| வறியவன் இளமை போல், வாடிய சினையவாய், |
| சிறியவன் செல்வம் போல், சேர்ந்தார்க்கு நிழல் இன்றி, |
| யார்கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல், |
| வேரொடு மரம் வெம்ப, விரி கதிர் தெறுதலின், |
5 | அலவுற்றுக் குடி கூவ, ஆறு இன்றிப் பொருள் வெஃகி, |
| கொலை அஞ்சா வினைவரால், கோல் கோடியவன் நிழல் |
| உலகு போல், உலறிய உயர் மர வெஞ் சுரம் |
| இடை கொண்டு பொருள்வயின் இறத்தி நீ எனக் கேட்பின், |
| உடைபு நெஞ்சு உக, ஆங்கே ஒளியோடற்பாள்மன்னோ |
10 | படை அமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ |
| புடைபெயர்வாய்ஆயினும், புலம்பு கொண்டு இனைபவள்? |
| முனிவு இன்றி முயல் பொருட்கு இறத்தி நீ எனக் கேட்பின், |
| பனிய கண் படல் ஒல்லா படர் கூர்கிற்பாள்மன்னோ |
| நனி கொண்ட சாயலாள் நயந்து நீ நகையாகத் |
15 | துனி செய்து நீடினும், துறப்பு அஞ்சிக் கலுழ்பவள்? |
| பொருள் நோக்கிப் பிரிந்து நீ போகுதி எனக் கேட்பின், |
| மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல் கூர்கிற்பாள்மன்னோ |
| இருள் நோக்கம் இடையின்றி, ஈரத்தின் இயன்ற நின் |
| அருள் நோக்கம் அழியினும், அவலம் கொண்டு அழிபவள்? |
20 | என ஆங்கு |
| ‘வினை வெஃகி நீ செலின், விடும் இவள் உயிர்’ என, |
| புனையிழாய்! நின் நிலை யான் கூற, பையென, |
| நிலவு வேல் நெடுந் தகை நீள் இடைச் |
| செலவு ஒழிந்தனனால்; செறிக, நின் வளையே! |