெட்டொழியும்,
மகள் - நீயோ பெண்மகள், இவன் அல்லா நெஞ்சம் உறப் பூட்டக்
காய்ந்து வல் இருள் நீயல் - இத் தலைவனுடைய சுழற்சியையுடைய
நெஞ்சம் இறுகப்பூட்டிக் கொள்ளும்படி சினந்து (இவன் நின்னைப்
பிரிந்து போதல் ஒருதலை) பின்னர் இவனைத் தேடிச்செறிந்த
இருளையுடைய இரவின்கண் செல்லுதல் வேண்டும்; அங்ஙனம்
செல்லாதொழி, அது பிழை ஆகும் என - அவ்வாறு இருட்கண்
செல்லுதல் இடனறிந்தூடி இனிதின் உணரும் ஒழுக்கத்திற்குப்
பிழையாகும் என்று கூறித்தேற்றுதலானும், வல்லவர் -
ஊடலுணர்த்துதலிலே வல்ல வாயில்களும், இரந்து பரந்து உழந்து
ஆட ஊடல் உணர்த்தா - இரந்து கூறியும் மிக்குக் கூறியும் வருந்திக்
கூறியும் அவ் விருவரும் தம்முட் கூடும்படி ஊடலை உணர்த்துதலானும்,
நல்லாய் - விறலியே, களிப்பர் குளிப்பர் காமம் கொடிவிட துனிப்ப
அளிப்ப - இருவரும் கள்ளுண்டு களியாநிற்பர் வையையின்கண்
நீராடா நிற்பர் காமவின்பம் தளிர்க்கும்படி ஊடிக்கொள்வர் ஊடல்
சிறிது மிக்கவுடன் அது தீர்ந்து கூடாநிற்பர். அங்கங்கே சென்று
விளையாடா நிற்பர்;
(வி - ம்.) சினவல் - வெகுளாதே. கன்றிடில் - முதிருமாயின்.
காமம் - காமவின்பம். நீ மகளாதலானே இருளின்கண் நீயல் என
இயைத்துக் கொள்க. அல்லாக்கும் நெஞ்சம் என்க. உறப்பூட்ட -
வெறுக்கும்படி என்றவாறு. அது - அங்ஙனம் ஊடுதல்.
இவ்வாறு ஊடுவாயானால் அவன் நின்னை அகன்று போவான்;
பின்னர் அவனைத் தேடி நீ இருளிலே செல்லும்படி நேரும், அவ்வாறு
நிகழும்படி செய்து கொள்ளாதே என்பது கருத்து.
இல்லவர் - இல்லிலுள்ள முதுபெண்டிர் பரந்து என்றது,
மேற்
சென்றிடித்துக் கூறியும் என்றவாறு. ஆட - கூடும்படி. நல்லாய் |
|
|
|