பக்கம் எண் :

பரிபாடல்- வையை185

வையையாற்றின்கண் நீர் பெருகிவந்து கரைகளை நெரியா நிற்கும்;

      (வி-ம்.) வியல் விசும்பு - அகன்ற வானம். மேலுள்ள
நாண்மீன்களை, கீழே மிகத் தொலைவினிற்கும் திங்கள் சேர்ந்திருப்பது
போலக் காணப்படுதற்கு அவற்றை நேருக்கு நேராகக் கொண்டுள்ள
வானமே காரணமாகலின் விசும்பாற் புணர்க்கப்பட்ட என்பார் 'விசும்பு
புணர்ப்ப' என்றார்.

எரி தீயைத் தெய்வமாகவுடைய கார்த்திகை. இதனால் அதன் முக்
காலையுடைய இடபராசி உணர்த்தப்பட்டது.

      சடை - சடையையுடைய சிவபெருமானைத் தெய்வமாகவுடைய
திருவாதிரை; இதனால் அதனையுடைய மிதுனம் உணர்த்தப்பட்டது.

      வேழம் - யானைக்குப் பிறப்புநாளாகிய பரணி; இதனால் அதனை
யுடைய மேடம் உணர்த்தப்பட்டது.

      எனவே இடபவீதி மிதுனவீதி மேடவீதி என வகுக்கப்பட்ட
மூவகை வீதிகளுள் ஒவ்வொன்று ஒவ்வொன்பது நாள்களைத் தன்பால்
அடக்கிக் கொண்ட நன்னான்கு இராசிகளாகப் பகுக்கப்பட்ட அம்
முக்கூற்றுப் பன்னிரண்டு இராசிகளுள் என்றவாறு.

      இனி, உருகெழு வெள்ளி என்பது முதலாக இராசிகளுள் கோள்கள்
நின்றமுறை கூறுகின்றார். இதன்கண் கூறப்பட்ட கோணிலை வருமாறு;

வியாழம்
செவ்வாய்
வெள்ளி
புதன்
அகத்தியன்
 
இவ்விராசிச்சக்கரம் ஆவணித் திங்கள் அவிட்ட கேது நாளில் மதிமறைவு நிகழ்ந்த சனி
தொரு நாளின் கோணிலையைக் மதி குறிக்கின்றது.
கேது
சனி
மதி
இராகு
ஆதித்தன்
 
 
 
 

      இவ்வாறு நிகழ்ந்தது கி.மு. 161 ஆன கலி 2941 - பிரமாதி யாண்டு
ஆவணித் திங்கள் பன்னிரண்டாம்நாள் வியாழக்கிழமை சதுர்த்தசி 15-4
அவிட்டம் 45-53. ஆகுமென அறிஞர்கள்