|
முருகனது குன்றில் கார்காலத் தன்மை மிகுதல்
|
|
கார் மலி கதழ் பெயல் தலைஇ,
ஏற்ற
|
|
நீர் மலி நிறை சுனை பூ
மலர்ந்தனவே;
|
|
தண் நறுங் கடம்பின் கமழ் தாது
ஊதும்
|
|
வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை
போன்றனவே;
|
5
|
அடியுறைமகளிர் ஆடும் தோளே,
|
|
நெடு வரை அடுக்கத்து வேய்,
போன்றனவே;
|
|
வாகை ஒண் பூப் புரையும் முச்சிய
|
|
தோகை ஆர் குரல், மணந்து
தணந்தோரை,
|
|
'நீடன்மின் வாரும்' என்பவர்
சொல் போன்றனவே;
|
10
|
நாள் மலர்க் கொன்றையும்
பொலந் தார் போன்றன;
|
|
மெல் இணர் வேங்கை வியல் அறைத்
தாயின,
|
|
அழுகை மகளிர்க்கு உழுவை செப்ப;
|
|
நீர் அயல் கலித்த நெரி முகைக்
காந்தள்
|
|
வார் குலை அவிழ்ந்த வள் இதழ்
நிரைதொறும்,
|
15
|
விடு கொடிப் பிறந்த மென் தகைத்
தோன்றிப்
|
|
பவழத்து அன்ன செம் பூத் தாஅய்,
|
|
கார் மலிந்தன்று, நின் குன்று.
|
|
முருகனைப் புகழ்ந்து போற்றுதல்
|
|
போர் மலிந்து,
|
|
சூர் மருங்கு அறுத்த சுடர்
படையோயே!
|
20
|
கறை இல் கார் மழை பொங்கி அன்ன
|
|
நறையின் நறும் புகை நனி
அமர்ந்தோயே!
|
|
அறு முகத்து ஆறு இரு தோளால் வென்றி
|
|
நறு மலர் வள்ளிப் பூ நயந்தோயே!
|
|
கெழீஇக் கேளிர் சுற்ற, நின்னை
|
25
|
எழீஇப் பாடும் பாட்டு
அமர்ந்தோயே!
|
|
பிறந்த ஞான்றே, நின்னை
உட்கிச்
|
|
சிறந்தோர் அஞ்சிய சீர்
உடையோயே!
|
|
இரு பிறப்பு, இரு பெயர், ஈர
நெஞ்சத்து,
|
|
ஒரு பெயர், அந்தணர் அறன்
அமர்ந்தோயே!
|
|
|
30
|
அன்னை ஆகலின், அமர்ந்து யாம்
நின்னை,
|
|
துன்னித் துன்னி, வழிபடுவதன்
பயம்
|
|
இன்னும் இன்னும் அவை ஆகுக
|
|
தொன் முதிர் மரபின் நின்
புகழினும் பலவே!
|