| தலைவி
|
| எல்லா! இஃது ஒன்று கூறு குறும்பு இவர் |
| புல்லினத்தார்க்கும், குடம் சுட்டவர்க்கும், 'எம் |
| கொல் ஏறு கோடல் குறை' என, கோவினத்தார் |
| பல் ஏறு பெய்தார் தொழூஉ |
5 | தொழுவத்து, |
| சில்லைச் செவி மறைக் கொண்டவன் சென்னிக் குவி முல்லைக் |
| கோட்டம் காழ் கோட்டின் எடுத்துக்கொண்டு, ஆட்டிய |
| ஏழை இரும் புகர் பொங்க, அப் பூ வந்து என் |
| கூழையுள் வீழ்ந்தன்று மன் |
10 | அதனை, கெடுத்தது பெற்றார் போல், கொண்டு யான் முடித்தது |
| கேட்டனள், என்பவோ, யாய்? |
| தோழி
|
| கேட்டால், எவன் செய்ய வேண்டுமோ? மற்று, இகா! |
| அவன் கண்ணி அன்றோ, அது? |
| தலைவி
|
| 'பெய் போது அறியாத் தன் கூழையுள் ஏதிலான் |
15 | கை புனை கண்ணி முடித்தாள், என்று, யாய் கேட்பின், |
| செய்வது இலாகுமோ மற்று? |
| தோழி
|
| எல்லாத் தவறும் அறும் |
| தலைவி
|
| ஓஒ! அஃது அறுமாறு? |
| தோழி தவறு அன்றாமாறு கூறலும் தலைவி பதிலும்
|
| 'ஆயர் மகன் ஆயின், ஆய மகள் நீ ஆயின், |
20 | நின் வெய்யன்ஆயின், அவன் வெய்யை நீ ஆயின், |
| அன்னை நோதக்கதோ இல்லைமன்' 'நின் நெஞ்சம், |
| அன்னை நெஞ்சு, ஆகப் பெறின்' |
| தோழி
|
| அன்னையோ? |
| ஆயர் மகனையும் காதலை, கைம்மிக |
25 | ஞாயையும் அஞ்சுதிஆயின், அரிதுஅரோ |
| நீ உற்ற நோய்க்கு மருந்து |
| தலைவி
|
| மருந்து இன்று யான் உற்ற துயர் ஆயின் எல்லா! |
| வருந்துவேன் அல்லனோ, யான்? |
| தோழி
|
| வருந்தாதி |
30 | மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏற அவன் |
| கண்ணி தந்திட்டது எனக் கேட்டு, 'திண்ணிதா, |
| தெய்வ மால், காட்டிற்று இவட்கு' என, நின்னை அப் |
| பொய் இல் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையோடு |
| ஐயன்மார் எல்லாம் ஒருங்கு |