| தலைவி
|
| யாரை நீ எம் இல் புகுதர்வாய்? ஓரும் |
| புதுவ மலர் தேரும் வண்டே போல் யாழ |
| வதுவை விழவு அணி வைகலும் காட்டினையாய் |
| மாட்டு மாட்டு ஓடி, மகளிர்த் தரத்தர, |
5 | பூட்டு மான் திண் தேர் புடைத்த மறுகு எல்லாம் |
| பாட்டு ஆதல் சான்ற நின் மாயப் பரத்தைமை |
| காட்டிய வந்தமை கைப்படுத்தேன் பண்டு எலாம் |
| கேட்டும் அறிவேன்மன், யான் |
| தலைவன்
|
| தெரி கோதை அம் நல்லாய்! தேறீயல் வேண்டும் |
10 | பொரு கரை வாய் சூழ்ந்த பூ மலி வையை |
| வரு புனல் ஆடத் தவிர்ந்தேன்; பெரிது என்னைச் |
| செய்யா மொழிவது எவன்? |
| தலைவி
|
| ஓஒ! புனல் ஆடினாய் எனவும் கேட்டேன்; புனல் ஆங்கே |
| நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக, |
15 | மாண் எழில் உண் கண் பிறழும் கயல் ஆக, |
| கார் மலர் வேய்ந்த கமழ் பூம் பரப்பு ஆகம், |
| நாணுச் சிறை அழித்து நன்பகல் வந்த அவ் |
| யாணர்ப் புதுப் புனல் ஆடினாய், முன் மாலை, |
| பாணன் புணையாகப் புக்கு |
20 | ஆனாது அளித்து அமர் காதலோடு அப் புனல் ஆடி, |
| வெளிப்படு கவ்வையை யான் அறிதல் அஞ்சி, |
| குளித்து ஒழுகினாய் எனவும் கேட்டேன்; குளித்தாங்கே |
| போர்த்த சினத்தான் புருவத் திரை இடா, |
| ஆர்க்கும் ஞெகிழத்தான் நல் நீர் நடை தட்பச் |
25 | சீர்த் தக வந்த புதுப் புனல் நின்னைக் கொண்டு, |
| ஈர்த்து உய்ப்பக் கண்டார் உளர் |
| ஈர்த்தது உரை சால் சிறப்பின் நின் நீர் உள்ளம் வாங்க, |
| புரை தீர் புதுப் புனல் வெள்ளத்தின் இன்னும் |
| கரை கண்டதூஉம் இலை |
| தலைவன்
|
30 | நிரைதொடீஇ! பொய்யா வாட் தானை, புனை கழற் கால், தென்னவன் |
| வையைப் புதுப் புனல் ஆடத் தவிர்ந்ததைத் |
| தெய்வத்தின் தேற்றித் தெளிப்பேன்; பெரிது என்னைச் |
| செய்யா மொழிவது எவன்? |
| தலைவி
|
| மெய்யதை மல்கு மலர் வேய்ந்த மாயப் புதுப் புனல் |
35 | பல் காலும் ஆடிய செல்வுழி, ஒல்கிக் |
| களைஞரும் இல் வழி, கால் ஆழ்ந்து தேரோடு |
| இள மணலுள் படல் ஓம்பு முளை நேர் |
| முறுவலார்க்கு ஓர் நகை செய்து |