| தோழி தலைவிக்கு ஏறு தழுவுதலைச் சுட்டிக்காட்டுதல்
|
| தளி பெறு தண் புலத்துத் தலைப் பெயற்கு அரும்பு ஈன்று, |
| முளி முதல் பொதுளிய, முட் புறப் பிடவமும்; |
| களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று, |
| ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ்க் கோடலும்; |
| 5 | மணி புரை உருவின காயாவும்; பிறவும்; |
| | அணி கொள மலைந்த கண்ணியர் தொகுபு உடன், |
| மாறு எதிர்கொண்ட தம் மைந்துடன் நிறுமார், |
| சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ, |
| | ஏறு தொழூஉப் புகுத்தனர், இயைபுடன் ஒருங்கு |
| 10 | அவ் வழி, முழக்கு என, இடி என, முன் சமத்து ஆர்ப்ப |
| வழக்கு மாறு கொண்டு, வருபு வருபு ஈண்டி |
| நறையொடு துகள் எழ நல்லவர் அணி நிற்ப, |
| துறையும் ஆலமும் தொல் வலி மராஅமும் |
| முறையுளி பராஅய், பாய்ந்தனர், தொழூஉ |
| 15 | மேற் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குருக் கண் |
| நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக் குத்தி, |
| கோட்டிடைக் கொண்டு, குலைப்பதன் தோற்றம் காண் |
| அம் சீர் அசைஇயல் கூந்தற் கை நீட்டியான் |
| நெஞ்சம் பிளந்து இட்டு, நேரார் நடுவண், தன் |
| 20 | வஞ்சினம் வாய்த்தானும் போன்ம் |
| | சுடர் விரிந்தன்ன சுரி நெற்றிக் காரி |
| | விடரி அம் கண்ணிப் பொதுவனைச் சாடி, |
| | குடர் சொரியக் குத்தி, குலைப்பதன் தோற்றம் காண் |
| படர் அணி அந்தி, பசுங் கட் கடவுள் |
| 25 | இடரிய ஏற்று எருமை நெஞ்சு இடந்து இட்டு, |
| குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம் |
| | செவி மறை நேர் மின்னும் நுண் பொறி வெள்ளைக் |
| | கதன் அஞ்சான், பாய்ந்த பொதுவனைச் சாடி, |
| | நுதி நுனைக் கோட்டால் குலைப்பதன் தோற்றம் காண் |
| 30 | ஆர் இருள் என்னான் அருங் கங்குல் வந்து, தன் |
| தாளின் கடந்து அட்டு, தந்தையைக் கொன்றானைத் |
| தோளின் திருகுவான் போன்ம் |
| அது கண்டு தலைவி கொண்ட அச்சம் போக்க, தோழி நல் நிமித்தம் கண்டு கூறுதல்
|
| | என ஆங்கு |
| | அணி மாலைக் கேள்வற் தரூஉமார், ஆயர் |
| 35 | மணி மாலை ஊதும் குழல் |
| | கடாஅக் களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை |
| | விடாஅது நீ கொள்குவை, ஆயின்; படாஅகை |
| | ஈன்றன, ஆய மகள் தோள் |
| | பகலிடக் கண்ணியன், பைதற் குழலன், |
| 40 | சுவல்மிசைக் கோல் அசைத்த கையன், அயலது; |
| | கொல் ஏறு சாட இருந்தார்க்கு, எம் பல் இருங் |
| | கூந்தல் அணை கொடுப்பேம், யாம் |
| | 'கோளாளர் என் ஒப்பார் இல்' என நம் ஆனுள், |
| | தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கு, ஒரு நாள், |
| 45 | கேளாளன் ஆகாமை இல்லை; அவற் கண்டு |
| | வேளாண்மை செய்தன கண் |
| | ஆங்கு, ஏறும் வருந்தின; ஆயரும் புண் கூர்ந்தார்; |
| | நாறு இருங் கூந்தற் பொதுமகளிர் எல்லாரும் |
| | முல்லைஅம் தண் பொழில் புக்கார், பொதுவரோடு, |
| 50 | எல்லாம் புணர் குறிக் கொண்டு |