| தலைவன்
|
| நலம் மிக நந்திய நய வரு தட மென் தோள், |
| அலமரல் அமர் உண்கண், அம் நல்லாய்! நீ உறீஇ, |
| உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்துச் செல் |
| தலைவி
|
| பேர் ஏமுற்றார் போல, முன் நின்று, விலக்குவாய் |
5 | யார் எல்லா! நின்னை அறிந்ததூஉம் இல்வழி? |
| தலைவன்
|
| தளிரியால்! என் அறிதல் வேண்டின், பகை அஞ்சாப் |
| புல்லினத்து ஆயர் மகனேன், மற்று யான் |
| தலைவி
|
| ஒக்கும்மன் |
| புல்லினத்து ஆயனை நீ ஆயின், குடம் சுட்டு |
10 | நல் இனத்து ஆயர், எமர் |
| தலைவன் கூற்றும் தலைவி மாற்றமும்
|
| 'எல்லா! |
| நின்னொடு சொல்லின், ஏதமோ இல்லைமன்' |
| 'ஏதம் அன்று; எல்லை வருவான் விடு' |
| தலைவன்
|
| விடேன். |
15 | உடம்பட்டு நீப்பார் கிளவி, மடம் பட்டு, |
| மெல்லிய ஆதல் அறியினும், மெல்லியால்! |
| நின் மொழி கொண்டு, யானோ விடுவேன் மற்று என் மொழி கொண்டு |
| என் நெஞ்சம் ஏவல் செயின்? |
| தலைவி
|
| 'நெஞ்சு ஏவல் செய்யாது' என நின்றாய்க்கு, 'எஞ்சிய |
20 | காதல் கொள் காமம் கலக்குற' ஏதிலார் |
| பொய்ம் மொழி தேறுவது என்? |
| தலைவன்
|
| தெளிந்தேன், தெரியிழாய்! யான் |
| பல்கால், யாம் கான்யாற்று அவிர் மணற் தண் பொழில், |
| அல்கல் அகல் அறை, ஆயமொடு ஆடி, |
25 | முல்லை குருந்தொடு முச்சி வேய்ந்து, எல்லை |
| இரவு உற்றது; இன்னும் கழிப்பி; அரவு உற்று, |
| உருமின் அதிரும் குரல் போல், பொரு முரண் |
| நல் ஏறு நாகுடன் நின்றன, |
| பல் ஆன் இன நிரை; நாம் உடன் செலற்கே |