|
|
|
திரை இரும் பனிப் பௌவம்
செவ்விதா அற முகந்து,
|
|
உர உரும் உடன்று ஆர்ப்ப, ஊர்
பொறை கொள்ளாது,
|
|
கரை உடை குளமெனக் கழன்று, வான்
வயிறு அழிபு,
|
|
வரைவரை தொடுத்த வயங்கு வெள்
அருவி
|
5
|
இரவு இருள் பகலாக, இடம் அரிது
செலவு என்னாது,
|
|
வலன் இரங்கு முரசின் தென்னவர்
உள்ளிய
|
|
நிலன் உற நிமிர் தானை நெடு நிரை
நிவப்பு அன்ன
|
|
பெயலாற் பொலிந்து, பெரும் புனல்
பல நந்த,
|
|
நலன் நந்த, நாடு அணி நந்த, புலன்
நந்த,
|
10
|
வந்தன்று, வையைப் புனல்.
|
|
|
|
நளி இருஞ் சோலை நரந்தம் தாஅய்,
|
|
ஒளிர் சினை வேங்கை விரிந்த
இணர் உதிரலொடு,
|
|
துளியின் உழந்த தோய்வு அருஞ்
சிமைதொறும்
|
|
வளி வாங்கு சினைய மா மரம் வேர்
கீண்டு,
|
15
|
உயர்ந்துழி உள்ளன பயம்பிடைப்
பரப்பி;
|
|
உழவர் களி தூங்க, முழவு பணை முரல,
|
|
ஆடல் அறியா அரிவை போலவும்,
|
|
ஊடல் அறியா உவகையள் போலவும்,
|
|
வேண்டு வழி நடந்து, தாங்கு தடை
பொருது;
|
20
|
விதி ஆற்றான் ஆக்கிய மெய்க்
கலவை போலப்
|
|
பொது நாற்றம் உள்உள் கரந்து, புது
நாற்றம்
|
|
செய்கின்றே, செம் பூம் புனல்.
|
|
வெள்ளப் பெருக்கைக் கண்ட மக்களின் செயல்
|
|
'கவிழ்ந்த புனலின் கயம் தண்
கழுநீர்
|
|
அவிழ்ந்த மலர் மீதுற்றென',
ஒருசார்;
|
25
|
மாதர் மடநல்லார், மணலின்
எழுதிய
|
|
பாவை சிதைத்தது' என அழ, ஒருசார்;
|
|
'அகவயல் இள நெல் அரிகால் சூடு
|
|
தொகு புனல் பரந்தெ'னத் துடி பட,
ஒருசார்;
|
|
'ஓதம் சுற்றியது ஊர்' என, ஒருசார்;
|
30
|
'கார் தூம்பு அற்றது வான்' என,
ஒருசார்;
|
|
'பாடுவார் பாக்கம் கொண்டென,
|
|
ஆடுவார் சேரி அடைந்தென,
|
|
கழனி வந்து கால் கோத்தென,
|
|
பழன வாளை பாளை உண்டென,
|
35
|
வித்து இடு புலம் மேடு ஆயிற்றென',
|
|
உணர்த்த உணரா ஒள் இழை மாதரைப்
|
|
புணர்த்திய இச்சத்துப்
பெருக்கத்தின் துனைந்து,
|
|
சினை வளர் வாளையின் கிளையொடு
கெழீஇ,
|
|
பழன உழவர், பாய் புனல்
பரத்தந்து.
|
|
|
40
|
இறு வரை புரையுமாறு இரு கரை ஏமத்து,
|
|
வரை புரை உருவின் நுரை பல சுமந்து,
|
|
பூ வேய்ந்து, பொழில் பரந்து;
|
|
துனைந்து ஆடுவார் ஆய் கோதையர்,
|
|
அலர் தண் தாரவர், காதில்
|
45
|
தளிர் செரீஇ, கண்ணி பறித்து;
|
|
கை வளை, ஆழி, தொய்யகம், புனை
துகில்,
|
|
மேகலை, காஞ்சி, வாகுவலயம்,
|
|
எல்லாம் கவரும் இயல்பிற்றாய்:
தென்னவன்
|
|
ஒன்னார் உடை புலம் புக்கற்றால்
மாறு அட்ட
|
50
|
தானையான் வையை வனப்பு.
|
|
தோழி புனலணி இன்பம் கூறுதல்
|
|
புரிந்த தகையினான் யாறு ஆடுவாருள்
|
|
துரந்து புனல் தூவ, தூ மலர்க்
கண்கள்
|
|
அமைந்தன; ஆங்கண், அவருள்
ஒருத்தி,
|
|
கை புதைஇய வளை
|
55
|
ஏக்கழுத்து நாணான் கரும்பின் அணை
மென் தோள்
|
|
போக்கிச் சிறைப்பிடித்தாள்;
ஓர் பொன் அம் கொம்பு
|
|
பரிந்து அவளைக் கைப் பிணை
நீக்குவான் பாய்வாள்;
|
|
இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும்
கண் ஒளியால்
|
|
செம்மைப் புதுப் புனல் சென்று
இருளாயிற்றே;
|
60
|
வையைப் பெருக்கு வடிவு.
|
|
தோழி தலைமகன் காதன்மை கூறுதல்
|
|
விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர,
|
|
சுரும்பு ஆர்க்கும் சூர் நறா
ஏந்தினாள் கண் நெய்தல்;
|
|
பேர் மகிழ் செய்யும் பெரு நறாப்
பேணியவே,
|
|
கூர் நறா ஆர்ந்தவள் கண்.
|
65
|
கண் இயல் கண்டு ஏத்தி, காரிகை
நீர் நோக்கினைப்
|
|
பாண் ஆதரித்துப் பல பாட; அப்
பாட்டுப்
|
|
பேணாது ஒருத்தி பேதுற; ஆயிடை,
|
|
'என்னை வருவது எனக்கு?' என்று,
இனையா,
|
|
நன் ஞெமர் மார்பன் நடுக்குற,
நண்ணி;
|
70
|
சிகை கிடந்த ஊடலின் செங் கண்
சேப்பு ஊர,
|
|
வகை தொடர்ந்த ஆடலுள்
நல்லவர்தம்முள்
|
|
பகை தொடர்ந்து, கோதை பரியூஉ,
நனி வெகுண்டு,
|
|
யாறு ஆடு மேனி அணி கண்ட தன்
அன்பன்
|
|
சேறு ஆடு மேனி திருநிலத்து உய்ப்ப,
சிரம் மிதித்து,
|
75
|
தீர்விலதாகச் செருவுற்றாள்
செம் புனல்
|
|
ஊருடன் ஆடுங்கடை.
|
|
தோழி வையையின் நீரணியின்பம் குறித்துக் கூறுதல்
|
|
புரி நரம்பு இன் கொளைப் புகல்
பாலை ஏழும்
|
|
எழூஉப் புணர் யாழும், இசையும், கூட;
|
|
குழல் அளந்து நிற்ப; முழவு எழுந்து
ஆர்ப்ப;
|
80
|
மன் மகளிர், சென்னியர், ஆடல்
தொடங்க;
|
|
பொருது இழி வார் புனல் பொற்பு
அஃது
|
|
உரும் இடி சேர்ந்த முழக்கம்
புரையும்
|
|
திருமருதமுன்துறை சேர் புனற்கண்
துய்ப்பார்
|
|
தாமம் தலை புனை பேஎம் நீர்
வையை!
|
85
|
நின் பயம் பாடி விடிவுற்று ஏமாக்க
|
|
நின் படிந்து நீங்காமை இன்று
புணர்ந்தெனவே.
|