|
1 | கடவுள் வாழ்த்து
| | | ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து, | | தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்து, | | கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடுங் கூளி | | மாறாப் போர், மணி மிடற்று, எண் கையாய்! கேள், இனி: | 5 | படு பறை பல இயம்ப, பல் உருவம் பெயர்த்து நீ, | | கொடுகொட்டி ஆடுங்கால், கோடு உயர் அகல் அல்குல், | | கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ? | | மண்டு அமர் பல கடந்து, மதுகையால் நீறு அணிந்து, | | பண்டரங்கம் ஆடுங்கால், பணை எழில் அணை மென் தோள், | 10 | வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ? | | கொலை உழுவைத் தோல் அசைஇ, கொன்றைத் தார் சுவல் புரள, | | தலை அங்கை கொண்டு, நீ காபாலம் ஆடுங்கால், | | முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ? | | என ஆங்கு | 15 | பாணியும், தூக்கும், சீரும், என்று இவை | | மாண் இழை அரிவை காப்ப, | | ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை, ஆடி |
| | என்பது, ‘வாழ்த்தியல் வகையே நாற் பாக்கும் உரித்தே’ என்றதின்கண்,‘வகை’ என்றதனால் கொண்ட அறுமுறை வாழ்த்து அன்றி, தனக்குப் பயன்படும்படி முன்னிலையாகக் கடவுளை வாழ்த்துதலின், ‘கடவுள் வாழ்த்து’ எனப் பெயர் பெற்றது
|
|
|
|