| ‘அரிதாய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும், |
| பெரிதாய பகை வென்று பேணாரைத் தெறுதலும், |
| புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும்’ என, |
| பிரிவு எண்ணிப் பொருள்வயிற் சென்ற நம் காதலர் |
5 | வருவர்கொல்; வயங்கிழாஅய்! வலிப்பல், யான்; கேஎள், இனி: |
| ‘அடி தாங்கும் அளவு இன்றி, அழல் அன்ன வெம்மையால், |
| கடியவே’ கனங் குழாஅய்! ‘காடு’ என்றார்; ‘அக் காட்டுள், |
| துடி அடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப் |
| பிடி ஊட்டி, பின் உண்ணும், களிறு’ எனவும் உரைத்தனரே |
10 | ‘இன்பத்தின் இகந்து ஒரீஇ, இலை தீந்த உலவையால், |
| துன்புறூஉம் தகையவே காடு’ என்றார்; ‘அக் காட்டுள், |
| அன்பு கொள் மடப் பெடை அசைஇய வருத்தத்தை |
| மென் சிறகரால் ஆற்றும், புறவு’ எனவும் உரைத்தனரே |
| ‘கல் மிசை வேய் வாடக் கனை கதிர் தெறுதலான், |
15 | துன்னரூஉம் தகையவே காடு’ என்றார்; ‘அக் காட்டுள், |
| இன் நிழல் இன்மையான் வருந்திய மடப் பிணைக்குத் |
| தன் நிழலைக் கொடுத்து அளிக்கும், கலை’ எனவும் உரைத்தனரே |
| என ஆங்கு |
| இனை நலம் உடைய கானம் சென்றோர் |
20 | புனை நலம் வாட்டுநர்அல்லர்; மனைவயின் |
| பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன; |
| நல் எழில் உண்கணும் ஆடுமால், இடனே |