|
பரங்குன்றத்துப் பெருமானைப் பரவுதல்
|
|
ஊர்ந்ததை எரி புரை ஓடை இடை
இமைக்கும் சென்னி,
|
|
பொரு சமம் கடந்த புகழ் சால்,
வேழம்.
|
|
தொட்டதை தைப்பு அமை
சருமத்தின், தாள் இயை தாமரை
|
|
துப்பு அமை துவர் நீர்த் துறை மறை
அழுத்திய,
|
5
|
வெரிநத் தோலொடு, முழு மயிர்
மிடைந்த,
|
|
வரி மலி அர உரி வள்பு கண்டன்ன,
|
|
புரி மென் பீலிப் போழ் புனை
அடையல்.
|
|
கையதை கொள்ளாத் தெவ்வர்
கொள் மா முதல் தடிந்து,
|
|
புள்ளொடு பெயரிய பொருப்புப் புடை
திறந்த வேல்;
|
10
|
பூண்டதை சுருளுடை வள்ளி இடை இடுபு
இழைத்த
|
|
உருள் இணர்க் கடம்பின் ஒன்றுபடு
கமழ் தார்.
|
|
அமர்ந்ததை புரையோர் நாவில்
புகழ் நலம் முற்றி,
|
|
நிரை ஏழ் அடுக்கிய நீள் இலைப்
பாலை
|
|
அரை வரை மேகலை, அணி நீர்ச் சூழி,
|
15
|
தரை விசும்பு உகந்த தண்
பரங்குன்றம்.
|
|
'குன்றத்து அடி உறை இயைக!' எனப்
பரவுதும்
|
|
வென்றிக் கொடி அணி செல்வ! நிற்
தொழுது.
|
|
பரங்குன்றின்மேல் ஓவியத்தின் அழகு போன்ற
காட்சிகள்
|
|
சுடு பொன் ஞெகிழத்து முத்து அரி
சென்று ஆர்ப்ப,
|
|
துடியின் அடி பெயர்த்து, தோள்
அசைத்துத் தூக்கி,
|
20
|
அடு நறா மகிழ் தட்ப ஆடுவாள்
தகைமையின்,
|
|
நுனை இலங்கு எஃகெனச் சிவந்த
நோக்கமொடு
|
|
துணை அணை கேள்வனைத் துனிப்பவள்
நிலையும்;
|
|
நிழல் காண் மண்டிலம் நோக்கி,
|
|
அழல் புனை அவிர் இழை
திருத்துவாள் குறிப்பும்;
|
25
|
பொதிர்த்த முலையிடைப் பூசிச்
சந்தனம்
|
|
உதிர்த்து, பின் உற ஊட்டுவாள்
விருப்பும்;
|
|
பல் ஊழ் இவை இவை நினைப்பின்,
வல்லோன்
|
|
ஓவத்து எழுது எழில் போலும் மா
தடிந்
|
|
திட்டோய்! நின் குன்றின்மிசை.
|
|
குன்றத்தில் வேறுபட்ட பல ஒலிகள் ஒருங்கு இசைத்தல்
|
30
|
மிசை படு சாந்தாற்றி போல,
எழிலி
|
|
இசை படு பக்கம், இரு பாலும் கோலி,
|
|
விடு பொறி மஞ்ஞை பெயர்பு உடன்
ஆட;
|
|
விரல் செறி தூம்பின் விடு
துளைக்கு ஏற்ப,
|
|
முரல் குரற் தும்பி அவிழ் மலர்
ஊத;
|
35
|
யாணர் வண்டினம் யாழ் இசை
பிறக்க;
|
|
பாணி முழவு இசை அருவி நீர் ததும்ப;
|
|
ஒருங்கு பரந்தவை எல்லாம்
ஒலிக்கும்
|
|
இரங்கு முரசினான் குன்று.
|
|
சுனை நீரில் பாய்ந்து ஆடிய காதலர்
|
|
தாழ் நீர் இமிழ் சுனை நாப்பண்
குளித்து, அவண்
|
40
|
மீ நீர் நிவந்த விறலிழை,
'கேள்வனை
|
|
வேய் நீர் அழுந்து தன் கையின்
விடுக' என,
|
|
பூ நீர் பெய் வட்டம் எறிய, புணை
பெறாது
|
|
அரு நிலை நீரின் அவள் துயர்
கண்டு,
|
|
கொழுநன் மகிழ் தூங்கி, கொய்
பூம் புனல் வீழ்ந்து,
|
45
|
தழுவும் தகை வகைத்து தண்
பரங்குன்று.
|
|
குன்றத்தில் பலவகை மணத்துடன் வரும் காற்றுகள்
|
|
வண்டு ஆர் பிறங்கல் மைந்தர்
நீவிய
|
|
தண் கமழ் சாந்தம் தைஇய வளியும்,
|
|
கயல் புரை கண்ணியர் கமழ் துகள்
உதிர்த்த
|
|
புயல் புரை கதுப்பகம் உளரிய
வளியும்,
|
50
|
உருள் இணர்க் கடம்பின்
நெடுவேட்கு எடுத்த
|
|
முருகு கமழ் புகை நுழைந்த வளியும்,
|
|
அசும்பும் அருவி அரு விடர்ப்
பரந்த
|
|
பசும் பூண் சேஎய்! நின் குன்றம்
நன்கு உடைத்து.
|
|
சீர்க்கு இசைய ஆடுபவளது மேனியழகும் கண்ணழகும்
|
|
கண் ஒளிர் திகழ் அடர், இடுசுடர்
படர் கொடி மின்னுப் போல்
|
55
|
ஒண் நகை தகை வகை நெறிபெற
இடைஇடை இழைத்து யாத்த
|
|
செண்ணிகைக் கோதை கதுப்போடு
இயல,
|
|
மணி மருள் தேன் மகிழ் தட்ப,
ஒல்கிப்
|
|
பிணி நெகிழப் பைந் துகில்,
நோக்கம் சிவப்பு ஊர,
|
|
பூங் கொடி போல நுடங்குவாள்,
ஆங்குத் தன்
|
60
|
சீர்தகு கேள்வன் உருட்டும் துடிச்
சீரான்,
|
|
கோடு அணிந்த முத்து ஆரம் ஒல்க
ஒசிபவள் ஏர்
|
|
ஆடை அசைய, அணி அசைய, தான்
அசையும்
|
|
வாடை உளர் கொம்பர் போன்ம்.
|
|
வாளி புரள்பவை போலும், துடிச்
சீர்க்குத்
|
65
|
தோள் ஊழ் பெயர்ப்பவள் கண்.
|
|
|
|
மாறு அமர் அட்டவை மற வேல்
பெயர்ப்பவை;
|
|
ஆறு இரு தோளவை; அறு முகம்
விரித்தவை;
|
|
நன்று அமர் ஆயமோடு ஒருங்கு, 'நின்
அடி உறை
|
|
இன்று போல் இயைக!' எனப் பரவுதும்
|
70
|
ஒன்றார்த் தேய்த்த செல்வ!
நிற் தொழுதே.
|