|
திருப்பரங்குன்றத்தின் அமைப்பும் சிறப்பும்
|
|
மண்மிசை அவிழ்துழாய் மலர்தரு
செல்வத்துப்
|
|
புள்மிசைக் கொடியோனும்,
புங்கவம் ஊர்வோனும்,
|
|
மலர்மிசை முதல்வனும், மற்று
அவனிடைத் தோன்றி
|
|
உலகு இருள் அகற்றிய பதின்மரும்,
இருவரும்,
|
5
|
மருந்து உரை இருவரும், திருந்து நூல்
எண்மரும்,
|
|
ஆதிரை முதல்வனின் கிளந்த
|
|
நாதர் பன்னொருவரும், நன் திசை
காப்போரும்,
|
|
யாவரும், பிறரும், அமரரும்,
அவுணரும்,
|
|
மேஅரு முதுமொழி விழுத் தவ
முதல்வரும்
|
10
|
பற்றாகின்று, நின் காரணமாக;
|
|
பரங்குன்று இமயக் குன்றம்
நிகர்க்கும்.
|
|
இமயக் குன்றினில் சிறந்து
|
|
நின் ஈன்ற நிரை இதழ்த் தாமரை
|
|
மின் ஈன்ற விளங்கு இணர் ஊழா
|
15
|
ஒருநிலைப் பொய்கையோடு ஒக்கும்
நின் குன்றின்
|
|
அருவி தாழ் மாலைச் சுனை.
|
|
முதல்வ! நின் யானை முழக்கம்
கேட்ட
|
|
கதியிற்றே காரின் குரல்.
|
|
குரல் கேட்ட கோழி குன்று அதிரக்
கூவ,
|
20
|
மத நனி வாரணம் மாறுமாறு
அதிர்ப்ப,
|
|
எதிர்குதிர் ஆகின்று அதிர்ப்பு,
மலை முழை.
|
|
குன்றத்திற்கும் கூடலுக்கும் இடையிலுள்ள வழி
|
|
ஏழ் புழை ஐம் புழை யாழ் இசை
கேழ்த்து அன்ன, இனம்
|
|
வீழ் தும்பி வண்டொடு மிஞிறு
ஆர்ப்ப, சுனை மலர,
|
|
கொன்றை கொடி இணர் ஊழ்ப்ப,
கொடி மலர்
|
25
|
மன்றல மலர, மலர் காந்தள் வாய்
நாற,
|
|
நன்று அவிழ் பல் மலர் நாற, நறை
பனிப்ப,
|
|
தென்றல் அசைவரூஉம் செம்மற்றே
அம்ம! நின்
|
|
குன்றத்தான் கூடல் வரவு.
|
|
|
|
குன்றம் உடைத்த ஒளிர் வேலோய்!
கூடல்
|
30
|
மன்றல் கலந்த மணி முரசின்
ஆர்ப்பு எழ,
|
|
காலொடு மயங்கிய கலிழ் கடலென,
|
|
மால் கடல் குடிக்கும் மழை குரலென,
|
|
ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும்
உருமென,
|
|
மன்றல் அதிரதிர மாறுமாறு
அதிர்க்கும் நின்
|
35
|
குன்றம் குமுறிய உரை.
|
|
தலைமகன் தலைமகட்குக் குன்றத்தின் சிறப்பு கூறுதல்
|
|
'தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு
அவர்
|
|
காதல் மூதூர் மதில்
கம்பலைத்தன்று;
|
|
வடு வகிர் வென்ற கண், மாந்
தளிர் மேனி,
|
|
நெடு மென் பணைத் தோள், குறுந்
தொடி, மகளிர்
|
40
|
ஆராக் காமம், ஆர் பொழிற்
பாயல்,
|
|
வரையகத்து, இயைக்கும் வரையா
நுகர்ச்சி;
|
|
முடியா நுகர்ச்சி முற்றாக் காதல்,
|
|
அடியோர் மைந்தர் அகலத்து அகலா
|
|
அலர் ஞெமல் மகன்றில் நன்னர்ப்
புணர்ச்சி,
|
45
|
புலரா மகிழ்; மறப்பு அறியாது
நல்கும்
|
|
சிறப்பிற்றே தண் பரங்குன்று.'
|
|
|
|
'இனி, மன்னும் ஏதிலர் நாறுதி;
ஆண்டுப்
|
|
பனி மலர்க் கண்ணாரோடு ஆட நகை
மலர்
|
|
மாலைக்கு மாலை வரூஉம்; வரை சூள்
நில்
|
50
|
காலை போய் மாலை வரவு.'
|
|
தலைமகன் சூளும் தலைவி விலக்கலும்
|
|
'இனி மணல் வையை இரும் பொழிலும்,
குன்றப்
|
|
பனி பொழி சாரலும்
பார்ப்பாரும்;...
|
|
துனியல், மலருண்கண்! சொல் வேறு;
நாற்றம்
|
|
கனியின் மலரின் மலிர் கால்
சீப்பு இன்னது;
|
55
|
துனியல் நனி' 'நீ நின் சூள்.'
|
|
தோழி தலைமகனைச் சூள் விலக்கிக் கூறுதல்
|
|
'என் பாணி நில் நில் எலாஅ! பாணி
நீ, நின் சூள்:
|
|
சான்றாளர் ஈன்ற தகாஅத் தகாஅ
மகாஅன்!
|
|
ஈன்றாட்கு ஒரு பெண், இவள்.
|
|
"இருள் மை ஈர் உண் கண் இலங்கு
இழை ஈன்றாட்கு
|
60
|
அரியளோ? ஆவது அறிந்திலேன்;
ஈதா;
|
|
வரு புனல் வையை மணல் தொட்டேன்;
தரு மண வேள்
|
|
தண் பரங்குன்றத்து அடி
தொட்டேன்" என்பாய்;
|
|
கேளிர் மணலின் கெழுவும் இதுவோ?
|
|
ஏழ் உலகும் ஆளி திரு வரைமேல்
அன்பு அளிதோ?
|
65
|
என்னை அருளி அருள் முருகு சூள்
சூளின்,
|
|
நின்னை அருள் இல் அணங்கான்
மெய் வேல் தின்னும்:
|
|
விறல் வெய்யோன் ஊர் மயில்,
வேல் நிழல், நோக்கி;
|
|
அறவர் அடி தொடினும், ஆங்கு அவை
சூளேல்:
|
|
குறவன் மகள் ஆணை கூறு ஏலா! கூறேல்;
|
70
|
ஐய! சூளின், அடி தொடு குன்றொடு
|
|
வையைக்குத் தக்க மணல் சீர் சூள்
கூறல்!'
|
|
|
|
யார் பிரிய, யார் வர, யார்
வினவ, யார் செப்பு?
|
|
'நீர் உரைசெய் நீர்மை இல் சூள்
என்றி,' நேரிழாய்!
|
|
கய வாய நெய்தல் அலர், கமழ்முகை
மண நகை
|
75
|
நயவரு நறவு இதழ், மதர் உண்கண்;
வாள் நுதல்;
|
|
முகை முல்லை வென்று, எழில் முத்து
ஏய்க்கும் வெண்
|
|
பல் நகை சான்ற கனவு அன்று; நனவு
அன்று நவின்றதை:
|
|
இடு துனி கை ஆறா என், துயர் கூரச்
|
|
சுடும், இறை; ஆற்றிசின், அடி
சேர்ந்து! சாற்றுமின்
|
80
|
மிக ஏற்றுதும் மலர், ஊட்டுதும்
அவி,
|
|
கேட்டுதும் பாணி; எழுதும் கிணை
முருகன்
|
|
தாள் தொழு தண் பரங்குன்று!
|
|
தோழி தலைமகளின் கற்புடைமை கூறுதல்
|
|
'தெரி இழாய் செல்க!' என்றாய்;
எல்லா! யாம் பெற்றேம்,
|
|
ஒருவர்க்கும் பொய்யா நின் வாய்
இல் சூள் வௌவல்;
|
85
|
பருவத்துப் பல் மாண் நீ சேறலின்
காண்டை
|
|
எருமை இருந் தோட்டி எள்ளீயும்
காளை
|
|
செருவம் செயற்கு என்னை முன்னை,
தன் சென்னி,
|
|
அருள்வயினான், தூங்கு மணி கையால்
தாக்கி,
|
|
நிரைவளை ஆற்று, இருஞ் சூள்.
|
|
|
90
|
வளி பொரு சேண் சிமை
வரையகத்தால்
|
|
தளி பெருகும் தண் சினைய
|
|
பொழில் கொளக் குறையா மலர,
|
|
குளிர் பொய்கை அளறு நிறைய,
|
|
மருதம் நளி மணல் ஞெமர்ந்த
|
95
|
நனி மலர்ப் பெரு வழி,
|
|
சீறடியவர் சாறு கொள எழுந்து;
|
|
வேறுபடு சாந்தமும், வீறுபடு புகையும்,
|
|
ஆறு செல் வளியின் அவியா
விளக்கமும்,
|
|
நாறு கமழ் வீயும், கூறும் இசை
முழவமும்,
|
100
|
மணியும், கயிறும், மயிலும்,
குடாரியும்,
|
|
பிணிமுகம், உளப்படப் பிறவும்,
ஏந்தி;
|
|
அரு வரைச் சேராத் தொழுநர்,
|
|
'கனவின் தொட்டது கை பிழையாகாது
|
|
நனவின் சேஎப்ப நின் நளி புனல்
வையை
|
105
|
வரு புனல் அணிக' என வரம்
கொள்வோரும்,
|
|
'கரு வயிறு உறுக' எனக்
கடம்படுவோரும்,
|
|
'செய் பொருள் வாய்க்க' எனச்
செவி சார்த்துவோரும்,
|
|
'ஐ அமர் அடுக' என
அருச்சிப்போரும்,
|
|
பாடுவார் பாணிச் சீரும், ஆடுவார்
அரங்கத் தாளமும்,
|
110
|
மஞ்சு ஆடு மலை முழக்கும்,
|
|
துஞ்சாக் கம்பலை
|
|
பைஞ் சுனைப் பாஅய் எழு பாவையர்
|
|
ஆய் இதழ் உண்கண் அலர் முகத்
தாமரை,
|
|
தாட் தாமரை, தோட் தமனியக் கய
மலர்,
|
115
|
எம் கைப் பதுமம், கொங்கைக் கய
முகை,
|
|
செவ் வாய் ஆம்பல் செல் நீர்த்
தாமரை,
|
|
புனற் தாமரையொடு, புலம்
வேறுபாடுறாக்
|
|
கூர் எயிற்றார் குவிமுலைப்
பூணொடு,
|
|
மாரன் ஒப்பார் மார்பு அணி கலவி;
|
120
|
அரிவையர் அமிர்த பானம்
|
|
உரிமை மாக்கள் உவகை அமிர்து
உய்ப்ப;
|
|
மைந்தர் மார்வம் வழி வந்த,
|
|
செந் தளிர் மேனியார், செல்லல்
தீர்ப்ப;
|
|
|
|
என ஆங்கு,
|
125
|
உடம் புணர் காதலரும் அல்லாரும்
கூடி,
|
|
கடம்பு அமர் செல்வன் கடி நகர்
பேண
|
|
மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள்
தந்த
|
|
நெறி நீர் அருவி அசும்பு உறு
செல்வம்,
|
|
மண் பரிய வானம் வறப்பினும்,
மன்னுகமா,
|
130
|
தண் பரங்குன்றம்! நினக்கு.
|