|
|
|
இரு நிலம் துளங்காமை வடவயின்
நிவந்து ஓங்கி,
|
|
அரு நிலை உயர் தெய்வத்து
அணங்குசால் தலை காக்கும்,
|
|
உருமுச் சூழ் சேண் சிமை
உயர்ந்தவர் உடம்பட
|
|
எரி மலர்த் தாமரை இறை வீழ்த்த
பெரு வாரி
|
5
|
விரி சடைப் பொறை ஊழ்த்து, விழு
நிகர் மலர் ஏய்ப்ப,
|
|
தணிவுறத் தாங்கிய தனி நிலைச்
சலதாரி
|
|
மணி மிடற்று அண்ணற்கு, மதி ஆரல்
பிறந்தோய்! நீ.
|
|
மை இரு நூற்று இமை உண்கண் மான்
மறிதோள் மணந்த ஞான்று
|
|
ஐ இருநூற்று மெய்ந் நயனத்தவன்
மகள் மலர் உண்கண்,
|
15
|
மணி மழை தலைஇயென, மா வேனில்
கார் ஏற்று,
|
|
தணி மழை தலையின்று, தண்
பரங்குன்று.
|
|
தமிழது சிறப்பிற்குக் காரணம்
|
|
நான்மறை விரித்து, நல் இசை
விளக்கும்
|
|
வாய்மொழிப் புலவீர்!
கேண்மின், சிறந்தது:
|
|
காதற் காமம், காமத்துச்
சிறந்தது;
|
15
|
விருப்போர் ஒத்து மெய்யுறு
புணர்ச்சி:
|
|
புலத்தலின் சிறந்தது, கற்பே; அது
தான்
|
|
இரத்தலும் ஈதலும் இவை உள்ளீடாப்
|
|
பரத்தை உள்ளதுவே: பண்புறு கழறல்,
|
|
தோள் புதிது உண்ட பரத்தை இல்
சிவப்புற
|
20
|
நாள் அணிந்து, உவக்கும்
சுணங்கறையதுவே;
|
|
கேள் அணங்குற மனைக் கிளந்துள,
சுணங்கறை;
|
|
சுணங்கறைப் பயனும் ஊடல்
உள்ளதுவே.
|
|
அதனால், அகறல் அறியா அணி இழை
நல்லார்
|
|
இகல் தலைக்கொண்டு துனிக்கும்
தவறு இலர்; இத்
|
25
|
தள்ளாப் பொருள் இயல்பின் தண்
தமிழ் ஆய்வந்திலார்
|
|
கொள்ளார், இக் குன்று பயன்.
|
|
வள்ளியும் முருகனும் சிறந்தவாறு
|
|
ஊழ் ஆரத்து ஓய் கரை நூக்கி, புனல்
தந்த
|
|
காழ் ஆரத்து அம் புகை சுற்றிய
தார் மார்பின்,
|
|
கேழ் ஆரம் பொற்ப வருவானைத்
தொழாஅ,
|
30
|
'வாழிய, மாயா! நின் தவறு இலை; எம்
போலும்
|
|
கேழ் இலார் மாண் நலம் உண்கோ,
திரு உடையார்
|
|
மென் தோள்மேல் அல்கி நல்கலும்
இன்று?
|
|
வை எயிற்று எய்யா மகளிர் திறம்
இனிப்
|
|
பெய்ய உழக்கும், மழைக் கா; மற்று
ஐய!'
|
35
|
கரையா வெந் நோக்கத்தான் கை
சுட்டி, பெண்டின்
|
|
இகலின் இகந்தாளை, அவ் வேள்
தலைக் கண்ணி
|
|
திருந்து அடி தோயத் திறை
கொடுப்பானை,
|
|
'வருந்தல்' என, அவற்கு மார்பு
அளிப்பாளை,
|
|
'குறுகல்' என்று ஒள்ளிழை கோதை
கோலாக
|
40
|
இறுகிறுக யாத்துப் புடைப்ப;
|
|
ஒருவர் மயில் ஒருவர் ஒண்
மயிலோடு ஏல,
|
|
இருவர் வான் கிளி ஏற்பில் மழலை,
|
|
செறி கொண்டைமேல் வண்டு சென்று
பாய்ந்தன்றே,
|
|
வெறி கொண்டான் குன்றத்து வண்டு.
|
|
வள்ளியின் பாங்கியரும் தேவசேனையின் பாங்கியரும்
இகலுதல்
|
45
|
தார் தார் பிணக்குவார்; கண்ணி
ஓச்சித் தடுமாறுவார்;
|
|
மார்பு அணி கொங்கை வார்
மத்திகையாப் புடைப்பார்;
|
|
கோதை வரிப் பந்து கொண்டு
எறிவார்
|
|
பேதை மட நோக்கம் பிறிதாக, ஊத
|
|
நுடங்கு நொசி நுசுப்பார் நூழில்
தலைக்கொள்ள:
|
50
|
கயம்படு கமழ் சென்னிக் களிற்று
இயல் கைம்மாறுவார்;
|
|
வயம்படு பரிப் புரவி மார்க்கம்
வருவார்;
|
|
தேர் அணி மணி கயிறு தெரிபு
வருவார்;
|
|
வரி சிலை வளைய மார்பு உற
வாங்குவார்;
|
|
வாளி வாளிகள் நிலைபெற
மறலுவார்;
|
55
|
தோள் வளை ஆழி சுழற்றுவார்
|
|
மென் சீர் மயில் இயலவர்.
|
|
வாள் மிகு வய மொய்ம்பின்
|
|
வரை அகலத்தவனை வானவன் மகள்
|
|
மாண் எழில் மலர் உண்கண்
|
60
|
மட மொழியவர் உடன் சுற்றி,
|
|
கடி சுனையுள் குளித்து ஆடுநரும்,
|
|
அறை அணிந்த அருஞ் சுனையான்
|
|
நறவு உண் வண்டாய் நரம்பு
உளர்நரும்,
|
|
சிகை மயிலாய்த் தோகை விரித்து
ஆடுநரும்;
|
65
|
கோகுலமாய்க் கூவுநரும்,
|
|
ஆகுலம் ஆகுநரும்
|
|
குறிஞ்சிக் குன்றவர் மறம் கெழு
வள்ளி தமர்
|
|
வித்தகத் தும்பை விளைத்தலான்,
வென் வேலாற்கு
|
|
ஒத்தன்று, தண் பரங்குன்று.
|
|
|
70
|
கடுஞ் சூர் மா முதல் தடிந்து அறுத்த
வேல்
|
|
அடும் போராள! நின்
குன்றின்மிசை
|
|
ஆடல் நவின்றோர் அவர் போர்
செறுப்பவும்,
|
|
பாடல் பயின்றோரைப் பாணர்
செறுப்பவும்,
|
|
வல்லாரை வல்லார் செறுப்பவும்,
|
75
|
அல்லாரை அல்லார் செறுப்பவும்,
ஓர் சொல்லாய்,
|
|
செம்மைப் புதுப் புனல்
|
|
தடாகம் ஏற்ற தண் சுனைப்
பாங்கர்,
|
|
படாகை நின்றன்று;
|
|
மேஎ எஃகினவை;
|
80
|
வென்று உயர்த்த கொடி விறல்
சான்றவை;
|
|
கற்பு இணை நெறியூடு அற்பு இணைக்
கிழமை
|
|
நயத் தகு மரபின் வியத் தகு குமர!
|
|
வாழ்த்தினேம், பரவுதும்,
தாழ்த்துத் தலை, நினை யாம்
|
|
நயத்தலின் சிறந்த எம் அடியுறை,
|
85
|
பயத்தலின் சிறக்க, நாள்தொறும்
பொலிந்தே.
|