பணிபொசி பண்பபண் டெல்லா நனியுருவத்
தென்னோ துவள் கண்டீ
65 எய்துங் களவினி நின்மார்பிற் றார்வாடக்
கொய்ததும் வாயாளோ கொய்தழை கைபற்றிச்
செய்ததும் வாயாளோ செப்பு;
புனைபுணை யேறத் தாழ்த்ததை தளிரிவை
நீரிற் றுவண்ட சேஎய்குன்றங் காமர்ப்
70 பெருக்கன்றோ வையை வரவு;
ஆமா மதுவொக்குங் காதலங் காமம்
ஒருக்க ஒருதன்மை நிற்குமோ ஒல்லைச்
சுருக்கமு மாக்கமுஞ் சூளுறல் வையைப்
பெருக்கன்றோ பெற்றாய் பிழை;
75 அருகு பதியாக அம்பியிற் றாழ்ப்பிக்கும்
குருகிரை தேரக் கிடக்கும் பொழிகாரில்
இன்னிள வேனி லிதுவன்றோ வையைநின். . .
வையை வயமாக வை;
செல்யாற்றுத் தீம்புனலிற் சென்மரம் போல
80 வவ்வுவல் லார்புணை யாகிய மார்பினை
என்னும் பனியாய் இரவெல்லாம் வைகினை
வையை யுடைந்த மடையடைத்தக் கண்ணும்
பின்னு மலிரும் பிசிர்போல வின்னும்
அனற்றினை துன்பவிய நீயடைந்தக் கண்ணும்
85 பனித்துப் பனிவாரும் கண்ணவர் நெஞ்சம்
கனற்றுபு காத்தி வரவு;
நல்லாள் கரைநிற்ப நான்குளித்த பைந்தடத்து
நில்லா டிரைமூழ்கி நீங்கி யெழுந்தென்மேல்
அல்லா விழுந்தாளை யெய்தியெழுந் தேற்றியான்
90 கொள்ளா வளவை யெழுந்தேற்றாள் கோதையின்
உள்ளழுத்தி யாளெவளோ தோய்ந்த தியாதெனத்
தேறித் தெரிய வுணர்நீ பிறிதுமோர்
யாறுண்டோ இவ்வையை யாறு;
இவ்வையை யாறென்ற மாறென்னை கையால்
95 தலைதொட்டேன் தண்பரங் குன்று;
சினவனின் னுண்கண் சிவப்பஞ்சு வாற்குத்
|
|