|
|
|
கரையே கை வண் தோன்றல் ஈகை
போன்ம் என,
|
|
மை படு சிலம்பின் கறியொடும்,
சாந்தொடும்,
|
|
நெய் குடை தயிரின் நுரையொடும்,
பிறவொடும்,
|
|
எவ் வயினானும் மீதுமீது அழியும்.
|
5
|
துறையே முத்து நேர்பு புணர் காழ்,
மத்தக நித்திலம்,
|
|
பொலம் புனை அவிர் இழை, கலங்கல்
அம் புனல் மணி
|
|
வலம் சுழி உந்திய, திணை பிரி
புதல்வர்
|
|
கயந் தலை முச்சிய முஞ்சமொடு
தழீஇ,
|
|
தம்தம் துணையோடு ஒருங்கு உடன்
ஆடும்
|
10
|
தத்து அரிக் கண்ணார் தலைதலை
வருமே.
|
|
செறுவே விடு மலர் சுமந்து, பூ நீர்
நிறைதலின்,
|
|
படு கண் இமிழ் கொளை பயின்றனர்
ஆடும்,
|
|
களி நாள் அரங்கின் அணி நலம்
புரையும்.
|
|
காவே சுரும்பு இமிர் தாதொடு
தலைத்தலை மிகூஉம்
|
15
|
நரந்த நறு மலர் நன்கு
அளிக்கும்மே
|
|
கரைபு ஒழுகு தீம் புனற்கு எதிர்
விருந்து அயர்வ போல்.
|
|
கான் அல்அம் காவும், கயமும்,
துருத்தியும், தேன்
|
|
தேன் உண்டு பாடத் திசைதிசைப் பூ
நலம்
|
|
பூத்தன்று வையை வரவு.
|
|
தலைவன் காதற் பரத்தையுடன் கூடி மகிழ, வையையின் வரவு
வாய்த்தல்
|
20
|
சுருங்கையின் ஆயத்தார் சுற்றும்
எறிந்து,
|
|
குரும்பை முலைப் பட்ட பூ நீர்
துடையாள்,
|
|
பெருந் தகை மீளி வருவானைக்
கண்டே,
|
|
இருந் துகில் தானையின் ஒற்றி,
'பொருந்தலை;
|
|
பூத்தனள்; நீங்கு' எனப் பொய்
ஆற்றால், தோழியர்
|
25
|
தோற்றம் ஓர் ஒத்த மலர் கமழ்
தண் சாந்தின்
|
|
நாற்றத்தின் போற்றி,
நகையொடும் போத்தந்து,
|
|
இருங் கடற்கு ஊங்கு இவரும் யாறு
எனத் தங்கான்,
|
|
மகிழ, களிப் பட்ட தேன் தேறல்
மாற்றி,
|
|
குருதி துடையாக் குறுகி, மரு(வ),
இனியர்,
|
30
|
'பூத்தனள் நங்கை; பொலிக!' என
நாணுதல்
|
|
வாய்த்தன்றால் வையை வரவு.
|
|
வையை வானக் கங்கையை ஒத்து விளங்குதல்
|
|
மலையின் இழி அருவி மல்கு இணர்ச்
சார்ச் சார்க்
|
|
கரை மரம் சேர்ந்து கவினி;
மடவார்
|
|
நனை சேர் கதுப்பினுள் தண் போது,
மைந்தர்
|
35
|
மலர் மார்பின் சோர்ந்த மலர்
இதழ், தாஅய்;
|
|
மீன் ஆரம் பூத்த வியன் கங்கை
நந்திய
|
|
வானம் பெயர்ந்த மருங்கு ஒத்தல்,
எஞ்ஞான்றும்,
|
|
தேன் இமிர் வையைக்கு இயல்பு.
|
|
|
|
கள்ளே புனலே புலவி இம் மூன்றினும்,
|
40
|
ஒள் ஒளி சேய்தா ஒளி கிளர் உண்
கண் கெண்டை,
|
|
பல் வரி வண்டினம் வாய் சூழ்
கவினொடும்,
|
|
செல் நீர் வீவயின் தேன் சோர,
பல் நீர்
|
|
அடுத்துஅடுத்து ஆடுவார்ப் புல்ல,
குழைந்து
|
|
வடுப் படு மான்மதச் சாந்து ஆர்
அகலத்தான்,
|
45
|
எடுத்த வேய் எக்கி நூக்கு உயர்பு
தாக்கத்
|
|
தொடுத்த தேன் சோரும் வரை
போலும், தோற்றம்
|
|
கொடித் தேரான் வையைக்கு இயல்பு.
|
|
தோழி வையையை நோக்கிக் கூறுவாளாய் வாயில்
மறுத்தல்
|
|
வரை ஆர்க்கும் புயல்; கரை
|
|
திரை ஆர்க்கும், இத் தீம் புனல்;
|
50
|
கண்ணியர் தாரர், கமழ் நறுங்
கோதையர்,
|
|
பண்ணிய ஈகைப் பயன் கொள்வான்,
ஆடலால்
|
|
நாள் நாள், உறையும், நறுஞ்
சாந்தும், கோதையும்,
|
|
பூத்த புகையும், அவியும் புலராமை
|
|
மறாஅற்க, வானம்; மலிதந்து
நீத்தம்
|
55
|
வறாஅற்க, வையை! நினக்கு.
|