பக்கம் எண் :

பரிபாடல்- வையை180

   புந்தி மிதுனம் பொருந்தப் புலர்விடியல்
   அங்கி யுயர்நிற்ப வந்தணன் பங்குவின்
   இல்லத் துணைக்குப்பால் எய்த இறையமன்
   வில்லிற் கடைமகர மேவப்பாம் பொல்லை
10 மதிய மறைய வருநாளில் வாய்ந்த
   பொதியின் முனிவன் புரைவரைக் கீறி
   மிதுன மடைய விரிகதிர் வேனில்
   எதிர்வரவு மாரி இயைகெனஇவ் வாற்றால்
   புரைகெழு சையம் பொழிமழை தாழ
15 நெரிதரூஉம் வையைப் புனல்;
   வரையன புன்னாகமும்
   கரையன சுரபுன்னையும்
   வண்டறைஇய சண்பகநிரை தண்பதம்
   மனைமாமரம் வாள்வீரம்
20 சினைவளர் வேங்கை கணவிரி காந்தள்
   தாய தோன்றி தீயென மலரா
   ஊதை யவிழ்த்த வுடையிதழ் ஒண்ணீலம்
   வேய்பயில் சோலை அருவி தூர்த்தரப்
   பாய்திரை யுந்தித் தருதலான் ஆய்கோல்
25 வயவர் அரிமலர்த் துறையென்கோ
   அரிமலர் மீட்போர்வை ஆரந்தாழ் மார்பிற்
   றிரைநுரை மென்பொகுட்டுத் தேமணச் சாந்தின்
   அரிவை யதுதானை என்கோகள் ளுண்ணூஉப்
   பருகு படிமிட றென்கோ பெரிய
30 திருமருத நீர்ப்பூந் துறை;
   ஆநா ணிறைமதி அலர்தரு பக்கம்போல்
   நாளி னாளி னளிவரைச் சிலம்புதொட்டு
   நிலவுப்பரந் தாங்கு நீர்நிலம் பரப்பி
   உலகுபயம் பகர வோம்புபெரும் பக்கம்
35 வழியது பக்கத் தமர ருண்டி
   மதிநிறை வழிவதின் வரவு சுருங்க
   எண்மதி நிறையுவா இருண்மதி போல
   நாள்குறை படுதல் காணுநர் யாரே
   சேணிகந்து கல்லூர்ந்த மாணிழை வையை