|
மழை பொழிய வையையின் நீர் பெருகி ஓடுதல்
|
|
'விரி கதிர் மதியமொடு, வியல்
விசும்பு, புணர்ப்ப,
|
|
எரி, சடை, எழில் வேழம்,
தலையெனக் கீழ் இருந்து,
|
|
தெரு இடைப்படுத்த மூன்று
ஒன்பதிற்று இருக்கையுள்
|
|
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல்
சேர,
|
5
|
வருடையைப் படிமகன் வாய்ப்ப,
பொருள் தெரி
|
|
புந்தி மிதுனம் பொருந்த, புலர்
விடியல்
|
|
அங்கி உயர் நிற்ப, அந்தணன்
பங்குவின்
|
|
இல்லத் துணைக்கு உப்பால் எய்த,
இறை யமன்
|
|
வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு
ஒல்லை
|
10
|
மதியம் மறைய, வரு நாளில்
வாய்ந்த
|
|
பொதியில் முனிவன் புரை வரைக்
கீறி
|
|
மிதுனம் அடைய, விரி கதிர்
வேனில்
|
|
எதிர் வரவு மாரி இயைக' என இவ்
ஆற்றால்
|
|
புரை கெழு சையம் பொழி மழை தாழ,
|
15
|
நெரிதரூஉம் வையைப் புனல்.
|
|
தோழி திருமருதத் துறையின் சிறப்புக் கூறுதல்
|
|
'வரையன புன்னாகமும்,
|
|
கரையன சுரபுன்னையும்,
|
|
வண்டு அறைஇய சண்பக நிரை, தண்
பதம்
|
|
மனைமாமரம் வாள்வீரம்,
|
20
|
சினை வளர் வேங்கை, கணவிரி
காந்தள்,
|
|
தாய தோன்றி தீயென மலரா,
|
|
ஊதை அவிழ்த்த உடை இதழ் ஒள்
நீலம்,
|
|
வேய் பயில் சோலை அருவி
தூர்த்தரப்
|
|
பாய் திரை உந்தித் தருதலான்
ஆய் கோல்
|
25
|
வயவர் அரி மலர்த் துறை என்கோ?
|
|
அரி மலர் மீப் போர்வை, ஆரம்
தாழ் மார்பின்,
|
|
திரை நுரை மென் பொகுட்டுத் தேம்
மணச் சாந்தின்
|
|
அரிவையது தானை என்கோ? கள்
உண்ணூஉப்
|
|
பருகு படி மிடறு என்கோ? பெரிய
|
30
|
திருமருத நீர்ப் பூந் துறை.'
|
|
|
|
'ஆம் நாள் நிறை மதி அலர்தரு
பக்கம் போல்,
|
|
நாளின், நாளின், நளி வரைச்
சிலம்பு தொட்டு,
|
|
நிலவுப் பரந்தாங்கு, நீர் நிலம்
பரப்பி,
|
|
உலகு பயம் பகர; ஓம்பு பெரும்
பக்கம்
|
35
|
வழியது பக்கத்து அமரர் உண்டி
|
|
மதி நிறைவு அழிவதின், வரவு
சுருங்க;
|
|
எண் மதி நிறை, உவா இருள் மதி
போல
|
|
நாள் குறைபடுதல் காணுநர் யாரே?
|
|
சேண் இகந்து கல் ஊர்ந்த மாண்
இழை வையை!
|
40
|
வயத் தணிந்து ஏகு, நின் யாணர் இரு
நாள் பெற!
|
|
மா மயில் அன்னார், மறையில்
புணர் மைந்தர்,
|
|
காமம் கள விட்டு, கைகொள் கற்பு
உற்றென,
|
|
மல்லல் புனல் வையை! மா மலை
விட்டு, இருத்தல்
|
|
இல்லத்து நீ தனிச் சேறல்
இளிவரல்:'
|
45
|
என ஆங்கு
|
|
கடை அழிய நீண்டு அகன்ற
கண்ணாளைக் காளை
|
|
படையொடும் கொண்டு
பெயர்வானைச் சுற்றம்
|
|
இடை நெறித் தாக்குற்றது ஏய்ப்ப,
அடல் மதுரை
|
|
ஆடற்கு நீர் அமைந்தது, யாறு.
|
|
|
50
|
ஆற்று அணி, வெள் வாள்
விதிர்ப்போர், மிளிர்
|
|
குந்தம் ஏந்துவோர், கொள்வார்
கோல் கொள்ளக்
|
|
கொடித் திண் தேர் ஏறுவோர்,புள்
ஏர் புரவி பொலம்
|
|
படைக் கைம்மாவை வெள்ள நீர்
நீத்தத்துள் ஊர்பு
|
|
ஊர்பு உழக்குநரும், கண் ஆரும்
சாயற் கழித்
|
55
|
துரப்போரை வண்ண நீர் கரந்த
வட்டு விட்டு எறிவோரும்,
|
|
மணம் வரு மாலையின்
வட்டிப்போரைத்
|
|
துணி பிணர் மருப்பின் நீர்
எக்குவோரும்,
|
|
தெரி கோதை நல்லார் தம்
கேளிர்த் திளைக்கும்
|
|
உருகெழு தோற்றம் உரைக்குங்கால்,
நாளும்
|
60
|
பொரு களம் போலும் தகைத்தே பரி
கவரும்
|
|
பாய் தேரான் வையை அகம்.
|
|
|
|
நீர் அணி வெறி செறி மலர் உறு
கமழ் தண்
|
|
தார் வரை அகலத்து, அவ் ஏர் அணி
நேர் இழை
|
|
ஒளி திகழ் தகை வகை செறி பொறி
|
65
|
புனை வினைப் பொலங்
கோதையவரொடு,
|
|
பாகர் இறை வழை மது நுகர்பு, களி
பரந்து,
|
|
நாகரின் நல் வள வினை வயவு ஏற
நளி புணர்மார்,
|
|
காரிகை மது ஒருவரின் ஒருவர்
கண்ணின் கவர்புற,
|
|
சீர் அமை பாடற் பயத்தால்
கிளர் செவி தெவி,
|
70
|
உம்பர் உறையும் ஒளி கிளர் வான்
ஊர்பு ஆடும்
|
|
அம்பி கரவா வழக்கிற்றே, ஆங்கு
அதை.
|
|
கார் ஒவ்வா வேனில் கலங்கித்
தெளிவரல்,
|
|
நீர் ஒவ்வா வையை! நினக்கு.
|
|
|
|
கனைக்கும் அதிர்குரல் கார்
வானம் நீங்க,
|
75
|
பனிப் படு பைதல் விதலைப்
பருவத்து,
|
|
ஞாயிறு காயா நளி மாரிப் பின்
குளத்து,
|
|
மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை
|
|
விரிநூல் அந்தணர் விழவு
தொடங்க,
|
|
புரி நூல் அந்தணர் பொலம் கலம்
ஏற்ப,
|
80
|
'வெம்பாதாக, வியல் நில வரைப்பு!'
என
|
|
அம்பா ஆடலின் ஆய் தொடிக்
கன்னியர்,
|
|
முனித் துறை முதல்வியர் முறைமை
காட்ட,
|
|
பனிப் புலர்பு ஆடி, பரு மணல்
அருவியின்
|
|
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
|
85
|
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய
சிறப்பின்,
|
|
தையல் மகளிர் ஈர் அணி
புலர்த்தர,
|
|
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
|
|
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு
எழுந்து,
|
|
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின்
அவர், அவர்
|
90
|
தீ எரிப் பாலும் செறி தவம் முன்
பற்றியோ,
|
|
தாய் அருகா நின்று தவத் தைந்
நீராடுதல்?
|
|
நீ உரைத்தி, வையை நதி!
|
|
|
|
ஆயிடை, மா இதழ் கொண்டு, ஓர் மட
மாதர் நோக்கினாள்,
|
|
வேய் எழில் வென்று வெறுத்த
தோள்; நோக்கி,
|
95
|
சாய் இழை பிண்டித் தளிர்
காதில், தையினாள்;
|
|
பாய் குழை நீலம் பகலாகத்
தையினாள்;
|
|
'குவளைக் குழைக்காதின் கோலச்
செவியின்
|
|
இவள் செரீஇ, நான்கு விழி
படைத்தாள்' என்று
|
|
நெற்றி விழியா நிறை திலகம்
இட்டாளே,
|
100
|
கொற்றவை கோலம் கொண்டு, ஓர்
பெண்.
|
|
பவள வளை செறித்தாட் கண்டு,
அணிந்தாள், பச்சைக்
|
|
குவளைப் பசுந் தண்டு கொண்டு.
|
|
கல்லகாரப் பூவால் கண்ணி
தொடுத்தாளை,
|
|
'நில்லிகா!' என்பாள்போல்,
நெய்தல் தொடுத்தாளே
|
105
|
மல்லிகா மாலை வளாய்.
|
|
மகளிர் கருத்தும், வேண்டிக்கோடலும்
|
|
தண்டு தழுவா, தாவு நீர் வையையுள்,
|
|
கண்ட பொழுதில், கடும் புனல் கை
வாங்க,
|
|
நெஞ்சம் அவள் வாங்க, நீடு புணை
வாங்க,
|
|
நேரிழை நின்றுழிக் கண் நிற்ப,
நீர் அவன்
|
110
|
தாழ்வுழி உய்யாது தான் வேண்டும்
ஆறு உய்ப்ப;
|
|
ஆயத்துடன் நில்லாள் ஆங்கு அவன்
பின் தொடரூஉ,
|
|
தாய் அத் திறம் அறியாள்,
தாங்கி, 'தனிச் சேறல்;
|
|
ஆயத்தில் கூடு' என்று
அரற்றெடுப்பத் தாக்கிற்றே
|
|
சேய் உற்ற கார் நீர் வரவு.
|
115
|
'நீ தக்காய், தைந் நீர்! நிறம்
தெளிந்தாய்' என்மாரும்,
|
|
'"கழுத்து அமை கை வாங்காக்
காதலர்ப் புல்ல,
|
|
விழுத் தகை பெறுக!" என
வேண்டுதும்' என்மாரும்,
|
|
'பூ வீழ் அரியின் புலம்பப்
போகாது,
|
|
யாம் வீழ்வார், ஏமம் எய்துக!'
என்மாரும்,
|
120
|
'"கிழவர் கிழவியர்"
என்னாது, ஏழ்காறும்,
|
|
மழ ஈன்று மல்லற் கேள் மன்னுக!'
என்மாரும்
|
|
|
|
'கண்டார்க்குத் தாக்கு அணங்கு,
இக் காரிகை; காண்மின்:
|
|
பண்டாரம், காமன் படை, உவள் கண்;
காண்மின்:
|
|
நீல் நெய் தாழ் கோதையவர்
விலக்க நில்லாது,
|
125
|
பூ ஊது வண்டினம் யாழ் கொண்ட
கொளை கேண்மின்:
|
|
கொளைப் பொருள் தெரிதரக்
கொளுத்தாமல், குரல் கொண்ட
|
|
கிளைக்கு உற்ற உழைச் சுரும்பின்
கேழ் கெழு பாலை இசை
|
|
ஓர்மின்: பண் கண்டு திறன்
எய்தாப் பண் தாளம் பெறப்
|
|
பாடி, கொண்ட இன் இசைத் தாளம்
கொளை சீர்க்கும்
|
130
|
விரித்து ஆடும் தண் தும்பியினம்
காண்மின்: தான் வீழ் பூ
|
|
நெரித்தாளை முனை கெழு சின
நெஞ்சின் முன் எறிந்து,
|
|
பின்னும்,கனை வரல் ஒரு தும்பி
காய் சினத்து இயல் காண்மின்
|
|
என ஆங்கு
|
|
தலைமகன் கேட்ப, தோழி வையையை நோக்கிக் கூறுதல்
|
|
இன்ன பண்பின் நின் தைந்
நீராடல்
|
135
|
மின் இழை நறு நுதல் மகள்
மேம்பட்ட
|
|
கன்னிமை கனியாக் கைக்கிளைக்
காம
|
|
இன் இயல் மாண் தேர்ச்சி இசை
பரிபாடல்
|
|
முன் முறை செய் தவத்தின் இம் முறை
இயைந்தேம்;
|
|
மறு முறை அமையத்தும் இயைக!
|
140
|
நறு நீர் வையை நயத் தகு நிறையே!
|