எ - து. தனக்கு வலியைத்தரும் என்று கருதித் தான் 1வழிபட்ட தெய்வம் தன்னைச் சேர்ந்தவர்கட்கு நெஞ்சழியும் நோய் கைமிகும்படி வருத்தமாகிய தன்மைபோல நின்னைத்தனக்குவலியென்று 2வழிபட்டஎன்றோழியை நீ செய்த பழி எங்கும்பரந்து அலர்தூற்றுகையினாலே உண்டான மிக்க நினைவு வருத்த, நீங்குதல் கொடிதுகாணெனத் தோழி வரைவுகடாயினாள். எ - று. இதனால், தலைவிக்கு அசைவுபிறந்தது. இஃது ஒத்தாழிசைக்கலி. (15) (133). | மாமலர் முண்டகந் தில்லையோ டொருங்குடன் கான லணிந்த வுயர்மண லெக்கர்மேற் சீர்மிகு சிறப்பினோன் மரமுதற் கைசேர்த்த நீர்மலி கரகம்போற் பழந்தூங்கு முடத்தாழைப் பூமலர்ந் தவைபோலப் புள்ளல்குந் துறைவகேள்; | 6 | ஆற்றுதலென்பதொன் றலந்தவர்க் குதவுதல் போற்றுத லென்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பெனப்படுவது பாடறிந் தொழுகுத லன்பெனப் படுவது தன்கிளைசெறாஅமை | 10 | யறிவெனப்படுவது பேதையார் சொன்னோன்றல் செறிவெனப்படுவது கூறியது மறாஅமை நிறையெனப் படுவது மறைபிறரறியாமை முறையெனப் படுவது கண்ணோடா துயிர்வௌவல் பொறையெனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்; | 15 | ஆங்கதையறிந்தனி ராயினென் றோழி நன்னுத னலனுண்டு துறத்தல் கொண்க தீம்பா லுண்பவர் கொள்கலம் வரைத னின்றலை வருந்தியா டுயரஞ் சென்றனை களைமோ பூண்கநின் றேரே |
இது ‘‘வரைவு 3வுடம் பட்டோர்க் கடாவல் வேண்டினும்’’(1) என்பதனால் தலைவன் தெருளாதவனைத் தெருட்டி வரைவுகடாயது.
1. தொல். கள. சூ. 23. இச்சூத்திரத்தின் இவருரையிலும் இச்செய்யுள் முற்காலத்து வரைவுகடாவுமாறுபோ லன்றி வரைவு கடாயதற்கு மேற்கோள். (பிரதிபேதம்)1வழிப்பட், 2வழிப்பட்ட, 3உடன்பட்டோர்க் கடாவவேண்.
|