|
இமயத்தொடு நிகர்க்கும் குன்று
|
|
போர் எதிர்ந்து ஏற்றார் மதுகை
மதம் தப,
|
|
கார் எதிர்ந்து ஏற்ற கமஞ் சூல்
எழிலிபோல்,
|
|
நீர் நிரந்து ஏற்ற நிலம் தாங்கு
அழுவத்து,
|
|
சூர், நிரந்து சுற்றிய, மா தபுத்த
வேலோய்! நின்
|
5
|
சீர் நிரந்து ஏந்திய குன்றொடு
நேர் நிரந்து,
|
|
ஏறுமாறு ஏற்கும் இக் குன்று.
|
|
தலைமகன் ஊடல் உணர்ப்பிக்கும் திறம்
|
|
ஒள் ஒளி மணிப் பொறி ஆல் மஞ்ஞை
நோக்கித் தன்
|
|
உள்ளத்து நினைப்பானைக்
கண்டனள், திரு நுதலும்:
|
|
'உள்ளியது உணர்ந்தேன்; அஃது உரை;
இனி, நீ எம்மை
|
10
|
எள்ளுதல் மறைத்தல் ஓம்பு'
என்பாளைப் பெயர்த்து,
|
|
அவன் 'காதலாய்! நின் இயல் களவு
எண்ணிக் களி மகிழ்
|
|
பேதுற்ற இதனைக் கண்டு, யான்
நோக்க, நீ எம்மை
|
|
ஏதிலா நோக்குதி' என்று, ஆங்கு
உணர்ப்பித்தல்
|
|
ஆய் தேரான் குன்ற இயல்பு.
|
|
பாணனுக்குத் தலைமகனது பரத்தைமை பற்றிக் கூறும்
தலைமகளின் கூற்று
|
15
|
ஐ வளம் பூத்த அணி திகழ்
குன்றின்மேல்,
|
|
மை வளம் பூத்த மலர் ஏர் மழைக்
கண்ணார்,
|
|
கை வளம் பூத்த வடுவொடு, காணாய்
நீ?
|
|
மொய் வளம் பூத்த முயக்கம், யாம்
கைப்படுத்தேம்:
|
|
மெய் வளம் பூத்த விழை தகு பொன்
அணி
|
20
|
நை வளம் பூத்த நரம்பு இயை சீர்ப்
பொய் வளம
|
|
பூத்தன பாணா! நின் பாட்டு.
|
|
பரங்குன்றத்திலுள்ள அம்பலம்
|
|
தண் தளிர் தருப் படுத்து, எடுத்து
உரைஇ,
|
|
மங்குல் மழை முழங்கிய விறல்
வரையால்,
|
|
கண் பொருபு சுடர்ந்து, அடர்ந்து,
இடந்து,
|
25
|
இருள் போழும் கொடி மின்னால்
|
|
வெண் சுடர் வேல் வேள்! விரை
மயில் மேல் ஞாயிறு! நின்
|
|
ஒண் சுடர் ஓடைக் களிறு ஏய்க்கும்
நின் குன்றத்து,
|
|
எழுது எழில் அம்பலம் காமவேள்
அம்பின்
|
|
தொழில் வீற்றிருந்த நகர்.
|
|
|
30
|
ஆர் ததும்பும் அயில் அம்பு நிறை
நாழி
|
|
சூர் ததும்பு வரைய காவால்,
|
|
கார் ததும்பு நீர் ததும்புவன சுனை,
|
|
ஏர் ததும்புவன பூ அணி செறிவு.
|
|
போர் தோற்றுக் கட்டுண்டார் கை
போல்வ கார் தோற்றும்
|
35
|
காந்தள், செறிந்த கவின்,
|
|
கவின் முகை, கட்டு அவிழ்ப்ப,
தும்பி; கட்டு யாழின்
|
|
புரி நெகிழ்ப்பார் போன்றன கை.
|
|
அச்சிரக்கால் ஆர்த்து அணி மழை
கோலின்றே,
|
|
வச்சிரத்தான் வான வில்லு.
|
|
|
40
|
வில்லுச் சொரி பகழியின் மென்
மலர் தாயின
|
|
வல்லுப் போர் வல்லாய்!
மலைமேல் மரம்.
|
|
வட்டு உருட்டு வல்லாய்! மலைய
நெட்டுருட்டுச்
|
|
சீர் ததும்பும் அரவமுடன் சிறந்து,
|
|
போர் ததும்பும் அரவம் போல,
|
45
|
கருவி ஆர்ப்ப, கருவி நின்றன
குன்றம்.
|
|
அருவி ஆர்ப்ப, முத்து அணிந்தன,
வரை;
|
|
குருவி ஆர்ப்ப, குரல் குவிந்தன,
தினை;
|
|
எருவை கோப்ப, எழில் அணி
திருவில்
|
|
வானில் அணித்த, வரி ஊதும் பல்
மலரால்,
|
50
|
கூனி வளைத்த சுனை.
|
|
|
|
புரி உறு நரம்பும் இயலும் புணர்ந்து,
|
|
சுருதியும் பூவும் சுடரும் கூடி,
|
|
எரி உருகு அகிலோடு ஆரமும் கமழும்,
|
|
செரு வேற் தானைச் செல்வ! நின்
அடி உறை,
|
55
|
உரிதினின் உறை பதிச்
சேர்ந்தாங்கு,
|
|
பிரியாது இருக்க எம் சுற்றமோடு
உடனே!
|