| புதல்வனை நோக்கித் தலைவி கூறுதல்
|
| மை அற விளங்கிய மணி மருள் அவ் வாய் தன் |
| மெய் பெறா மழலையின் விளங்கு பூண் நனைத்தர, |
| பொலம் பிறையுள் தாழ்ந்த புனை வினை உருள் கலன், |
| நலம் பெறு கமழ் சென்னி, நகையொடு துயல்வர, |
5 | உரு எஞ்சாது இடை காட்டும் உடை கழல் அம் துகில் |
| அரி பொலி கிண்கிணி ஆர்ப்பு ஓவா அடி தட்ப, |
| பாலோடு அலர்ந்த முலை மறந்து, முற்றத்துக் |
| கால் வல் தேர் கையின் இயக்கி, நடை பயிற்றா, |
| ஆல் அமர் செல்வன் அணி சால் பெரு விறல் |
10 | போல, வரும் என் உயிர்! |
| பெரும! விருந்தொடு கைதூவா எம்மையும் உள்ளாய், |
| பெருந் தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்ற, |
| திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப, |
| மருந்து ஓவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்றற்றா, |
15 | பெருந்தகாய்! கூறு, சில |
| தோழியை நோக்கித் தலைவி கூறிய செய்தி
|
| எல்லிழாய்! சேய் நின்று நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து, ஆங்கே |
| வாய் ஓடி, 'ஏனாதிப்பாடியம்' என்றற்றா, |
| 'நோய் நாம் தணிக்கும் மருந்து' எனப் பாராட்ட, |
| ஓவாது அடுத்து அடுத்து, 'அத்தத்தா!' என்பான் மாண |
20 | வேய் மென் தோள் வேய்த்திறம் சேர்த்தலும், மற்று, இவன் |
| வாயுள்ளின் போகான்அரோ |
| தலைவன் கேட்ப, தோழியை நோக்கித் தலைவி உரைத்தல்
|
| உள்ளி உழையே ஒருங்கு படை விடக் |
| கள்ளர் படர்தந்தது போல, தாம் எம்மை |
| எள்ளுமார் வந்தாரே, ஈங்கு |
| தலைவன்
|
25 | ஏதப்பாடு எண்ணி, புரிசை வியல் உள்ளோர் |
| கள்வரைக் காணாது, 'கண்டேம்' என்பார் போல, |
| சேய் நின்று, செய்யாத சொல்லிச் சினவல்; நின் |
| ஆணை கடக்கிற்பார் யார்? |
| தலைவி
|
| அதிர்வு இல் படிறு எருக்கி, வந்து என் மகன்மேல், |
30 | முதிர் பூண் முலை பொருத ஏதிலாள் முச்சி |
| உதிர் துகள் உக்க நின் ஆடை ஒலிப்ப |
| எதிர் வளி நின்றாய்; நீ செல் |
| தலைவன்
|
| இனி, 'எல்லா! யாம் தீதிலேம்' என்று தெளிப்பவும், கைந்நீவி |
| யாதொன்றும் எம்கண் மறுத்தரவு இல்லாயின், |
35 | மேதக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம், |
| தாவா விருப்பொடு கன்று யாத்துழிச் செல்லும் |
| ஆ போல் படர் தக, நாம் |