பக்கம் எண் :

பரிபாடல்- வையை188

என்று கூறுவேனோ இவ்வுவமைகளுள் எதனைத் தேர்ந்து கூறுவேன்;

      (வி-ம்.) வேய் - மூங்கில். மலையருவி - சாரலிலுள்ள சோலையிற்
கொணர்ந்து குவிக்க அவற்றை நீர் கொணர்ந்து திருமருதந் துறையிற்
குவித்ததாக. அங்ஙனம் குவிக்கப்பட்ட அத்துறை மலர்கொணர்ந்து
குவிக்கும் மண்டபம் போன்றும் வையைமகளின் முன்றானை போன்றும்
நிலமகளின் மிடறுபோன்றும் தோன்றிற்று என்பதாம்.

      வயவர் - ஈண்டு அரண்மனைப் பூம்பொழிலில் மலர்பறிக்கும்
குடிகள். மண்டபம் - மலர்கட்டும் இடம் என்க. கோல் பூப்பறித்தற்குரிய
கோல். ஆரம் - முத்துமாலை. மென்பொகுட்டு - மெல்லிய நீர்க்குமிழி.
அலையும் நுரையும் குமிழியுமாகிய மேலாடையினையுடைய எனினுமாம்.
படி - நிலமகள். மிடறு - கழுத்து. மலரானே அணிசெய்யப்பட்ட கழுத்து
என்க.

      (பரிமே.) வரைவுமலிந்த தோழி வையைச் சிறப்புக் கூறுவாள்
இத்துணையும் தான் கருதியவாற்றாற் கூறி, மேல் கண்டார்
கூறுகின்றவாற்றாற் கூறுகின்றாள்.

31-40: ஆநாள் . . . . .. . . . . . .நாள்பெற

      (இ-ள்.) மதி ஆம் நாள் நாளின் நாளின் நிறை அலர் தரு
பக்கம்போல் - பிறை தோன்றிய நாள் தொடங்கி நாளுக்கு நாள்
வளர்கின்ற வளர்பக்கம்போல் நாளுக்குநாள் பெருகி, நிலவுப் பரந்தாங்கு
- அதன் நிலவொளி உலகில் எங்கும் பரவுமாறுபோல, நளிவரைச் சிலம்பு
தொட்டு - செறிந்த மலைச்சாரல் தொடங்கி, நிலம் நீர் பரப்பி -
நிலமெங்கும் நீரைப்பரப்பி, உலகு பயம் பகர - உலகத்திற்குப் பயனை
விளைத்துக் கொடுத்துப் பாதுகாத்து, பெரும் பக்கம் வழியது -
அவ் வளர் பக்கத்துப் பிற்பக்கமாகிய தேய்பக்கத்து, அமரர் உண்டிமதி
நிறைவு அழிவதின் - தேவர்களுக்கு உணவாகிய அத்திங்கள்
நாள்தோறும் தனது நிறைவினின்றும் ஒருகலை அழியுமாறுபோல, வரவு
சுருங்க - நீரினது வருவாய் சுருங்குதலானே, நாளுக்குநாள் சிறிதுசிறிது
வற்றிவருங்காலத்தும், எண் மதி நிறை - எட்டாம்நாள் திங்களின்
அளவாதலன்றி. இருள் உவாமதிபோலக் குறைபடுதல் நாள்
- அமாவாசையின்கண் திங்கள் முழுதும் தேய்ந்தொழிதல் போன்று நின்
கண் நீர் முழுதும் வற்றியொழிந்த நாளினை, யாரே காணுநர் -
இவ்வுலகில் யாரே காண்கின்றனர், சேண் இகந்து கல் ஊர்ந்த மாண்
இழை வையை - அதனால், நெடுந்தூரத்தைக் கடந்து மலைகளிலே
ஊர்ந்துவந்த மாட்சிமையுடைய அணிகலன்களையுடைய வையை மகளே!,
நின் இறுநாள் யாணர் பெற - நீ பெருகின நாளின் வருவாயேயன்றி

நினது வற்றின நாளின் வருவாயையும் இவ்