பக்கம் எண் :

பரிபாடல்- வையை181

40 வயத்தணிந் தேகுநின் யாணரிறு நாள்பெற
   மாமயி லன்னார் மறையிற் புணர்மைந்தர்
   காமங் களவிட்டுக் கைகொள்கற் புற்றென
   மல்லற் புனல்வையை மாமலை விட்டிருத்தல்
   இல்லத்து நீதனிச் சேறல் இளிவரல்
45 எனவாங்கு
   கடையழிய நீண்டகன்ற கண்ணாளைக் காளை
   படையொடுங் கொண்டு பெயர்வானைச் சுற்றம்
   இடைநெறித் தாக்குற்ற தேய்ப்ப அடன்மதுரை
   ஆடற்கு நீரமைந்த தியாறு;
50 ஆற்றணி, வெள்வாள் விதிர்ப்போர் மிளிர்குந்த மேந்துவோர்
   கொள்வார்கோல் கொள்ளக் கொடித்திண்டேர் ஏறுவோர்
   புள்ளேர் புரவி பொலம்படைக் கைம்மாவை
   வெள்ளநீர் நீத்தத்து ளூர்பூர் புழக்குநரும்
   கண்ணாருஞ் சாயற் கழித்துரப் போரை
55 வண்ணநீர் கரந்த வட்டுவிட் டெறிவோரும்
   மணம்வரு மாலையின் வட்டிப் போரைத்
   துணிபிணர் மருப்பி னீரெக்கு வோரும்
   தெரிகோதை நல்லார்தங் கேளிர்த் திளைக்கும்
   உருகெழு தோற்ற முரைக்குங்கா னாளும்
60 பொருகளம் போலுந் தகைத்தே பரிகவரும்
   பாய்தேரான் வையை யகம்;
   நீரணி வெறிசெறி மலருறு கமழ்தண்
   தார்வரை யகலத்தவ் வேரணி நேரிழை
   ஒளிதிகழ்தகை வகைசெறிபொறி
65 புனைவினைப்பொலம் கோதையவரொடு
   பாக ரிறைவழை மதுநுகர்பு களிபரந்து
   நாகரினல் வளவினை வயவேற நளி புணர்மார்
   காரிகைமது ஒருவரினொருவர் கண்ணிற் கவர்புறச்
   சீரமை பாடற் பயத்தாற் கிளர்செவிதெவி
70 உம்ப ருறையு மொளிகிளர்வா னூர்பாடும்
   அம்பி கரவா வழக்கிற்றே யாங்கதை
   காரொவ்வா வேனில் கலங்கித் தெளிவரல்
   நீரொவ்வா வையை நினக்கு;