| தலைவி
|
| ஞாலம் வறம் தீரப் பெய்ய, குணக்கு ஏர்பு, |
| காலத்தில் தோன்றிய கொண்மூப் போல், எம் முலை |
| பாலொடு வீங்கத் தவ நெடிதாயினை; |
| புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு |
5 | புக்க வழி எல்லாம் கூறு |
| தோழி
|
| கூறுவேன்; மேயாயே போல வினவி, வழிமுறைக் |
| காயாமை வேண்டுவல், யான் |
| தலைவி
|
| காயேம். |
| தோழி கூற்றும், தலைவி புதல்வனைக் கடிதலும் |
10 | மடக் குறு மாக்களோடு ஓரை அயரும் |
| அடக்கம் இல் போழ்தின்கண், தந்தை காமுற்ற |
| தொடக்கத்துத் தாயுழைப் புக்காற்கு, அவளும் |
| மருப்புப் பூண் கையுறையாக அணிந்து, |
| 'பெருமான், நகைமுகம் காட்டு!' என்பாள் கண்ணீர் |
15 | சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன; மற்றும், |
| வழிமுறைத் தாயுழைப் புக்காற்கு, அவளும் |
| மயங்கு நோய் தாங்கி, மகன் எதிர் வந்து, |
| முயங்கினள் முத்தினள் நோக்கி, நினைந்தே, |
| 'நினக்கு யாம் யாரேம் ஆகுதும்?' என்று, |
20 | வனப்பு உறக் கொள்வன நாடி அணிந்தனள், |
| ஆங்கே, 'அரி மதர் உண்கண் பசப்ப நோய் செய்யும் |
| பெருமான் பரத்தைமை ஒவ்வாதி' என்றாள்; |
| அவட்கு இனிதாகி விடுத்தனன் போகித் |
| தலைக் கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர் |
25 | புலத் தகைப் புத்தேள் இல் புக்கான் அலைக்கு ஒரு |
| கோல் தா; நினக்கு அவள் யார் ஆகும்? எல்லா! |
| வருந்தி யாம் நோய் கூர, நுந்தையை என்றும் |
| பருந்து எறிந்தற்றாகக் கொள்ளும்; கொண்டாங்கே, |
| தொடியும் உகிரும் படையாக நுந்தை |
30 | கடியுடை மார்பின் சிறு கண்ணும் உட்காள், |
| வடுவும் குறித்தாங்கே செய்யும். விடு, இனி; |
| அன்ன பிறவும், பெருமான் அவள்வயின் |
| துன்னுதல் ஓம்பி, திறவது இல் முன்னி, நீ |
| ஐயம் இல்லாதவர் இல் ஒழிய, எம் போலக் |
35 | கையாறு உடையவர் இல் அல்லால் செல்லல்; |
| அமைந்தது, இனி நின் தொழில் |