| தோழி |
| பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கித் தெளித்து, என் |
| திருந்திழை மென் தோள் மணந்தவன் செய்த |
| அருந் துயர் நீக்குவேன் போல்மன் பொருந்துபு |
| பூக் கவின் கொண்ட புகழ் சால் எழில் உண்கண், |
5 | நோக்குங்கால் நோக்கின் அணங்கு ஆக்கும், சாயலாய்! தாக்கி |
| இன மீன் இகல் மாற வென்ற சின மீன் |
| எறி சுறா வான் மருப்புக் கோத்து, நெறி செய்த |
| நெய்தல் நெடு நார்ப் பிணித்து யாத்து, கை உளர்வின் |
| யாழ் இசை கொண்ட இன வண்டு இமிர்ந்து ஆர்ப்ப, |
10 | தாழாது உறைக்கும் தட மலர்த் தண் தாழை |
| வீழ் ஊசல் தூங்கப் பெறின் |
| மாழை மட மான் பிணை இயல் வென்றாய்! நின் ஊசல் |
| கடைஇ யான் இகுப்ப, நீடு ஊங்காய், தட மென் தோள் |
| நீத்தான் திறங்கள் பகர்ந்து |
15 | நாணினகொல், தோழி? நாணினகொல், தோழி? |
| இரவு எலாம் நல் தோழி நாணின என்பவை |
| வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர் மேல், |
| ஆனாப் பரிய அலவன் அளை புகூஉம் |
| கானல், கமழ் ஞாழல் வீ ஏய்ப்ப, தோழி! என் |
20 | மேனி சிதைத்தான் துறை |
| மாரி வீழ் இருங் கூந்தல், மதைஇய நோக்கு எழில் உண்கண், |
| தாழ் நீர முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய்! |
| தேயா நோய் செய்தான் திறம் கிளந்து நாம் பாடும் |
| சேய் உயர் ஊசல் சீர் நீ ஒன்று பாடித்தை |
25 | பார்த்து உற்றன, தோழி! பார்த்து உற்றன, தோழி! |
| இரவு எலாம், நல் தோழி! பார்த்து உற்றன என்பவை |
| 'தன் துணை இல்லாள் வருந்தினாள்கொல்?' என, |
| இன் துணை அன்றில் இரவின் அகவாவே |
| அன்று, தான் ஈர்த்த கரும்பு அணி வாட, என் |
30 | மென் தோள் ஞெகிழ்த்தான் துறை |
| தலைவி |
| கரை கவர் கொடுங் கழி, கண் கவர் புள்ளினம் |
| திரை உறப் பொன்றிய புலவு மீன் அல்லதை, |
| இரை உயிர் செகுத்து உண்ணாத் துறைவனை யாம் பாடும் |
| அசை வரல் ஊசல் சீர் அழித்து, ஒன்று பாடித்தை |
35 | அருளினகொல், தோழி? அருளினகொல், தோழி? |
| இரவு எலாம், தோழி! அருளின என்பவை |
| கணம் கொள் இடு மணல் காவி வருந்த, |
| பிணங்கு இரு மோட்ட திரை வந்து அளிக்கும் |
| மணம் கமழ் ஐம்பாலார் ஊடலை ஆங்கே |
40 | வணங்கி உணர்ப்பான் துறை |
| தோழி |
| என, நாம் |
| பாட, மறை நின்று கேட்டனன், நீடிய |
| வால் நீர்க் கிடக்கை வயங்கு நீர்ச் சேர்ப்பனை |
| யான் என உணர்ந்து, நீ நனி மருள, |
45 | தேன் இமிர் புன்னை பொருந்தி, |
| தான் ஊக்கினன், அவ் ஊசலை வந்தே |