16-22: வரையன . . . . . . . . .. . நீலம்
(இ-ள்.) வரையன புன்னாகமும் - மலையின்கண்ணுள்ள
புன்னை
மரமும், கரையன சுரபுன்னையும் - யாற்றினது கரையின் கண்ணுள்ள
சுரபுன்னைமரங்களும், வண்டு அறைஇய சண்பக நிரை - வண்டுகள்
இசைபாடுதற்குக் காரணமான சண்பக மரத்தின் நிரையும், தண்பதம்
மனைமாமரம் வாள்வீரம் - குளிர்ந்த தன்மையுடைய தேற்றாமரமும்
வாள்வீர மரமும், சினைவளர் வேங்கை - கொம்புகள் தழைத்து
வளராநின்ற வேங்கை மரமும், கணவிரி காந்தள் - செவ்வலரியும்
காந்தளும், தீயென மலரா தாயதோன்றி - நெருப்புப் போன்று மலரும்
தழைத்த தோன்றியும், ஊதை அவிழ்ந்த உடை யிதழ் ஒள் நீலம் -
காற்றானே அலர்த்தப்பட்ட நெகிழ்ந்த இதழ்களையுடைய நீலம் என்னும்
இவற்றின் மலர்களை;
(வி-ம்) வரையன - மலையிடத்துள்ளனவாகிய. கரையன
- கரை
யிடத்துள்ளனவாகிய புன்னாகம்- புன்னை. வண்டறைஇய -
வண்டறைதற்குக் காரணமான என்க. மனைமாமரம் - இல்லமரம்;
அஃதாவது தேற்றாமரம். வாள்வீரம் - வீரையென்னும் ஒருவகை மரம்.
கணவிரி - செவ்வலரி. காந்தள் - கோடல். தீயெனமலராதாய தோன்றி
என மாறுக. ஊதை - காற்று.
இவற்றின் மலர்களை அருவிதூர்த்தர என இயையும்.
23-30: வேய்பயில் . . . . . .. . . .நீர்ப்பூந்துறை
(இ-ள்.) வேய் பயில் சோலை அருவி தூர்த்தர - மூங்கில்
வளராநின்ற மலைச்சாரலின் சோலையிடத்தே அருவிநீர் கொணர்ந்து
குவிக்க, பாய்திரை உந்திப் பெரிய திருமருத நீர்ப்பூந்துறை - அவற்றைப்
பாயாநின்ற நீர் தள்ளிக்கொண்டு வந்து அகன்ற திருமருதந்துறை என்னும்
நீராடுதற்குரிய அழகிய துறையின்கண் தருதலானே அத்துறையை,
ஆய்கோல் வயவர் அரிமலர்த்துறை என்கோ - ஆராய்ந்து மலர்
பறித்தற்குரிய கோலினையுடைய வலிய குடிகள் தாம் பறித்த நிறமுடைய
மலர்களைக் கொணர்ந்து குவித்துவைக்கும் மண்டபம் என்று
கூறுவேனோ?, அரிமலர் மீப்போர்வை ஆரம் தாழ் மார்பின் திரை நுரை
மென்பொகுட்டு தேம் மணச் சாந்தின் - நிறமுடைய மலராகிய
போர்வையினையும், மலையினுள்ள முத்துக்கள் தாழ்ந்த மார்பினையும்
அலையினையும் நுரையினையும் மெல்லிய குமிழிகளையும் இனிய
மணமுடைய சந்தனச் சாந்தினையும் உடைய, அரிவையது தானை
என்கோ - வையையாகிய நங்கையினது ஆடையின் முன்றானை என்று
கூறுவேனோ?. கள் உண்ணூஉ பருகு படி மிடறு என்கோ - கள்ளை
வாயிற் கொண்டு பருகும் நிலமகளினது மிடறு |
|
|
|