பக்கம் எண் :

பரிபாடல்- வையை183

   நெஞ்ச மவள்வாங்க நீடு புணைவாங்க
   நேரிழை நின்றுழிக் கண்ணிற்ப நீரவன்
110 தாழ்வுழி யுய்யாது தான்வேண்டு மாறுய்ப்ப
   ஆயத்துட னில்லாள் ஆங்கவன் பின்றொடரூஉத்
   தாயத் திறமறியாள் தாங்கித் தனிச்சேறல்
   ஆயத்திற் கூடென் ராற்றெடுப்பத் தாக்கிற்றே
   சேயுற்ற கார்நீர் வரவு;
115 நீதக்காய் தைந்நீர் நிறந்தெளிந்தாய் என்மாரும்
   கழுத்தமை கைவாங்காக் காதலர்ப் புல்ல
   விழுத்தகை பெறுகென வேண்டுதும் என்மாரும்
   பூவீழ் அரியிற் புலம்பப் போகா
   தியாம்வீழ்வார் ஏமம் எய்துக என்மாரும்
120 கிழவர் கிழவியா என்னாதேழ் காறும்
   மழவீன்று மல்லற்கேண் மன்னுக என்மாரும்
   கண்டார்க்குத் தாக்கணங்கிக் காரிகை காண்மின்
   பண்டாரம் காமன் படையுவள் கண்காண்மின்
   நீனெய்தாழ் கோதை யவர்விலக்க நில்லாது
125 பூவூது வண்டினம் யாழ்கொண்ட கொளைகேண்மின்
   கொளைப்பொருள் தெரிதரக் கொளுத்தாமற் குரல்கொண்ட
   கிளைக்குற்ற உழைச்சுரும்பின் கேழ்கெழுபாலை இசையோர்மின்
   பண்கண்டு திறனெய்தாப் பண்டாளம் பெறப்பாடிக்
   கொண்டவின் னிசைத்தாளம் கொளைச்சீர்க்கும் விரித்தாடும்
130 தண்டும்பி யினங்காண்மின் தான்வீழ்பு நெரித்தாளை
   முனைகெழு சினநெஞ்சின் முன்னெறிந்து பின்னும்
   கனைவர லொருதும்பி காய்சினத் தியல்காண்மின்
   எனவாங்கு
   இன்ன பண்பின் இன்றைந்நீ ராடல்
135 மின்னிழை நறுநுதன் மகண்மேம் பட்டல்
   கன்னிமை கனியாக் கைக்கிளைக் காம
   இன்னியன் மாண்டேர்ச்சி இசை பரிபாடல்
   முன்முறை செய்தவத் திம்முறை இயைந்தேம்
   மறுமுறை யமையத்து மியைக
140 நறுநீர் வையை நய்த்தகு நிறையே.