வும்மை. ஆகலான். இங்ஙனம் நீரின்கண்
நின்று செய்தவமே யன்றி
நெருப்பின்கண்ணும் நின்று செய்தவம் பற்றியோ என விரித்துக் கொள்க.
செறிதவம் - புலன்களடங்கச் செய்யும் தவம். செறிதல் - அடங்குதல்.
'தவமும் தவமுடையார்க் காகும்' ஆகலின் தவம் முன் பற்றியோ
இத் தைந்நீர் ஆடற்றவம் இவர் பெற்றது என்க. உரைத்தி - கூறுக.
வையை: விளி.
(பரிமே.) 88. கல்வி தொடங்கின அளவாதலின் 'மழபுலவர்'
என்றார்.
93 - 105: ஆயிடை . . . .. . . . . .மாலைவளாய்
(இ-ள்.) ஆயிடை - இங்ஙனமாக அக் கன்னியர் தைந்நீராடுங்கால்,
வேய் எழில் வென்று லெறுத்த தோள் - மூங்கிலினது அழகை வென்று
மிக்க தோள் அழகினையுடையாள் ஒருத்தி, மா இதழ்கொண்டு ஓர்
மடமாதர் நோக்கினாள் - நீலமலரைத் தன் காதிற் செருகிக்கொண்டு
அயல்நின்ற மடப்பமுடைய ஒருத்தியை நோக்கினாள், நோக்கிச் சாய்
இழை பிண்டித் தளிர் காதில் தையினாள் - அவளது குறிப்பறிந்து
அப்பொழுது அம்மாது குழைந்த அசோகினது தளிரைத் தன் செவியிற்
செருகிக் கொண்டாள், பாய்குழை நீலம் பகலாகத் தையினாள் -
அவ்வசோகு சூடினவள் அவ் வொளிபாயும் குழையையுடையாள்
அணிந்துள்ள நீலமலர் தான் அணிந்த அசோகந்தளிரின் செம்மையாலே
இளவெயில் படர்ந்தாற்போன்று ஆகும்படி சூடாநின்றாள், குழைக்காதின்
இவள் கோலச்செவியின் குவளை செரீஇ நான்கு விழிபடைத்தாள் என்று
- அதுகண்ட பின்னவள் முன்னவளைச் சுட்டிக் குழையணிந்த
காதினையுடைய இவள் தன் செவிகளில் நீலமலரை அணிந்து இப்பொழுது
நான்கு விழிகளை உடையவள். ஆயினாள் என்று அவளழகைப்
பாராட்டாநிற்ப, ஓர் பெண் - அதுகண்ட மற்றொருத்தி பின்னும்
அவளழகிற்கு அழகுசெய்வாளாய், கொற்றவை கோலம்கொண்டு -
அவ்வழகி கொற்றவைபோலத் தோன்றவேண்டும் என்று கருத்திற்
கொண்டு, நெற்றி விழியா நிறை திலகம் இட்டாள் - நெற்றிக் கண்போலத்
தோன்றும்படி அவள் நெற்றியிலே நிறையும்படி திலகமிட்டாள், பவள
வளை செறித்தாள் கண்டு - ஒருத்தி பவளவளையல்
அணிந்தாளொருத்தியைக் கண்டு, பச்சைக் குவளைப் பசுந்தண்டு கொண்டு
அணிந்தாள் - தன் கையில் மரகதமணிபோன்ற நிறமுடைய
குவளைமலரின் பசிய தண்டினை வளையலாகச் செய்து
அணிந்துகொண்டாள், கல்லகாரப் பூவால் கண்ணி தொடுத்தாளை -
ஒருத்தி குளிரிப்பூவாலே மாலை தொடுத்தாளாக அங்ஙனம்
தொடுத்தவளை, நில் என்பாள் போல் - நீ இம் மாலை தொடுத்தலை
நிறுத்துக என்று தடை செய்வாள் போன்று மற்றொருத்தி அவள்
காணும்படி, மல்லிகா |
|
|
|