|
அறுமுகப் பெருமானின் வெற்றிச் செயல்கள்
|
|
பாய் இரும் பனிக் கடல் பார்
துகள் படப் புக்கு,
|
|
சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து,
அமர் உழக்கி,
|
|
தீ அழல் துவைப்பத் திரிய
விட்டெறிந்து,
|
|
நோயுடை நுடங்கு சூர் மா முதல்
தடிந்து,
|
5
|
வென்றியின் மக்களுள் ஒருமையொடு
பெயரிய
|
|
கொன்று உணல் அஞ்சாக் கொடு
வினைக் கொல் தகை
|
|
மாய அவுணர் மருங்கு அறத் தபுத்த
வேல்,
|
|
நாவல்அம் தண் பொழில் வட
பொழில் ஆயிடை,
|
|
குருகொடு பெயர் பெற்ற மால் வரை
உடைத்து,
|
10
|
மலை ஆற்றுப் படுத்த மூ இரு
கயந்தலை!
|
|
|
|
'மூ இரு கயந்தலை, முந் நான்கு முழவுத்
தோள்,
|
|
ஞாயிற்று ஏர் நிறத் தகை!
நளினத்துப் பிறவியை!
|
|
காஅய் கடவுட் சேஎய்! செவ்வேள்!
|
|
சால்வ! தலைவ!' எனப் பேஎ
விழவினுள்,
|
15
|
வேலன் ஏத்தும் வெறியும் உளவே:
|
|
அவை வாயும் அல்ல, பொய்யும்
அல்ல,
|
|
நீயே வரம்பிற்று இவ் உலகம்
ஆதலின்:
|
|
சிறப்போய் சிறப்பு இன்றிப்
பெயர்குவை;
|
|
சிறப்பினுள் உயர்வு ஆகலும்,
|
20
|
பிறப்பினுள் இழிபு ஆகலும்,
|
|
ஏனோர் நின் வலத்தினதே:
|
|
|
|
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,
|
|
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,
|
|
நாகம் நாணா, மலை வில்லாக,
|
25
|
மூவகை ஆர் எயில் ஓர் அழல்
அம்பின் முளிய,
|
|
மாதிரம் அழல, எய்து அமரர்
வேள்விப்
|
|
பாகம் உண்ட பைங் கட்
பார்ப்பான்
|
|
உமையொடு புணர்ந்து, காம வதுவையுள்,
|
|
அமையாப் புணர்ச்சி அமைய,
நெற்றி
|
30
|
இமையா நாட்டத்து ஒரு வரம்
கொண்டு,
|
|
'விலங்கு' என, விண்ணோர் வேள்வி
முதல்வன்
|
|
விரி கதிர் மணிப் பூணவற்குத்
தான் ஈத்தது
|
|
அரிது என மாற்றான், வாய்மையன்
ஆதலின்,
|
|
எரி கனன்று ஆனாக் குடாரி கொண்டு
அவன் உருவு
|
35
|
திரித்திட்டோன், இவ் உலகு
ஏழும் மருள:
|
|
கருப் பெற்றுக் கொண்டோர்,
கழிந்த சேய் யாக்கை
|
|
நொசிப்பின், ஏழ் உறு முனிவர்,
நனி உணர்ந்து,
|
|
வசித்ததைக் கண்டம் ஆக மாதவர்,
|
|
'மனைவியர், நிறைவயின், வசி தடி
சமைப்பின்,
|
40
|
சாலார்; தானே தரிக்க' என, அவர்
அவி
|
|
உடன் பெய்தோரே, அழல் வேட்டு:
அவ் அவித்
|
|
தடவு நிமிர் முத் தீப் பேணிய மன்
எச்சில்,
|
|
வடவயின், விளங்கு ஆல், உறை எழு
மகளிருள்
|
|
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய,
|
45
|
அறுவர் மற்றையோரும் அந் நிலை
அயின்றனர்:
|
|
மறு அறு கற்பின் மாதவர்
மனைவியர்
|
|
நிறைவயின் வழாஅது நிற் சூலினரே;
|
|
நிவந்து ஓங்கு இமயத்து நீலப்
பைஞ் சுனைப்
|
|
பயந்தோர் என்ப, பதுமத்து பாயல்:
|
50
|
பெரும் பெயர் முருக! நிற் பயந்த
ஞான்றே,
|
|
அரிது அமர் சிறப்பின்
அமரர்செல்வன்,
|
|
எரி உமிழ் வச்சிரம் கொண்டு,
இகந்து வந்து, எறிந்தென,
|
|
அறு வேறு துணியும் அறுவர் ஆகி,
|
|
ஒருவனை; வாழி, ஓங்கு விறல் சேஎய்!
|
|
தேவர் சேனைக்குத் தலைவனாதல்
|
55
|
ஆரா உடம்பின் நீ அமர்ந்து
விளையாடிய
|
|
போரால் வறுங் கைக்குப்
புரந்தரன் உடைய,
|
|
அல்லல் இல் அனலன் தன்
மெய்யின் பிரித்து,
|
|
செல்வ வாரணம் கொடுத்தோன்;
வானத்து
|
|
வளம் கெழு செல்வன் தன்
மெய்யின் பிரித்து,
|
60
|
திகழ் பொறிப் பீலி அணி மயில்
கொடுத்தோன்;
|
|
திருந்து கோல் ஞமன் தன்
மெய்யின் பிரிவித்து,
|
|
இருங் கண் வெள் யாட்டு எழில் மறி
கொடுத்தோன்;
|
|
ஆஅங்கு அவரும் பிறரும் அமர்ந்து
படை அளித்த
|
|
மறியும், மஞ்ஞையும், வாரணச்
சேவலும்,
|
65
|
பொறி வரிச் சாபமும், மரனும்,
வாளும்,
|
|
செறி இலை ஈட்டியும், குடாரியும்,
கணிச்சியும்,
|
|
தெறு கதிர்க் கனலியும், மாலையும்,
மணியும்,
|
|
வேறு வேறு உருவின் இவ் ஆறு இரு கைக்
கொண்டு,
|
|
மறு இல் துறக்கத்து
அமரர்செல்வன்தன்
|
70
|
பொறி வரிக் கொட்டையொடு புகழ்
வரம்பு இகந்தோய்.
|
|
முருகன் திருவடி அடைவோரும் அடையாதோரும்
|
|
நின் குணம் எதிர்கொண்டோர்
அறம் கொண்டோர் அல்லதை,
|
|
மன் குணம் உடையோர் மாதவர்
வணங்கியோர் அல்லதை
|
|
செறு தீ நெஞ்சத்துச் சினம்
நீடினோரும்,
|
|
சேரா அறத்துச் சீர் இலோரும்,
|
75
|
அழி தவப் படிவத்து அயரியோரும்,
|
|
மறு பிறப்பு இல் எனும் மடவோரும்,
சேரார்
|
|
நின் நிழல்:
|
|
முருகப் பெருமானிடம் வேண்டுதல்
|
|
அன்னோர் அல்லது இன்னோர்
|
|
சேர்வார் ஆதலின், யாஅம்
இரப்பவை
|
80
|
பொருளும் பொன்னும் போகமும்
அல்ல; நின்பால்
|
|
அருளும், அன்பும், அறனும், மூன்றும்
|
|
உருள் இணர்க் கடம்பின் ஒலி
தாரோயே!
|