| தலைவன்
|
| இகல் வேந்தன் சேனை இறுத்த வாய் போல |
| அகல் அல்குல், தோள், கண், என மூவழிப் பெருகி, |
| நுதல், அடி, நுசுப்பு, என மூவழிச் சிறுகி, |
| கவலையால் காமனும் படை விடு வனப்பினோடு, |
5 | அகலாங்கண் அளை மாறி, அலமந்து, பெயருங்கால், |
| 'நகை வல்லேன் யான்' என்று என் உயிரோடு படை தொட்ட |
| இகலாட்டி! நின்னை எவன் பிழைத்தேன், எல்லா! யான்? |
| தலைவி
|
| அஃது அவலம் அன்று மன |
| ஆயர் எமர் ஆனால், ஆய்த்தியேம் யாம், மிக; |
10 | காயாம்பூங் கண்ணிக் கருந் துவர் ஆடையை, |
| மேயும் நிரை முன்னர்க் கோல் ஊன்றி நின்றாய், ஓர் |
| ஆயனை அல்லை; பிறவோ அமரருள் |
| ஞாயிற்றுப் புத்தேள் மகன்? |
| தலைவன்
|
| அதனால் வாய்வாளேன்: |
15 | 'முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன |
| பல்லும் பணைத் தோளும், பேர் அமர் உண்கண்ணும், |
| நல்லேன், யான்' என்று, நலத்தகை நம்பிய |
| சொல்லாட்டி! நின்னொடு சொல் ஆற்றுகிற்பார் யார்? |
| தலைவி
|
| சொல்லாதி |
| 'போகாமல் உன்னை விலக்கினேன்' என்ற தலைவனுக்குத் தலைவி
|
20 | 'நின்னைத் தகைத்தனென்,' 'அல்லல் காண்மன் |
| மண்டாத கூறி, மழ குழக்கு ஆகின்றே, |
| கண்ட பொழுதே கடவரைப் போல, நீ |
| பண்டம் வினாய படிற்றால் தொடீஇய, நிற் |
| கொண்டது எவன் எல்லா! யான்?' |
| தலைவன்
|
25 | கொண்டது: |
| அளை மாறிப் பெயர்தருவாய்! அறிதியோ? அஞ் ஞான்று, |
| தளவ மலர் ததைந்தது ஓர் கானச் சிற்றாற்று அயல், |
| இள மாங்காய் போழ்ந்தன்ன கண்ணினால், என் நெஞ்சம் |
| களமாக் கொண்டு ஆண்டாய்; ஓர் கள்வியை அல்லையோ? |
| தலைவி
|
30 | நின் நெஞ்சம் களமாக்கொண்டு யாம் ஆள, எமக்கு எவன் எளிதாகும்? |
| புனத்துளான் என்னைக்குப் புகா உய்த்துக் கொடுப்பதோ? |
| இனத்துளான் எந்தைக்குக் கலத்தொடு செல்வதோ? |
| தினைக் காலுள் யாய் விட்ட கன்று மேய்க்கிற்பதோ? |
| தலைவன்
|
| அனைத்து ஆக |
35 | வெண்ணெய்த் தெழி கேட்கும் அண்மையால், சேய்த்து அன்றி, |
| அண்ணணித்து ஊர் ஆயின், நண்பகல் போழ்து ஆயின், |
| கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை |
| மயில் எருத்து வண்ணத்து மாயோய்! மற்று இன்ன |
| வெயிலொடு, எவன், விரைந்து சேறி? உதுக்காண்: |
40 | பிடி துஞ்சு அன்ன அறை மேல, நுங்கின் |
| தடி கண் புரையும் குறுஞ் சுனை ஆடி, |
| பனிப் பூந் தளவொடு முல்லை பறித்து, |
| தனி, காயாந் தண் பொழில், எம்மொடு வைகி, |
| பனிப் படச் செல்வாய், நும் ஊர்க்கு |
| தலைவி
|
45 | இனிச் செல்வேம், யாம் |
| மா மருண்டன்ன மழைக் கண் சிற்றாய்த்தியர் |
| நீ மருட்டும் சொற்கண் மருள்வார்க்கு உரை, அவை: |
| ஆ முனியா ஏறு போல், வைகல், பதின்மரைக் |
| காமுற்றுச் செல்வாய்; ஓர் கட்குத்திக் கள்வனை; |
50 | நீ எவன் செய்தி, பிறர்க்கு? |
| யாம் எவன் செய்தும், நினக்கு? |
| தலைவன்
|
| கொலை உண்கண், கூர் எயிற்று, கொய் தளிர் மேனி, |
| இனை வனப்பின், மாயோய்! நின்னின் சிறந்தார் |
| நில உலகத்து இன்மை தெளி; நீ வருதி; |
55 | மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியைத் |
| தலையினால் தொட்டு உற்றேன், சூள் |
| தலைவி
|
| ஆங்கு உணரார் நேர்ப; அது பொய்ப்பாய் நீ; ஆயின் |
| தேம் கொள் பொருப்பன் சிறுகுடி எம் ஆயர் |
| வேந்து ஊட்டு அரவத்து, நின் பெண்டிர் காணாமை, |
60 | காஞ்சித் தாது உக்கன்ன தாது எரு மன்றத்துத் |
| தூங்கும் குரவையுள் நின் பெண்டிர் கேளாமை, |
| ஆம்பற் குழலால் பயிர் பயிர் எம் படப்பைக் |
| காஞ்சிக்கீழ்ச் செய்தேம் குறி |