பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்369

20 திறத்திற் றிரிவில்லா அந்தணர் ஈண்டி
   அறத்திற் றிரியா பதி;
(இவை நான்கும் கொச்சகம்)

   ஆங்கொருசார், உண்ணுவ பூசுவ பூண்ப உடுப்பவை
   மண்ணுவ மணிபொன் மலைய கடல
   பண்ணிய மாசறு பயந்தரு காருகப்
25 புண்ணிய வணிகர் புனைமறு கொருசார்
   விளைவதை வினையெவன் மென்புல வன்புலக்
   களமர் உழவர் கடிமறுகு பிறசார்
   ஆங்க, அனையவை நல்ல நனிகூடு மின்பம்
   இயல்கொள நண்ணி யவை;
(இது கொண்டுநிலை)

30 வண்டு பொரேரென எழ
   வண்டு பொரேரென எழும்
   கடிப்புகு வேரிக் கதவமிற் றோட்டிக்
   கடிப்பிகு காதிற் கனங்குழை தொடர
   மிளிர்மின் வாய்ந்த விளங்கொளி நுதலார்
35 ஊர்களிற் றன்ன செம்ம லோரும்
   வாயிருள் பனிச்சை வரிசிலைப் புருவத்
   தொளியிழை யொதுங்கிய வொண்ணுதலோரும்
   புலத்தோ டளவிய புகழணிந் தோரும்
   நலத்தோ டளவிய நாணணிந் தோரும்
40 விடையோ டிகலிய விறனடை யோரும்
   நடைமட மேவிய நாணணிந் தோரும்
   கடனிரை திரையிற் கருநரை யோரும்
   சுடர்மதிக் கதிரெனத் தூநரை யோரும்
   மடையர் குடையர் புகையர்பூ வேந்தி
45 இடையொழி வின்றி யடியுறையார் ஈண்டி
   விளைந்தார் வினையின் விழுப்பயன் றுய்க்கும்
   துளங்கா விழுச்சீர்த் துறக்கம் புரையும்
   இருகேழ் உத்தி அணிந்த எருத்தின்
   வரைகெழு செல்வ னகர்;
50 வண்டொடு தும்பியும் வண்டொடை யாழ்ஆர்ப்ப
   விண்ட கடகரி மேகமொ டதிரத்
ப.--24