பக்கம் எண் :

பரிபாடல்- வையை191

      (பரிமே.) 45. என - என்று கண்டோர் சொல்ல

      46. கடையழிய - எல்லையற.

      48. இடைநெறி - இடைச்சுரம். மதுரை - மதுரையார்.

      49. அமைந்தது - ஏற்றது.

50-61: ஆற்றணி . . . . . . . . . வையையகம்

      (இ-ள்.) ஆற்று அணி - இனி அவ் வையையாற்றின்கண் அணி
அணியாக நின்று, வெள் வாள் விதிர்ப்போர் - நெட்டியாற் செய்த
வெள்ளிய வாட்படையைச் சுற்றுவோரும், மிளிர் குந்தம் ஏந்துவோர் -
விளங்காநின்ற குந்தப்படையைக் கையிலேந்தி நிற்போரும், கொள்வார்
கோல் கொள்ள - மகளிர் தேர்க்கு மகளிரும் மைந்தர் தேர்க்கு
மைந்தருமாகக் கோல் கொள்ளுதற்குரியோர் கோலினைக்
கைக்கொள்ளாநிற்ப, கொடித் திண் தேர் ஏறுவோர் - கொடியையுடைய
திண்ணிய தேர்களிலே ஏறுவோரும், புள் ஏர் புரவி பொலம்படைக்
கைம்மாவை - பறவை பறப்பதுபோன்று விரைந்துசெல்லும்
இயல்பினையுடைய குதிரைகளையும் பொன்னாலாகிய
நெற்றிப்பட்டத்தையுடைய யானைகளையும் ஏறி, வெள்ளநீர் நீத்தத்துள்
ஊர்பு ஊர்பு உழக்குநரும் - வெள்ளமாகப் பெருகிய அந் நீரின்கண்
நீந்துதற்குரிய ஆழியவிடத்தே அவற்றைச் செலுத்திச் செலுத்திக்
கலக்குவோரும், கண் ஆரும் சாயல் கழித் துரப்பாரை - கண்ணுக்கு
நிறைந்த அழகையுடைய மூங்கிற்குழாயாலே நீரைவாங்கித் தம்மேல்
செலுத்துகின்றவர்களை, வண்ணநீர் கரந்த வட்டு விட்டெறிவோரும் -
அரக்குநீரை அடக்கிய வட்டாலே எறிவோரும், மணம்வரும் மாலையின்
வட்டிப்போரும் - தம்மை நறுமணங் கமழ்தற்குக் காரணமான
மலர்மாலையினாற் சுழற்றிப் புடைப்போரையும், துணி இணர் மருப்பின்
நீர் எக்குவோரும் - அறுக்கப் பட்ட சருச்சரையையுடைய கொம்பின்கண்
அடக்கப்பட்ட மணநீரினை வீசுவோரும், தெரிகோதை நல்லார் நாளும்
தம் கேளிர்த் திளைக்கும் - இவ்வாறாக ஆராய்ந்தணிந்த
மாலையினையுடையமகளிர் தம் காதலரோடு நாடோறும் ஆடி
மகிழும், உருகெழு தோற்றம் உரைக்குங்கால் - அழகு பொருந்திய
காட்சிதனை உவமைகாட்டிக் கூறுமிடத்து, பரி கவரும் பாய்
தேரான் வையையகம் - பகைவருடைய குதிரைகளை வென்று
கவர்ந்து கொள்ளும் விரைகின்ற தேரினையுடைய பாண்டிய மன்னனது
வையையாற்றினது உள்ளிடம், பொருகளம் போலும் தகைத்து
- போர்க்களம் போன்ற தன்மைத்து எனலாம்.

      (வி-ம்.) வாள் குந்தம் என்னும் படைகள் நெட்டி முதலியவற்றாற்
செய்யப்பட்டன. சூந்தம் - ஒருவகைப் படைக்கலம். 'கொள்வார் கோல்