| 'எம்மை எளியமாக் கருதினையோ?' என்ற தலைவியை நோக்கித் தலைவன் உரைத்தல்
|
| 'கடி கொள் இருங் காப்பில் புல்லினத்து ஆயர் |
| குடிதொறும் நல்லாரை வேண்டுதி எல்லா! |
| இடு தேள் மருந்தோ, நின் வேட்கை? தொடுதரத் |
| துன்னி, தந்தாங்கே, நகை குறித்து, எம்மைத் |
5 | திளைத்தற்கு எளியமாக் கண்டை; "அளைக்கு எளியாள் |
| வெண்ணெய்க்கும் அன்னள்" எனக் கொண்டாய்' ஒண்ணுதால்! |
| ஆங்கு நீ கூறின், அனைத்தாக; நீங்குக |
| அச்சத்தான் மாறி, அசைவினான் போத்தந்து, |
| நிச்சம் தடுமாறும் மெல் இயல் ஆய்மகள்! |
10 | மத்தம் பிணித்த கயிறு போல், நின் நலம் |
| சுற்றிச் சுழலும் என் நெஞ்சு |
| விடிந்த பொழுதினும் இல்வயின் போகாது, |
| கொடுந் தொழுவினுள் பட்ட கன்றிற்குச் சூழும் |
| கடுஞ்சூல் ஆ நாகு போல், நிற் கண்டு, நாளும், |
15 | நடுங்கு அஞர் உற்றது என் நெஞ்சு |
| எவ்வம் மிகுதர, எம் திறத்து, எஞ்ஞான்றும், |
| நெய் கடை பாலின் பயன் யாதும் இன்றாகி, |
| கை தோயல் மாத்திரை அல்லது, செய்தி |
| அறியாது அளித்து என் உயிர்' |
| தலைவி
|
20 | அன்னையோ? மன்றத்துக் கண்டாங்கே, 'சான்றார் மகளிரை |
| இன்றி அமையேன்' என்று, இன்னவும் சொல்லுவாய்; |
| நின்றாய்; நீ சென்றீ; எமர் காண்பர்; நாளையும் |
| கன்றொடு சேறும், புலத்து |