116
வினை வல பாங்கின் தலைவனும் தலைவியும்


தலைவி

பாங்கு அரும் பாட்டங்கால் கன்றொடு செல்வேம்; எம்
தாம்பின் ஒரு தலை பற்றினை, ஈங்கு எம்மை
முன்னை நின்றாங்கே விலக்கிய எல்லா! நீ
என்னை ஏமுற்றாய்? விடு

தலைவன்

5விடேஎன்; தொடீஇய செல்வார்த் துமித்து, எதிர் மண்டும்
கடு வய நாகு போல் நோக்கி, தொழுவாயில்
நீங்கி, சினவுவாய் மற்று

தலைவி

நீ நீங்கு; கன்று சேர்ந்தார்கண் கத ஈற்றாச் சென்றாங்கு,
வன்கண்ணள் ஆய் வரல் ஓம்பு

தலைவன்

10யாய் வருக ஒன்றோ; பிறர் வருக; மற்று நின்
கோ வரினும் இங்கே வருக; தளரேன் யான்,
நீ அருளி நல்கப் பெறின்

தலைவி

நின்னை யான் சொல்லினவும் பேணாய், நினைஇ'
கனை பெயல் ஏற்றின் தலை சாய்த்து, எனையதூஉம்
15மாறு எதிர் கூறி, மயக்குப்படுகுவாய்!
கலத்தொடு யாம் செல்வுழி நாடி, புலத்தும்
வருவையால் நாண்இலி! நீ

வினை வல பாங்கின் தலைவியை ஆற்றிடைக் கண்டு விலக்கிய தலைவனோடு அவள் சில மொழி, கூறி, குறியிடம் கூறியது