68 | காமக்கிழத்தி கூற்று
| | | பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு | | மதி மொழி இடல் மாலை வினைவர் போல், வல்லவர் | | செது மொழி சீத்த செவி செறு ஆக, | | முது மொழி நீரா, புலன் நா உழவர் | 5 | புது மொழி கூட்டுண்ணும், புரிசை சூழ், புனல் ஊர! | | 'ஊரன் மன் உரன் அல்லன், நமக்கு' என்ன, உடன், வாளாது, | | ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேராகி, | | களையா நின் குறி, வந்து எம் கதவம் சேர்ந்து அசைத்த கை | | வளையின்வாய் விடல் மாலை மகளிரை நோவேமோ | 10 | 'கேள் அலன், நமக்கு அவன்; குறுகன்மின்' என, மற்று எம் | | தோளொடு பகைபட்டு நினை வாடு நெஞ்சத்தேம்? | | 'ஊடியார் நலம் தேம்ப, ஒடியெறிந்து, அவர்வயின் | | மால் தீர்க்கும் அவன் மார்பு' என்று எழுந்த சொல் நோவேமோ | | முகை வாய்த்த முலை பாயக் குழைந்த நின் தார் எள்ள, | 15 | வகை வரிச் செப்பினுள் வைகிய கோதையேம்? | | சேரியால் சென்று, நீ சேர்ந்த இல் வினாயினன், | | தேரொடு திரிதரும் பாகனைப் பழிப்பேமோ | | ஒலி கொண்ட சும்மையான் மண மனை குறித்து, எம் இல், | | 'பொலிக' எனப் புகுந்த நின் புலையனைக் கண்ட யாம்? | 20 | என ஆங்கு | | நனவினான் வேறாகும் வேளா முயக்கம் | | மனை வரின், பெற்று உவந்து, மற்று எம் தோள் வாட, | | 'இனையர்' என உணர்ந்தார் என்று ஏக்கற்று, ஆங்கு, | | கனவினான் எய்திய செல்வத்து அனையதே | 25 | ஐய எமக்கு நின் மார்பு |
| | பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைவனொடு ஊடிய காமக்கிழத்தி தன் காதல் மிகுதி கூறி, ஊடியவாறு கண்டு, சென்று சார்ந்த தலைமகனுடன் ஊடல் தீர்கின்றாள் கூறியது |
|
|
69 | காமக்கிழத்தி கூற்று
| | | போது அவிழ் பனிப் பொய்கை, புதுவது தளைவிட்ட | | தாது சூழ் தாமரைத் தனி மலர்ப் புறம் சேர்பு | | காதல் கொள் வதுவை நாள், கலிங்கத்துள் ஒடுங்கிய | | மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணையாக, | 5 | ஓதுடை அந்தணன் எரி வலம் செய்வான் போல், | | ஆய் தூவி அன்னம் தன் அணி நடைப் பெடையொடு | | மேதகத் திரிதரூஉம் மிகு புனல் நல் ஊர! | | தெள் அரிச் சிலம்பு ஆர்ப்ப, தெருவின்கண் தாக்கி, நின் | | உள்ளம் கொண்டு, ஒழித்தாளைக் குறை கூறிக் கொள நின்றாய் | 10 | துணிந்தது பிறிதாக, 'துணிவிலள் இவள்' என, | | பணிந்தாய் போல் வந்து, ஈண்டுப் பயனில மொழிவாயோ? | | பட்டுழி அறியாது, பாகனைத் தேரொடும் | | விட்டு, அவள் வரல் நோக்கி, விருந்து ஏற்றுக்கொள நின்றாய் | | நெஞ்சத்த பிறவாக, 'நிறையிலள் இவள்' என, | 15 | வஞ்சத்தான் வந்து, ஈங்கு வலி அலைத்தீவாயோ? | | இணர் ததை தண் காவின், இயன்ற நின் குறி வந்தாள் | | புணர்வினில் புகன்று, ஆங்கே புனலாடப் பண்ணியாய் | | தருக்கிய பிறவாக, 'தன் இலள் இவள்' என, | | செருக்கினால் வந்து, ஈங்குச் சொல் உகுத்தீவாயோ? | 20 | என ஆங்கு | | தருக்கேம், பெரும! நின் நல்கல்; விருப்புற்றுத் | | தாழ்ந்தாய் போல் வந்து, தகவில செய்யாது, | | சூழ்ந்தவை செய்து, மற்று எம்மையும் உள்ளுவாய் | | வீழ்ந்தார் விருப்பு அற்றக்கால் |
| |
|
71 | காமக்கிழத்தி கூற்று
| | | விரி கதிர் மண்டிலம் வியல் விசும்பு ஊர்தர, | | புரி தலை தளை அவிழ்ந்த பூ அங்கண் புணர்ந்து ஆடி, | | வரி வண்டு வாய் சூழும் வளம் கெழு பொய்கையுள் | | துனி சிறந்து இழிதரும் கண்ணின் நீர் அறல் வார, | 5 | இனிது அமர் காதலன் இறைஞ்சித் தன் அடி சேர்பு, | | நனி விரைந்து அளித்தலின், நகுபவள் முகம் போல | | பனி ஒரு திறம் வார, பாசடைத் தாமரைத் | | தனி மலர் தளை விடூஉம் தண் துறை நல் ஊர! | | 'ஒரு நீ பிறர் இல்லை, அவன் பெண்டிர்' என உரைத்து, | 10 | தேரொடும் தேற்றிய பாகன் வந்தீயான்கொல் | | ஓர் இல் தான் கொணர்ந்து உய்த்தார் புலவியுள் பொறித்த புண் | | பாரித்துப் புணர்ந்த நின் பரத்தைமை காணிய? | | 'மடுத்து அவன் புகுவழி மறையேன்' என்று யாழொடும் | | எடுத்துச் சூள் பல உற்ற பாணன் வந்தீயான்கொல் | 15 | அடுத்துத் தன் பொய் உண்டார்ப் புணர்ந்த நின் எருத்தின்கண் | | எடுத்துக்கொள்வது போலும் தொடி வடுக் காணிய? | | 'தணந்தனை' எனக் கேட்டு, தவறு ஓராது, எமக்கு நின் | | குணங்களைப் பாராட்டும் தோழன் வந்தீயான்கொல் | | கணங்குழை நல்லவர் கதுப்பு அறல் அணைத் துஞ்சி, | 20 | அணங்கு போல் கமழும் நின் அலர் மார்பு காணிய? | | என்று, நின் | | தீரா முயக்கம் பெறுநர்ப் புலப்பவர் | | யார்? நீ வரு நாள் போல் அமைகுவம் யாம்; புக்கீமோ! | | மாரிக்கு அவாவுற்றுப் பீள் வாடும் நெல்லிற்கு, ஆங்கு, | 25 | ஆராத் துவலை அளித்தது போலும், நீ | | ஓர் யாட்டு ஒரு கால் வரவு |
| | பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனது வரவு கண்டு, ஊடிய காமக்கிழத்தி ஊடியவாறு கண்டு சென்று சார்ந்த தலைவனுடன், அவள் ஊடல் தீர்கின்றாள், கூறியது |
|
|
72 | காமக்கிழத்தி கூற்று
| | | இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள், | | துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசைஇ, | | சேடு இயல் வள்ளத்துப் பெய்த பால் சில காட்டி, | | ஊடும் மென் சிறு கிளி உணர்ப்பவள் முகம் போல, | 5 | புது நீர புதல், ஒற்றப் புணர் திரைப் பிதிர் மல்க, | | மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் வால் மலர் நண்ணி, | | கடி கயத் தாமரைக் கமழ் முகை, கரை மாவின் | | வடி தீண்ட, வாய் விடூஉம் வயல் அணி நல் ஊர! | | கண்ணி, நீ கடி கொண்டார்க் கனைதொறும், யாம் அழ, | 10 | பண்ணினால் களிப்பிக்கும் பாணன் காட்டு என்றானோ | | 'பேணான்' என்று உடன்றவர் உகிர் செய்த வடுவினான், | | மேல் நாள், நின் தோள் சேர்ந்தார் நகை சேர்ந்த இதழினை? | | நாடி நின் தூது ஆடி, துறை செல்லாள், ஊரவர் | | ஆடை கொண்டு, ஒலிக்கும், நின் புலைத்தி காட்டு என்றாளோ | 15 | கூடியார் புனல் ஆடப் புணை ஆய மார்பினில், | | ஊடியார் எறிதர, ஒளி விட்ட அரக்கினை? | | வெறிது நின் புகழ்களை வேண்டார் இல் எடுத்து ஏத்தும் | | அறிவுடை அந்தணன் அவளைக் காட்டு என்றானோ | | களி பட்டார் கமழ் கோதை கயம்பட்ட உருவின்மேல் | 20 | குறி பெற்றார் குரற் கூந்தற் கோடு உளர்ந்த துகளினை? | | என ஆங்கு | | செறிவுற்றேம், எம்மை நீ செறிய; அறிவுற்று, | | அழிந்து உகு நெஞ்சத்தேம்; அல்லல் உழப்ப; | | கழிந்தவை உள்ளாது, கண்ட இடத்தே, | 25 | அழிந்து நிற் பேணிக் கொளலின் இழிந்ததோ | | இந் நோய் உழத்தல் எமக்கு? |
| |
|
74 | காமக்கிழத்தி கூற்று
| | | பொய்கைப் பூப் புதிது உண்ட வரி வண்டு கழிப் பூத்த | | நெய்தல் தாது அமர்ந்து ஆடி, பாசடைச் சேப்பினுள் | | செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை, | | மை தபு, கிளர் கொட்டை மாண் பதிப் படர்தரூஉம், | 5 | கொய் குழை அகை காஞ்சித் துறை அணி நல் ஊர! | | 'அன்பு இலன், அறன் இலன், எனப்படான்' என ஏத்தி, | | நின் புகழ் பல பாடும் பாணனும் ஏமுற்றான் | | நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டாங்கு, அளி இன்மை | | கண்டும், நின் மொழி தேறும் பெண்டிரும் ஏமுற்றார் | 10 | முன்பகல் தலைக்கூடி, நன்பகல் அவள் நீத்து, | | பின்பகல் பிறர்த் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய் | | என ஆங்கு | | 'கிண்கிணி மணித் தாரோடு ஒலித்து ஆர்ப்ப, ஒண் தொடிப் | | பேர் அமர்க் கண்ணார்க்கும் படு வலை இது' என, | 15 | ஊரவர் உடன் நகத் திரிதரும் | | தேர் ஏமுற்றன்று, நின்னினும் பெரிதே |
| | பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனொடு ஊடிய காமக்கிழத்தியை, அவன் 'இவ்வகையான கூற, நீ ஏமுற்றாயோ?' என்றாற்கு அவன் கூறியது |
|
|
78 | காமக்கிழத்தி கூற்று
| | | பல் மலர்ப் பழனத்த பாசடைத் தாமரை | | இன் மலர் இமிர்பு ஊதும் துணை புணர் இருந் தும்பி, | | உண்துறை உடைந்த பூப் புனல் சாய்ப்ப, புலந்து, ஊடி | | பண்புடை நல் நாட்டுப் பகை தலை வந்தென, | 5 | அது கைவிட்டு அகன்று ஒரீஇ, காக்கிற்பான் குடை நீழற் | | பதி படர்ந்து, இறைகொள்ளும் குடி போல பிறிதும் ஒரு | | பொய்கை தேர்ந்து அலமரும் பொழுதினான், மொய் தப | | இறை பகை தணிப்ப அக் குடி பதிப் பெயர்ந்தாங்கு, | | நிறை புனல் நீங்க வந்து, அத் தும்பி அம் மலர்ப் | 10 | பறை தவிர்பு அசைவிடூஉம் பாய் புனல் நல் ஊர! | | 'நீங்குங்கால் நிறம் சாய்ந்து, புணருங்கால் புகழ் பூத்து, | | நாம் கொண்ட குறிப்பு, இவள் நலம்' என்னும் தகையோதான் | | எரி இதழ் சோர்ந்து உக ஏதிலார்ப் புணர்ந்தமை | | கரி கூறும் கண்ணியை, ஈங்கு எம் இல் வருவதை? | 15 | 'சுடர் நோக்கி மலர்ந்து, ஆங்கே படின் கூம்பும் மலர் போல், என் | | தொடர் நீப்பின், தொகும், இவள் நலம்' என்னும் தகையோதான் | | அலர் நாணிக் கரந்த நோய் கைம்மிக, பிறர் கூந்தல் | | மலர் நாறும் மார்பினை, ஈங்கு எம் இல் வருவதை? | | 'பெயின் நந்தி, வறப்பின் சாம், புலத்திற்குப் பெயல் போல், யான் | 20 | செலின் நந்தி, செறின் சாம்பும், இவள்' என்னும் தகையோதான் | | முடி உற்ற கோதை போல் யாம் வாட, ஏதிலார் | | தொடி உற்ற வடுக் காட்டி, ஈங்கு எம் இல் வருவதை? | | ஆங்க | | ஐய அமைந்தன்று; அனைத்தாகப் புக்கீமோ, | 25 | வெய்யாரும் வீழ்வாரும் வேறாக; கையின் | | முகை மலர்ந்தன்ன முயக்கில் தகை இன்றே, | | தண் பனி வைகல் எமக்கு? |
| | பரத்தையர் சேரியில் சென்று வந்த தலைவனோடு ஊடிய காமக்கிழத்தி ஊடல் தீர்கின்றாள் கூறியது |
|
|
90 | காமக்கிழத்தி கூற்று
| | | தலைவி | | கண்டேன், நின் மாயம் களவு ஆதல்; பொய்ந் நகா, | | மண்டாத சொல்லித் தொடாஅல்; தொடீஇய நின் | | பெண்டிர் உளர்மன்னோ, ஈங்கு? | | தலைவன் | | ஒண்தொடி! நீ கண்டது எவனோ தவறு? | | தலைவி | 5 | கண்டது நோயும் வடுவும் கரந்து, மகிழ் செருக்கி, | | பாடு பெயல் நின்ற பானாள் இரவில் | | தொடி பொலி தோளும், முலையும், கதுப்பும், | | வடிவு ஆர் குழையும், இழையும், பொறையா | | ஒடிவது போலும் நுசுப்போடு, அடி தளரா, | 10 | ஆராக் கவவின் ஒருத்தி வந்து அல்கல் தன் | | சீர் ஆர் ஞெகிழம் சிலம்ப, சிவந்து, நின் | | போர் ஆர் கதவம் மிதித்தது அமையுமோ? | | ஆயிழை ஆர்க்கும் ஒலி கேளா, அவ் எதிர் | | தாழாது எழுந்து நீ சென்றது அமையுமோ? | 15 | மாறாள் சினைஇ, அவள் ஆங்கே, நின் மார்பில் | | நாறு இணர்ப் பைந் தார் பரிந்தது அமையுமோ? | | 'தேறு நீ; தீயேன் அலேன்' என்று மற்று அவள் | | சீறடி தோயா இறுத்தது அமையுமோ? | | கூறு இனி; காயேமோ, யாம்? | | தலைவன் | 20 | தேறின், பிறவும் தவறு இலேன் யான்; | | அல்கல் கனவுகொல் நீ கண்டது? | | தலைவி | | 'கனை பெயல் தண் துளி வீசும் பொழுதில் குறி வந்தாள் | | கண்ட கனவு' என, 'காணாது, மாறு உற்று | | பண்டைய அல்ல, நின் பொய்ச் சூள், நினக்கு; எல்லா! | 25 | நின்றாய்; நின் புக்கில் பல' | | தலைவன் | | மென் தோளாய்! நல்கு, நின் நல் எழில்; உண்கு | | தலைவி
| | ஏடா! குறை உற்று நீ எம் உரையல்! நின் தீமை | | பொறை ஆற்றேம் என்றல் பெறுதுமோ, யாழ | 30 | நிறை ஆற்றா நெஞ்சு உடையேம்? |
| | 'புல்லுதல் மயக்கும் புலவிக்கண்ணும்' என்பதனால், தலைவன் புலப்படப் பரத்தையரிடத்து ஒழுகாது மறைந்து ஒழுகி வந்து நின்றவனுடன் காமக் கிழத்தி ஊடிச் சொல்லி, தலைமகன் ஆற்றாமை கண்டு, தன் ஆற்றமையும் சொல்லி, ஊடல் தீர்ந்தது |
|
|
91 | காமக்கிழத்தி கூற்று
| | | தலைவி
| | அரி நீர் அவிழ் நீலம், அல்லி, அனிச்சம், | | புரி நெகிழ் முல்லை, நறவோடு, அமைந்த | | தெரி மலர்க் கண்ணியும் தாரும் நயந்தார் | | பொரு முரண் சீறச் சிதைந்து, நெருநையின் | 5 | இன்று நன்று, என்னை அணி | | தலைவன்
| | அணை மென் தோளாய்! செய்யாத சொல்லிச் சினவுவது ஈங்குஎவன், | | ஐயத்தால்? என்னைக் கதியாதி; தீது இன்மை | | தெய்வத்தான் கண்டீ தெளிக்கு | | தலைவி
| | மற்றது, அறிவல், யான் நின் சூள்; அனைத்தாக நல்லார் | 10 | செறி தொடி உற்ற வடுவும், குறி பொய்த்தார் | | கூர் உகிர் சாடிய மார்பும், குழைந்த நின் | | தாரும், ததர் பட்ட சாந்தமும், சேரி | | அரி மதர் உண் கண்ணார் ஆராக் கவவின், | | பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு, யானும் | 15 | செரு ஒழிந்தேன்; சென்றீ, இனி | | தலைவன்
| | தெரியிழாய்! தேற்றாய் சிவந்தனை காண்பாய், நீ தீது இன்மை | | ஆற்றின் நிறுப்பல் பணிந்து | | தலைவி
| | அன்னதேல், ஆற்றல் காண்: | | வேறுபட்டாங்கே கலுழ்தி; அகப்படின், | 20 | மாறுபட்டாங்கே மயங்குதி; யாது ஒன்றும் | | கூறி உணர்த்தலும் வேண்டாது; மற்று நீ | | மாணா செயினும், மறுத்து, ஆங்கே நின்வயின் | | காணின் நெகிழும் என் நெஞ்சு ஆயின், என் உற்றாய், | | பேணாய் நீ பெட்பச் செயல்? |
| |
|