|
வள்ளியை முருகன் வதுவை கொண்டது
|
|
நில வரை அழுவத்தான் வான் உறை
புகல் தந்து,
|
|
புல வரை அறியாத புகழ் பூத்த கடம்பு
அமர்ந்து,
|
|
'அரு முனி மரபின் ஆன்றவர்
நுகர்ச்சி மன்
|
|
இரு நிலத்தோரும் இயைக!' என, ஈத்த
நின்
|
5
|
தண் பரங்குன்றத்து, இயல் அணி,
நின் மருங்கு
|
|
சாறு கொள் துறக்கத்தவளொடு
|
|
மாறு கொள்வது போலும்,
மயிற்கொடி வதுவை.
|
|
கூடலார் பரங்குன்றை நோக்கி விடியலில் யாத்திரை
செய்கின்ற வழி
|
|
புலத்தினும் போரினும் போர்
தோலாக் கூடல்,
|
|
கலப்போடு இயைந்த இரவுத் தீர்
எல்லை,
|
10
|
அறம் பெரிது ஆற்றி, அதன் பயன்
கொண்மார்,
|
|
சிறந்தோர் உலகம் படருநர்
போல,
|
|
உரி மாண் புனை கலம் ஒண் துகில்
தாங்கி,
|
|
புரி மாண் புரவியர், போக்கு அமை
தேரர்,
|
|
தெரி மலர்த் தாரர், தெரு இருள்
சீப்ப, நின்
|
15
|
குன்றொடு கூடல் இடையெல்லாம்
ஒன்றுபு
|
|
நேர் பூ நிறை பெய்து இரு நிலம்
பூட்டிய
|
|
தார் போலும், மாலைத் தலை
நிறையால் தண் மணல்
|
|
ஆர் வேலை யாத்திரை செல் யாறு.
|
|
பாண்டியன் தன் பரிவாரங்களுடன் பரங்குன்றை
வலம் வரும் காட்சி
|
|
சுடரொடு சூழ்வரு தாரகை மேருப்
|
20
|
புடை வரு சூழல் புலம் மாண் வழுதி
|
|
மட மயில் ஓரும் மனையவரோடும்,
|
|
கடன் அறி காரியக் கண்ணவரோடும்
நின்
|
|
சூர் உறை குன்றின் தட வரை ஏறி
மேல்
|
|
பாடு வலம் திரி பண்பின் பழ
மதிச்
|
25
|
சூடி அசையும் சுவல்மிசைத்
தானையின்,
|
|
பாடிய நாவின், பரந்த உவகையின்,
|
|
நாடும் நகரும் அடைய
அடைந்தனைத்தே,
|
|
படு மணி யானை நெடியாய்! நீ மேய
|
|
கடி நகர் சூழ் நுவலுங்கால்.
|
|
குன்றின் கீழுள்ள இடை நிலம் பாசறையை ஒத்து
விளங்கியமை
|
30
|
தும்பி தொடர் கதுப்ப தும்பி
தொடர் ஆட்டி,
|
|
வம்பு அணி பூங் கயிற்று வாங்கி,
மரன் அசைப்பார்
|
|
வண் தார்ப் புரவி வழி நீங்க
வாங்குவார்;
|
|
திண் தேர் வழியின் செல
நிறுப்பார் கண்டக்
|
|
கரும்பு கவழம் மடுப்பார்; நிரந்து
|
35
|
பரி நிமிர் தானையான் பாசறை
நீர்த்தே,
|
|
குருகு எறி வேலோய்! நின் குன்றக்
கீழ் நின்ற
|
|
இடை நிலம்: யாம் ஏத்தும் ஆறு!
|
|
மலைச் சிறப்பு
வழுதியுடன் ஏறியோர் கண்டவை
|
|
குரங்கு அருந்து பண்ணியம்
கொடுப்போரும்,
|
|
கரும்பு கருமுகக் கணக்கு
அளிப்போரும்,
|
40
|
தெய்வப் பிரமம் செய்குவோரும்,
|
|
கை வைத்து இமிர்பு குழல்
காண்குவோரும்,
|
|
யாழின் இளி குரல் சமம்
கொள்வோரும்,
|
|
வேள்வியின் அழகு இயல்
விளம்புவோரும்;
|
|
கூர நாண் குரல் கொம்மென ஒலிப்ப,
|
45
|
ஊழ் உற முரசின் ஒலி செய்வோரும்;
|
|
என்றூழ் உற வரும் இரு சுடர் நேமி
|
|
ஒன்றிய சுடர்நிலை உள்படுவோரும்,
|
|
'இரதி காமன், இவள் இவன்' எனாஅ,
|
|
விரகியர் வினவ, வினா
இறுப்போரும்;
|
50
|
'இந்திரன், பூசை: இவள் அகலிகை;
இவன்
|
|
சென்ற கவுதமன்; சினன் உறக் கல்
உரு
|
|
ஒன்றிய படி இது' என்று
உரைசெய்வோரும்:
|
|
இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம்,
|
|
துன்னுநர் சுட்டவும், சுட்டு
அறிவுறுத்தவும்,
|
55
|
நேர் வரை விரி அறை வியல் இடத்து
இழைக்கச்
|
|
சோபன நிலையது துணி பரங்குன்றத்து
|
|
மாஅல் மருகன் மாட மருங்கு.
|
|
குன்றில் சுற்றத்தாரை விட்டுப் பிரிந்த சிறுமி
|
|
பிறந்த தமரின் பெயர்ந்து, ஒரு
பேதை,
|
|
பிறங்கல் இடைஇடைப் புக்குப்
பிறழ்ந்து, 'யான்
|
60
|
வந்த நெறியும் மறந்தேன்;
சிறந்தவர்
|
|
ஏஎ, ஓஒ!' என விளி ஏற்பிக்க,
|
|
'ஏஎ, ஓஒ!' என்று ஏலா அவ் விளி
|
|
அவ் இசை முழை ஏற்று அழைப்ப,
அழைத்துழிச்
|
|
செல்குவள் ஆங்குத் தமர்க்
காணாமை
|
65
|
மீட்சியும், கூஉக் கூஉ மேவும்
மடமைத்தே
|
|
வாழ்த்து உவப்பான் குன்றின்
வகை.
|
|
|
|
நனி நுனி நயவரு சாய்ப்பின் நாறு
இணர்ச்
|
|
சினை போழ் பல்லவம் தீம் சுனை
உதிர்ப்ப,
|
|
உதிர்த்த சுனையின் எடுத்த தலைய
|
70
|
அலர் முகிழ் உற, அவை கிடப்ப,
|
|
'தெரி மலர், நனை, உறுவ,
|
|
ஐந் தலை அவிர் பொறி அரவம்;
மூத்த
|
|
மைந்தன்; அருகு ஒன்று மற்று இளம்
பார்ப்பு' என
|
|
ஆங்கு இள மகளிர் மருள
|
|
குன்றம் விடியல் வானம் போலப் பொலிதல்
பாங்கர்,
|
75
|
பசும்பிடி இள முகிழ், நெகிழ்ந்த
வாய் ஆம்பல்,
|
|
கைபோல் பூத்த கமழ் குலைக்
காந்தள்,
|
|
எருவை நறுந் தோடு, எரி இணர்
வேங்கை,
|
|
உருவம் மிகு தோன்றி, ஊழ் இணர்
நறவம்,
|
|
பருவம் இல் கோங்கம், பகை மலர்
இலவம்;
|
80
|
நிணந்தவை, கோத்தவை, நெய்தவை,
தூக்க
|
|
மணந்தவை, போல, வரை மலை
எல்லாம்
|
|
நிறைந்தும், உறழ்ந்தும்,
நிமிர்ந்தும், தொடர்ந்தும்;
|
|
விடியல் வியல் வானம் போலப்
பொலியும்
|
|
நெடியாய்! நின் குன்றின்மிசை.
|
|
கன்னிமை கனிந்தாரும் மணமான மகளிரும்
தாம் செய்யும் பூசையில் யானையின் மிச்சிலை
உண்ணுதல்
|
85
|
நின யானைச் சென்னி நிறம்
குங்குமத்தால்
|
|
புனையா, பூ நீர் ஊட்டி, புனை கவரி
சார்த்தா,
|
|
பொற் பவழப் பூங் காம்பின்
பொற்குடை ஏற்றி,
|
|
மலிவுடை உள்ளத்தான் வந்து செய்
வேள்வியுள்,
|
|
பல் மணம் மன்னு பின் இருங்
கூந்தலர்,
|
90
|
கன்னிமை கனிந்த காலத்தார்,
நின்
|
|
கொடி ஏற்று வாரணம் கொள் கவழ
மிச்சில்
|
|
மறு அற்ற மைந்தர் தோள்
எய்தார்; மணந்தார்
|
|
முறுவல் தலையளி எய்தார் நின்
குன்றம்
|
|
குறுகிச் சிறப்பு உணாக்கால்.
|
|
முருகப் பெருமானை வாழ்த்துதல்
|
95
|
குறப் பிணாக் கொடியைக்
கூடியோய்! வாழ்த்துச்
|
|
சிறப்பு உணாக் கேட்டி செவி.
|
|
உடையும் ஒலியலும் செய்யை; மற்று
ஆங்கே
|
|
படையும் பவழக் கொடி நிறம்
கொள்ளும்;
|
|
உருவும் உருவத் தீ ஒத்தி; முகனும்
|
100
|
விரி கதிர் முற்றா விரி சுடர்
ஒத்தி;
|
|
எவ்வத்து ஒவ்வா மா முதல் தடிந்து,
|
|
தெவ்வுக் குன்றத்துத் திருந்து
வேல் அழுத்தி,
|
|
அவ் வரை உடைத்தோய்! நீ இவ்
வரை மருங்கில்
|
|
கடம்பு அமர் அணி நிலை
பகர்ந்தேம்;
|
105
|
உடங்கு அமர் ஆயமொடு ஏத்தினம்,
தொழுதே!
|