|
புதுப் புனலையும் பல வகை மணங்களையும் உடன்கொண்டு
வையை
வருதல்
|
|
கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட
எறிந்து,
|
|
உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப, மலை
மாலை
|
|
முற்றுபு முற்றுபு, பெய்து சூல் முதிர்
முகில்
|
|
பொருது இகல் புலி போழ்ந்த பூ
நுதல் எழில் யானைக்
|
5
|
குருதிக் கோட்டு அழி கறை தெளி
பெறக் கழீஇயின்று.
|
|
காலைக் கடல் படிந்து, காய்
கதிரோன் போய வழி
|
|
மாலை மலை மணந்து, மண் துயின்ற
கங்குலான்
|
|
வான் ஆற்றும் மழை தலைஇ; மரன்
ஆற்றும் மலர் நாற்றம்
|
|
தேன் ஆற்றும் மலர் நாற்றம், செறு
வெயில் உறு கால
|
10
|
கான் ஆற்றும் கார்
நாற்றம்,கொம்பு உதிர்த்த கனி நாற்றம்;
|
|
தான், நாற்றம் கலந்து உடன் தழீஇ
வந்து, தரூஉம், வையை.
|
|
புதுப் புனலாட வைகறையில் மைந்தரும் மகளிரும்
சென்ற
வகை
|
|
தன் நாற்றம் மீது, தடம் பொழில்
தான், யாற்று
|
|
வெந் நாற்று வேசனை நாற்றம்
குதுகுதுப்ப,
|
|
ஊர்ஊர் பறை ஒலி கொண்டன்று:
உயர் மதிலில்
|
15
|
நீர் ஊர் அரவத்தால் துயில்
உணர்பு எழீஇ,
|
|
திண் தேர்ப் புரவி வங்கம்
பூட்டவும்,
|
|
வங்கப் பாண்டியில் திண் தேர்
ஊரவும்,
|
|
வயமாப் பண்ணுந மதமாப் பண்ணவும்,
|
|
கயமாப் பேணிக் கலவாது ஊரவும்,
|
20
|
மகளிர் கோதை மைந்தர்
புனையவும்,
|
|
மைந்தர் தண் தார் மகளிர்
பெய்யவும்,
|
|
முந்துறல் விருப்பொடு முறை மறந்து
அணிந்தவர்,
|
|
ஆடுவார் பொய்தல் அணி வண்டு
இமிர் மணல்
|
|
கோடு ஏறு எருத்தத்து இரும் புனலில்
குறுகி,
|
25
|
மாட மறுகின் மருவி மறுகுற,
|
|
கூடல் விழையும் தகைத்து தகை வையை.
|
|
தலைமகனது காதற்பரத்தையைத் தோழியர் கண்ட
காலத்து நேர்ந்த நிகழ்ச்சி
|
|
புகை வகை தைஇயினார் பூங் கோதை
நல்லார்,
|
|
தகை வகை தைஇயினார் தார்;
|
|
வகைவகை தைஇயினார் மாலை,
மிகமிகச்
|
30
|
சூட்டும் கண்ணியும் மோட்டு
வலையமும்
|
|
இயல் அணி, அணி நிற்ப ஏறி; அமர்
பரப்பின்
|
|
அயல் அயல் அணி நோக்கி ஆங்கு
ஆங்கு வருபவர்
|
|
இடு வளை ஆரமோடு ஈத்தான் உடனாக,
|
|
கெடு வளை பூண்டவள் மேனியில்
கண்டு,
|
35
|
நொந்து, 'அவள் மாற்றாள் இவள்'
என நோக்க,
|
|
தலைமகனது முகமாற்றமும், கூட்டத்துள் பரத்தை மறைதலும்
|
|
தந்த கள்வன் சமழ்ப்பு முகம்
காண்மின்;
|
|
செருச் செய்த வாளி சீற்றத்தவை
அன்ன
|
|
நேர் இதழ் உண்கணார் நிரை
காடாக,
|
|
ஓடி ஒளித்து, ஒய்யப் போவாள்
நிலை காண்மின்.
|
|
தன்னைத் தொடர்ந்த ஆயத்தாரோடு பரத்தை
உரைத்தல்
|
40
|
என ஆங்கு,
|
|
ஒய்யப் போவாளை, 'உறழ்ந்தோள்
இவ் வாணுதல்'
|
|
வையை மடுத்தால் கடல் எனத்
தெய்ய
|
|
நெறி மணல் நேடினர் செல்ல, சொல்
ஏற்று,
|
|
'செறி நிரைப் பெண்' வல் உறழ்பு
'யாது தொடர்பு?' என்ன
|
45
|
மறலினாள், மாற்றாள் மகள்.
|
|
|
|
வாய் வாளா நின்றாள்,
|
|
செறிநகை சித்தம் திகைத்து.
|
|
ஆயத்தார் பரத்தையை நோக்கி வைது உரைத்தல்
|
|
ஆயத்து ஒருத்தி, அவளை, 'அமர்
காமம்
|
|
மாயப் பொய் கூட்டி மயக்கும்
விலைக் கணிகை!
|
50
|
பெண்மைப் பொதுமைப் பிணையிலி!
ஐம் புலத்தைத்
|
|
துற்றுவ துற்றும் துணை இதழ் வாய்த்
தொட்டி!
|
|
முற்றா நறு நறா மொய் புனல் அட்டி,
|
|
காரிகை நீர் ஏர் வயல், காமக்
களி நாஞ்சில்,
|
|
மூரி தவிர முடுக்கு முது சாடி!
|
55
|
மட மதர் உண்கண் கயிறாக
வைத்துத்
|
|
தட மென் தோள் தொட்டு, தகைத்து
மட விரலால்
|
|
இட்டார்க்கு யாழ் ஆர்த்தும்
பாணியில், எம் இழையைத்
|
|
தொட்டு, ஆர்த்தும் இன்பத்
துறைப் பொதுவி! கெட்டதைப்
|
|
பொய்தல் மகளிர் கண் காண
இகுத்தந்து, இவ்
|
60
|
வையைத் தொழுவத்துத் தந்து,
வடித்து, இடித்து,
|
|
மத்திகை மாலையா மோதி,
அவையத்துத்
|
|
தொடர்ந்தேம் எருது தொழில்
செய்யாது ஓட
|
|
விடும் கடன் வேளாளர்க்கு இன்று
படர்ந்து, யாம்.
|
|
தன் மார்பம் தண்டம் தரும்
ஆரத்தாள் மார்பும்,
|
65
|
நின் மார்பும், ஓர் ஒத்த நீர்மைய கொல்?' என்னாமுன்
|
|
பரத்தை ஏசுதலைக் கண்ட முதுமகளிர் கூற்று
|
|
தேடினாள் ஏச, சில மகளிர் மற்று
அதற்கு
|
|
ஊடினார், வையையகத்து.
|
|
'சிந்திக்கத் தீரும் பிணியாட்
செறேற்க;
|
|
மைந்து உற்றாய், வெஞ் சொல்; மட
மயிற் சாயலை
|
70
|
வந்திக்க வார்' என
|
|
|
|
'மனத் தக்க நோய் இது;
|
|
வேற்றாரை வேற்றார் தொழுதல்
இளிவரவு;
|
|
போற்றாய் காண், அன்னை!
புரையோய்! புரை இன்று,
|
|
மாற்றாளை மாற்றாள் வரவு.'
|
|
|
75
|
'அ...சொல் நல்லவை நாணாமல்
|
|
தந்து முழவின் வருவாய்! நீ
வாய்வாளா;
|
|
எந்தை எனக்கு ஈத்த இடு வளை, ஆரப்
பூண்
|
|
வந்த வழி நின்பால் மாயக் களவு
அன்றேல்,
|
|
தந்தானைத் தந்தே, தருக்கு.'
|
|
|
80
|
மாலை அணிய விலை தந்தான்; மாதர்
நின்
|
|
கால சிலம்பும் கழற்றுவான்; சால,
|
|
அதிரல் அம் கண்ணி! நீ அன்பன்
எற்கு அன்பன்;
|
|
கதுவாய்; அவன் கள்வன்; கள்வி
நான் அல்லேன்.'
|
|
என ஆங்கு
|
|
கண்டார் சிலருடைய கூற்று
பரத்தையை நோக்கி உரைத்தல்
|
85
|
வச்சிய மானே! மறலினை மாற்று;
உமக்கு
|
|
நச்சினார் ஈபவை நாடு அறிய
நும்மவே.
|
|
தலைமகளுக்கு முனிவு நீங்க உரைத்தல்
|
|
சேக்கை இனியார்பால் செல்வான்
மனையாளால்
|
|
காக்கை கடிந்து ஒழுகல் கூடுமோ?
கூடா;
|
|
தகவுடை மங்கையர் சான்றாண்மை
சான்றார்
|
90
|
இகழினும், கேள்வரை ஏத்தி
இறைஞ்சுவார்;
|
|
நிகழ்வது அறியாது நில்லு நீ,
நல்லாய்!
|
|
'மகளிரை மைந்துற்று அமர்பு உற்ற
மைந்தர்
|
|
அகலம் கடிகுவேம்; என்பவை
யார்க்கானும்
|
|
முடி பொருள் அன்று முனியல் முனியல்!
|
95
|
கட வரை நிற்குமோ காமம்? கொடி
இயலாய்!'
|
|
வையை நீர் மலர்களுடன் வந்து கூடல் மதிலின் சுருங்கை
வழியே பாயும் காட்சி
|
|
என ஆங்கு
|
|
இன்ன துனியும் புலவியும்
ஏற்பிக்கும்,
|
|
தென்னவன் வையைச் சிறப்பு.
|
|
கொடி இயலார் கைபோல் குவிந்த
முகை,
|
100
|
அரவு உடன்றவைபோல் விரிந்த
குலை,
|
|
குடை விரிந்தவை போலக் கோலும்
மலர்,
|
|
சுனை கழிந்து தூங்குவன நீரின்
மலர்,
|
|
சினை விரிந்து உதிர்ந்த வீ,
புதல் விரி போதொடும்,
|
|
அருவி சொரிந்த திரையின்
துரந்து;
|
105
|
நெடு மால் சுருங்கை நடு வழிப்
போந்து
|
|
கடு மா களிறு அணத்துக் கை விடு
நீர் போலும்
|
|
நெடு நீர் மலி புனல், நீள் மாடக்
கூடல்
|
|
கடி மதில் பெய்யும் பொழுது.
|
|
பிரிந்தாரைக் கூட்டுவித்தல் வையைக்கு இயல்பு
|
|
நாம் அமர் ஊடலும் நட்பும்,
தணப்பும்,
|
110
|
காமமும் கள்ளும் கலந்து உடன்
பாராட்ட,
|
|
தாம் அமர் காதலரொடு ஆடப்
புணர்வித்தல்
|
|
பூ மலி வையைக்கு இயல்பு.
|