| ‘அருந்தவம் ஆற்றியார் நுகர்ச்சி போல், அணி கொள |
| விரிந்து ஆனாச் சினை தொறூஉம், வேண்டும் தாது அமர்ந்து ஆடி, |
| புரிந்து ஆர்க்கும் வண்டொடு, புலம்பு தீர்ந்து எவ் வாயும், |
| இருந் தும்பி, இறை கொள எதிரிய வேனிலான் |
5 | துயில் இன்றி யாம் நீந்த, தொழுவை அம் புனல் ஆடி, |
| மயில் இயலார் மரு உண்டு, மறந்து அமைகுவான்மன்னோ |
| ‘வெயில் ஒளி அறியாத விரி மலர்த் தண் காவில் |
| குயில் ஆலும் பொழுது’ எனக் கூறுநர் உளராயின் |
| பானாள் யாம் படர் கூர, பணை எழில் அணை மென் தோள் |
10 | மான் நோக்கினவரோடு மறந்து அமைகுவான்மன்னோ |
| ‘ஆனாச் சீர்க் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை, |
| தேன் ஆர்க்கும் பொழுது’ எனத் தெளிக்குநர் உளராயின் |
| உறல் யாம் ஒளி வாட, உயர்ந்தவன் விழவினுள் |
| விறல் இழையவரோடு விளையாடுவான்மன்னோ |
15 | ‘பெறல் அரும் பொழுதோடு, பிறங்கு இணர்த் துருத்தி சூழ்ந்து, |
| அறல் வாரும், வையை' என்று அறையுநர் உளராயின்’ |
| என ஆங்கு, |
| தணியா நோய் உழந்து ஆனாத் தகையவள் தகை பெற, |
| அணி கிளர் நெடுந் திண் தேர் அயர்மதி பணிபு நின் |
20 | காமர் கழல் அடி சேரா |
| நாமம் சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே |