|
மாலைதோறும் பரங்குன்றைப் பரவி உறைபவர்
|
|
தேம் படு மலர், குழை, பூந் துகில்,
வடி மணி,
|
|
ஏந்து இலை சுமந்து; சாந்தம்
விரைஇ,
|
|
விடை அரை அசைத்த, வேலன்,
கடிமரம்
|
|
பரவினர் உரையொடு பண்ணிய
இசையினர்,
|
5
|
விரிமலர் மதுவின் மரம் நனை
குன்றத்து
|
|
கோல் எரி, கொளை, நறை, புகை,
கொடி, ஒருங்கு எழ
|
|
மாலை மாலை, அடி உறை, இயைநர்,
|
|
மேலோர் உறையுளும் வேண்டுநர்
யாஅர்?
|
|
மாறுமாறு எழும் பல்வேறு ஓசைகளை உடையது பரங்குன்றம்
|
|
ஒருதிறம், பாணர் யாழின் தீங்
குரல் எழ,
|
10
|
ஒருதிறம், யாணர் வண்டின் இமிர்
இசை எழ,
|
|
ஒருதிறம், கண் ஆர் குழலின் கரைபு
எழ,
|
|
ஒருதிறம், பண் ஆர் தும்பி பரந்து
இசை ஊத,
|
|
ஒருதிறம், மண் ஆர் முழவின் இசை
எழ,
|
|
ஒருதிறம், அண்ணல் நெடு வரை அருவி
நீர் ததும்ப,
|
15
|
ஒருதிறம், பாடல் நல் விறலியர்
ஒல்குபு நுடங்க,
|
|
ஒருதிறம், வாடை உளர்வயின் பூங்
கொடி நுடங்க,
|
|
ஒருதிறம், பாடினி முரலும் பாலை அம்
குரலின்
|
|
நீடுகிளர் கிழமை நிறை குறை
தோன்ற,
|
|
ஒருதிறம், ஆடு சீர் மஞ்ஞை அரி
குரல் தோன்ற,
|
20
|
மாறுமாறு உற்றன போல் மாறு எதிர்
கோடல்
|
|
மாறு அட்டான் குன்றம் உடைத்து.
|
|
பரங்குன்றிற்கும் கூடலுக்கும் இடைப்பட்ட நிலம்
|
|
பாடல் சான்று பல் புகழ் முற்றிய
|
|
கூடலொடு பரங்குன்றின் இடை,
|
|
கமழ் நறுஞ் சாந்தின் அவரவர்
திளைப்ப,
|
25
|
நணிநணித்து ஆயினும், சேஎய்ச்
சேய்த்து;
|
|
மகிழ் மிகு தேஎம் கோதையர்
கூந்தல் குஞ்சியின்
|
|
சோர்ந்து அவிழ் இதழின்
இயங்கும் ஆறு இன்று.
|
|
வசை நீங்கிய வாய்மையால்,
வேள்வியால்,
|
|
திசை நாறிய குன்று அமர்ந்து,
ஆண்டுஆண்டு
|
30
|
ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை
|
|
வாய்வாய் மீ போய், உம்பர்
இமைபு இறப்ப;
|
|
தேயா மண்டிலம் காணுமாறு இன்று.
|
|
|
|
வளை முன் கை வணங்கு இறையார்,
|
|
அணை மென் தோள் அசைபு ஒத்தார்
|
35
|
தார் மார்பின் தகை இயலார்,
|
|
ஈர மாலை இயல் அணியார்,
|
|
மனம் மகிழ் தூங்குநர் பாய்பு
உடன் ஆட,
|
|
சுனை மலர்த் தாது ஊதும் வண்டு ஊதல்
எய்தா:
|
|
அனைய, பரங்குன்றின் அணி.
|
|
தெய்வ விழவும் விருந்தயர்வும்
|
40
|
கீழோர் வயல் பரக்கும், வார்
வெள் அருவி பரந்து ஆனாது
|
|
அரோ;மேலோர் இயங்குதலால்,
வீழ் மணி நீலம் செறு
|
|
உழக்கும் அரோ;தெய்வ விழவும்,
திருந்து விருந்து அயர்வும்,
|
|
அவ் வெள் அருவி அணி பரங்
குன்றிற்கும்,
|
|
தொய்யா விழுச் சீர் வளம் கெழு
வையைக்கும்,
|
45
|
கொய் உளை மான் தேர்க் கொடித்
தேரான் கூடற்கும்,
|
|
கை ஊழ் தடுமாற்றம் நன்று.
|
|
முருகனை எதிர் முகமாக்கி வாழ்த்துதல்
|
|
என ஆங்கு,
|
|
மணி நிற மஞ்ஞை ஓங்கிய புட்
கொடி,
|
|
பிணிமுகம் ஊர்ந்த வெல் போர்,
இறைவ!
|
50
|
பணி ஒரீஇ, நின் புகழ் ஏத்தி,
|
|
அணி நெடுங் குன்றம் பாடுதும்;
தொழுதும்;
|
|
அவை யாமும் எம் சுற்றமும் பரவுதும்
|
|
ஏம வைகல் பெறுக, யாம் எனவே.
|