| பல் மலர்ப் பழனத்த பாசடைத் தாமரை |
| இன் மலர் இமிர்பு ஊதும் துணை புணர் இருந் தும்பி, |
| உண்துறை உடைந்த பூப் புனல் சாய்ப்ப, புலந்து, ஊடி |
| பண்புடை நல் நாட்டுப் பகை தலை வந்தென, |
5 | அது கைவிட்டு அகன்று ஒரீஇ, காக்கிற்பான் குடை நீழற் |
| பதி படர்ந்து, இறைகொள்ளும் குடி போல பிறிதும் ஒரு |
| பொய்கை தேர்ந்து அலமரும் பொழுதினான், மொய் தப |
| இறை பகை தணிப்ப அக் குடி பதிப் பெயர்ந்தாங்கு, |
| நிறை புனல் நீங்க வந்து, அத் தும்பி அம் மலர்ப் |
10 | பறை தவிர்பு அசைவிடூஉம் பாய் புனல் நல் ஊர! |
| 'நீங்குங்கால் நிறம் சாய்ந்து, புணருங்கால் புகழ் பூத்து, |
| நாம் கொண்ட குறிப்பு, இவள் நலம்' என்னும் தகையோதான் |
| எரி இதழ் சோர்ந்து உக ஏதிலார்ப் புணர்ந்தமை |
| கரி கூறும் கண்ணியை, ஈங்கு எம் இல் வருவதை? |
15 | 'சுடர் நோக்கி மலர்ந்து, ஆங்கே படின் கூம்பும் மலர் போல், என் |
| தொடர் நீப்பின், தொகும், இவள் நலம்' என்னும் தகையோதான் |
| அலர் நாணிக் கரந்த நோய் கைம்மிக, பிறர் கூந்தல் |
| மலர் நாறும் மார்பினை, ஈங்கு எம் இல் வருவதை? |
| 'பெயின் நந்தி, வறப்பின் சாம், புலத்திற்குப் பெயல் போல், யான் |
20 | செலின் நந்தி, செறின் சாம்பும், இவள்' என்னும் தகையோதான் |
| முடி உற்ற கோதை போல் யாம் வாட, ஏதிலார் |
| தொடி உற்ற வடுக் காட்டி, ஈங்கு எம் இல் வருவதை? |
| ஆங்க |
| ஐய அமைந்தன்று; அனைத்தாகப் புக்கீமோ, |
25 | வெய்யாரும் வீழ்வாரும் வேறாக; கையின் |
| முகை மலர்ந்தன்ன முயக்கில் தகை இன்றே, |
| தண் பனி வைகல் எமக்கு? |