பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்15

   மீண்டும் பீடுயர் பீண்டி அவற்றிற்கும்
   உள்ளீ டாகிய இருநிலத் தூழியும்
   நெய்தலுங் குவளையும் ஆம்பலுஞ் சங்கமும்
   மையில் கமலமும் வெள்ளமு நுதலிய
15 செய்குறி யீட்டங் கழிப்பிய வழிமுறை
   கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
   ஊழி ஒருவினை உணர்த்தலின் முதுமைக்(கு)
   ஊழி யாவரும் உணரா
   ஆழி முதல்வநிற் பேணுதுந் தொழுதும்
20 நீயே, வளையொடு புரையும் வாலி யோற்கவன்
   இளையன் என்போர்க் கிளையை ஆதலும்
   புதையிருள் உடுக்கைப் பொலம்பனைக் கொடியோற்கு
   முதியை என்போர்க்கு முதுமை தோன்றலும்
   வடுவில் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த
25 கெடுவில் கேள்வியுள் நடுவா குதலும் (25)
   இந்நிலைத் தெரிபொருள் தேரின் இந்நிலை
   நின்னிலைத் தோன்றுநின் தொல்நிலைச் சிறப்பே
   ஓங்குயர் வானின் வாங்குவிற் புரையும்
   பூணணி கவைஇய வாரணி நித்தில
30 நித்தில மதாணி அத்தகு மதிமறுச்
   செய்யோள் சேர்ந்தநின் மாசில் அகலம்
   வளர்திரை மண்ணிய கிளர்பொறி நாப்பண்
   வைவான் மருப்பின் களிறுமணன் அயர்பு
   புள்ளி நிலனும் புரைபடல் அரிதென
35 உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று
   ஒடியா உள்ளமொ டுருத்தொருங் குடனியைந்து
   இடியெதிர் கழறும் கால்உறழ் பெழுந்தவர்
   கொடியறு பிறுபு செவிசெவிடு படுபு
   முடிகள் அதிரப் படிநிலை தளர
40 நனிமுரல்வளை முடியழிபிழிபு
   தலையிறுபு தாரொடு புரள
   நிலைதொலைபு வேர்தூர்மடல்
   குருகு பறியா நீளிரும் பனைமிசைப்
   பலபதி னாயிரங் குலைதரை யுதிர்வபோல்