|
|
|
நிறை கடல் முகந்து உராய்,
நிறைந்து, நீர் துளும்பும் தம்
|
|
பொறை தவிர்பு அசைவிடப்
பொழிந்தன்று, வானம்;
|
|
நிலம் மறைவது போல் மலிர் புனல்
தலைத் தலைஇ,
|
|
மலைய இனம் கலங்க, மலைய மயில்
அகவ,
|
5
|
மலை மாசு கழியக் கதழும் அருவி
இழியும்
|
|
மலி நீர் அதர் பல கெழுவு தாழ்
வரை,
|
|
மாசு இல் பனுவற் புலவர் புகழ் புல
|
|
நாவின் புனைந்த நன் கவிதை
மாறாமை,
|
|
மேவிப் பரந்து விரைந்து, வினை
நந்தத்
|
10
|
தாயிற்றே தண் அம் புனல்.
|
|
புதுப் புனலாட முற்படும் மகளிரது செயல்
|
|
புகை, பூ, அவி ஆராதனை, அழல், பல
ஏந்தி,
|
|
நகை அமர் காதலரை நாளணிக்
கூட்டும்
|
|
வகைசாலும், வையை வரவு.
|
|
வையையின் கரை உடைதலும், ஊரார் கிளர்ந்து எழுதலும்
|
|
தொடி தோள் செறிப்ப, தோள்வளை
இயங்க,
|
15
|
கொடி சேரா, திருக் கோவை காழ்
கொள,
|
|
தொகு கதிர் முத்துத் தொடை
கலிழ்பு மழுக,
|
|
உகிரும் கொடிறும் உண்ட செம்
பஞ்சியும்,
|
|
நகில் அணி அளறு நனி வண்டல்
மண்ட,
|
|
இலையும் மயிரும் ஈர்ஞ் சாந்து
நிழத்த,
|
20
|
முலையும் மார்பும் முயங்கு அணி
மயங்க,
|
|
விருப்பு ஒன்றுபட்டவர் உளம் நிறை
உடைத்தென,
|
|
வரைச் சிறை உடைத்ததை வையை:
'வையைத்
|
|
திரைச் சிறை உடைத்தன்று
கரைச்சிறை; அறைக' எனும்
|
|
உரைச் சிறைப் பறை எழ, ஊர்
ஒலித்தன்று.
|
|
மைந்தரும் மகளிரும் நீராடச் செல்லல்
|
25
|
அன்று, போர் அணி அணியின்
புகர்முகம் சிறந்தென,
|
|
நீர் அணி அணியின் நிரைநிரை
பிடி செல;
|
|
ஏர் அணி அணியின் இளையரும்
இனியரும்
|
|
ஈரணி அணியின், இகல் மிக
நவின்று,
|
|
தணி புனல் ஆடும் தகை மிகு
போர்க்கண்
|
30
|
துணி புனல் ஆக, துறை வேண்டும்
மைந்தின்
|
|
அணிஅணி ஆகிய தாரர், கருவியர்,
|
|
அடு புனலது செல அவற்றை இழிவர்:
|
|
கைம்மான் எருத்தர், கலி மட
மாவினர்,
|
|
நெய்ம் மாண் சிவிறியர், நீர்
மணக் கோட்டினர்,
|
35
|
வெண் கிடை மிதவையர், நன்
கிடைத் தேரினர்,
|
|
சாரிகை மறுத்துத் தண்டா உண்டிகை
|
|
ஓர் இயவு உறுத்தர ஊர் ஊர்பு இடம்
திரீஇ,
|
|
|
|
சேரி இளையர் செல அரு நிலையர்,
|
|
வலியர் அல்லோர் துறைதுறை அயர,
|
40
|
மெலியர் அல்லோர் விருந்து புனல்
அயர,
|
|
சாறும் சேறும் நெய்யும் மலரும்
|
|
நாறுபு நிகழும், யாறு வரலாறு.
|
|
|
|
நாறுபு நிகழும் யாறு கண்டு, அழிந்து,
|
|
வேறுபடு புனல் என, விரை மண்ணுக்
கலிழை,
|
45
|
புலம் புரி அந்தணர் கலங்கினர்,
மருண்டு.
|
|
பிறரும் சேறு கலந்த புனல் கண்டு நீங்குதல்
|
|
மாறு மென் மலரும், தாரும்
கோதையும்,
|
|
வேரும் தூரும், காயும் கிழங்கும்,
|
|
பூரிய மாக்கள் உண்பது மண்டி
|
|
நார் அரி நறவம் உகுப்ப, 'நலன்
அழிந்து,
|
50
|
வேறாகின்று இவ் விரி புனல் வரவு'
என,
|
|
சேறு ஆடு புனலது செலவு.
|
|
வரை அழி வால் அருவி வாதாலாட்ட,
|
|
கரை அழி வால் அருவி கால்
பாராட்ட,
|
|
'இரவில் புணர்ந்தோர் இடைமுலை
அல்கல்
|
55
|
புரைவது பூந் தாரான் குன்று' எனக்
கூடார்க்கு
|
|
உரையோடு இழிந்து உராய், ஊரிடை
ஓடி,
|
|
சலப் படையான் இரவில் தாக்கியது
எல்லாம்
|
|
புலப்படப் புன்அம் புலரியின்
நிலப்படத்
|
|
தான் மலர்ந்தன்றே,
|
60
|
தமிழ் வையைத் தண்ணம் புனல்.
|
|
இற்பரத்தையுடன் நீராடிய தலைமகன் காதற்பரத்தைக்கு
வையை நீர் விழவு கூறியது
காதற்பரத்தையின் வினாவும் தலைமகன் மறுமொழியும்
|
|
'விளியா விருந்து விழுவார்க்குக்
கொய்தோய்.'
|
|
'தளிர் அறிந்தாய், தாம் இவை.'
|
|
களவு வெளிப்பட்டது எனக் காதற்பரத்தை உரைத்தல்
|
|
'பணிபு ஒசி பண்ப! பண்டெல்லாம்
நனி உருவத்து;
|
|
என்னோ துவள் கண்டீ?
|
|
எய்தும் களவு இனி: நின் மார்பின்
தார் வாடக்
|
|
கொய்ததும் வாயாளோ? கொய் தழை
கை பற்றிச்
|
|
செய்ததும் வாயாளோ? செப்பு.'
|
|
தளிரின் துவட்சிக்கு வையைப் பெருக்குக் காரணம் என
|
|
'புனை புணை ஏறத் தாழ்த்ததை;
தளிர் இவை
|
|
நீரின் துவண்ட; சேஎய் குன்றம்;
காமர்
|
70
|
பெருக்கு அன்றோ, வையை வரவு?'
|
|
தலைவன் உரையை 'உண்மை அன்று' என, அவள் மறுத்து
உரைத்தல்
|
|
'ஆம்ஆம்; அது ஒக்கும்; காதல்அம்
காமம்
|
|
ஒருக்க ஒருதன்மை நிற்குமோ?
ஒல்லைச்
|
|
சுருக்கமும் ஆக்கமும் சூள் உறல்!
வையைப்
|
|
பெருக்கு அன்றோ? பெற்றாய் பிழை.
|
75
|
அருகு பதியாக அம்பியின்
தாழ்ப்பிக்கும்,
|
|
குருகு இரை தேரக் கிடக்கும் பொழி
காரில்,
|
|
இன் இளவேனில், இது அன்றோ வையை?
நின்
|
|
வையை வயமாக வை.
|
|
செல் யாற்றுத் தீம் புனலில்
செல் மரம் போல,
|
80
|
வவ்வு வல்லார் புணை ஆகிய
மார்பினை;
|
|
என்னும் பனியாய் இரவெல்லாம்
வைகினை;
|
|
வையை உடைந்த மடை
அடைத்தக்கண்ணும்
|
|
பின்னும் மலிரும் பிசிர் போல,
இன்னும்
|
|
அனற்றினை துன்பு அவிய, நீ
அடைந்தக்கண்ணும்,
|
85
|
பனித்துப் பனி வாரும் கண்ணவர்
நெஞ்சம்
|
|
கனற்றுபு காத்தி, வரவு!'
|
|
|
|
'நல்லாள் கரை நிற்ப, நான்
குளித்த பைந் தடத்து,
|
|
நில்லாள் திரை மூழ்கி நீங்கி
எழுந்து, என்மேல்
|
|
அல்லா விழுந்தானை எய்தி, எழுந்து
ஏற்று யான்
|
90
|
கொள்ளா அளவை, எழும் தேற்றாள்:
கோதையின்
|
|
உள் அழுத்தியாள் எவளோ?
தோய்ந்தது யாது? என
|
|
|
|
தேறித் தெரிய உணர் நீ: பிறிதும்
ஓர்
|
|
யாறு உண்டோ? இவ் வையை யாறு.
|
|
தலைமகன் பின்னும் சூளுற்று உரைத்தமை
|
|
'இவ் வையை யாறு என்ற மாறு என்னை?
கையால்
|
95
|
தலை தொட்டேன், தண் பரங்குன்று!'
|
|
விறலிக்குத் தலைமகள் கூறுதல்
|
|
'சினவல்; நின் உண்கண் சிவப்பு
அஞ்சுவாற்குத்
|
|
துனி நீங்கி, ஆடல் தொடங்கு; துனி
நனி
|
|
கன்றிடின் காமம் கெடூஉம்; மகள்;
இவன்
|
|
அல்லா நெஞ்சம் உறப் பூட்டக்
காய்ந்தே
|
100
|
வல் இருள் நீயல்; அது பிழையாகும்'
என,
|
|
இல்லவர் ஆட, இரந்து பரந்து
உழந்து,
|
|
வல்லவர் ஊடல், உணர்த்தர,
நல்லாய்!
|
|
களிப்பர்; குளிப்பர்; காமம்
கொடி விட,
|
|
அளிப்ப, துனிப்ப, ஆங்காங்கு ஆடுப;
|
105
|
ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்து
அமைந்த காமம்
|
|
வாடற்க, வையை! நினக்கு.
|