| ஏறு கோடல்
|
| கழுவொடு சுடு படை சுருக்கிய தோற்கண், |
| இமிழ் இசை மண்டை உறியொடு, தூக்கி, |
| ஒழுகிய கொன்றைத் தீம் குழல் முரற்சியர், |
| வழூஉச் சொற் கோவலர், தத்தம் இன நிரை |
5 | பொழுதொடு தோன்றிய கார் நனை வியன் புலத்தார் |
| அவ்வழி, |
| நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை, |
| மாறு ஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய் |
| துளங்கு இமில் நல் ஏற்றினம் பல களம் புகும் |
10 | மள்ளர் வனப்பு ஒத்தன |
| தாக்குபு தம்முள் பெயர்த்து ஒற்றி, எவ் வாயும், |
| வை வாய் மருப்பினான் மாறாது குத்தலின், |
| மெய் வார் குருதிய, ஏறு எல்லாம் பெய் காலைக் |
| கொண்டல் நிரை ஒத்தன |
15 | அவ் ஏற்றை, |
| பிரிவு கொண்டு, இடைப் போக்கி, இனத்தோடு புனத்து ஏற்றி, |
| இரு திறனா நீக்கும் பொதுவர் |
| உரு கெழு மா நிலம் இயற்றுவான், |
| விரி திரை நீக்குவான், வியன் குறிப்பு ஒத்தனர் |
20 | அவரை, கழல உழக்கி, எதிர் சென்று சாடி, |
| அழல் வாய் மருப்பினால் குத்தி, உழலை |
| மரத்தைப் போல் தொட்டன ஏறு |
| தொட்ட தம், புண் வார் குருதியால் கை பிசைந்து, மெய் திமிரி, |
| தங்கார் பொதுவர் கடலுள் பரதவர் |
25 | அம்பி ஊர்ந்தாங்கு, ஊர்ந்தார், ஏறு |
| ஏறு தம், கோலம் செய் மருப்பினால் தோண்டிய வரிக் குடர் |
| ஞாலம் கொண்டு எழூஉம் பருந்தின் வாய் வழீஇ, |
| ஆலும் கடம்பும் அணிமார் விலங்கிட்ட |
| மாலை போல், தூங்கும் சினை |
| குரவை ஆடுதல்
|
30 | ஆங்கு, |
| தம் புல ஏறு பரத்தர உய்த்த தம் |
| அன்பு உறு காதலர் கை பிணைந்து, ஆய்ச்சியர் |
| இன்புற்று அயர்வர், தழூஉ |
| முயங்கிப் பொதிவேம்; முயங்கிப் பொதிவேம்; |
35 | முலை வேதின் ஒற்றி, முயங்கிப் பொதிவேம் |
| கொலை ஏறு சாடிய புண்ணை எம் கேளே! |
| பல் ஊழ் தயிர் கடையத் தாஅய புள்ளி மேல் |
| கொல் ஏறு கொண்டான் குருதி மயக்குறப் |
| புல்லல் எம் தோளிற்கு அணியோ? எம் கேளே! |
40 | ஆங்கு, போர் ஏற்று அருந் தலை அஞ்சலும், ஆய்ச்சியர் |
| காரிகைத் தோள் காமுறுதலும், இவ் இரண்டும் |
| ஓராங்குச் சேறல் இலவோ? எம் கேளே! |
| 'கொல் ஏறு கொண்டான், இவள் கேள்வன்' என்று, ஊரார் |
| சொல்லும் சொல் கேளா, அளை மாறி யாம் வரும் |
45 | செல்வம் எம் கேள்வன் தருமோ? எம் கேளே |
| 'தென்னன் வாழ்க!' எனக் கானத்தைப் பாடுதல் |
| ஆங்க, |
| அருந் தலை ஏற்றொடு காதலர்ப் பேணி, |
| சுரும்பு இமிர் கானம் நாம் பாடினம் பரவுதும்; |
50 | ஏற்றவர் புலம் கெடத் திறை கொண்டு, |
| மாற்றாரைக் கடக்க, எம் மறம் கெழு கோவே! |