'பாணன் கூற்று' என்ற சொல் உள்ள பக்கங்கள்
30
பாணன் கூற்று

‘அருந்தவம் ஆற்றியார் நுகர்ச்சி போல், அணி கொள
விரிந்து ஆனாச் சினை தொறூஉம், வேண்டும் தாது அமர்ந்து ஆடி,
புரிந்து ஆர்க்கும் வண்டொடு, புலம்பு தீர்ந்து எவ் வாயும்,
இருந் தும்பி, இறை கொள எதிரிய வேனிலான்
5துயில் இன்றி யாம் நீந்த, தொழுவை அம் புனல் ஆடி,
மயில் இயலார் மரு உண்டு, மறந்து அமைகுவான்மன்னோ
‘வெயில் ஒளி அறியாத விரி மலர்த் தண் காவில்
குயில் ஆலும் பொழுது’ எனக் கூறுநர் உளராயின்
பானாள் யாம் படர் கூர, பணை எழில் அணை மென் தோள்
10மான் நோக்கினவரோடு மறந்து அமைகுவான்மன்னோ
‘ஆனாச் சீர்க் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை,
தேன் ஆர்க்கும் பொழுது’ எனத் தெளிக்குநர் உளராயின்
உறல் யாம் ஒளி வாட, உயர்ந்தவன் விழவினுள்
விறல் இழையவரோடு விளையாடுவான்மன்னோ
15‘பெறல் அரும் பொழுதோடு, பிறங்கு இணர்த் துருத்தி சூழ்ந்து,
அறல் வாரும், வையை' என்று அறையுநர் உளராயின்’
என ஆங்கு,
தணியா நோய் உழந்து ஆனாத் தகையவள் தகை பெற,
அணி கிளர் நெடுந் திண் தேர் அயர்மதி பணிபு நின்
20காமர் கழல் அடி சேரா
நாமம் சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே

பருவ வரவின்கண் ஆற்றாத தலைமகள் இறந்தது சிந்தித்து, ‘நம்மாட்டு அன்பிலராயினும், இக் காலத்து, இவ் ஊரின்கண், பண்டு தாம் விளையாடியவாறு நினைந்து வருவர், இக் கால வரவு சொல்லுவார் உளராயின்’ எனக் கேட்ட பாணன் பாசறைக்கண் சென்று, தலைவனைக் கண்டு கூறியது(29)