| இடு முள் நெடு வேலி போல, கொலைவர் |
| கொடுமரம் தேய்த்தார் பதுக்கை நிரைத்த |
| கடு நவை ஆர் ஆற்று, அறுசுனை முற்றி, |
| உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை |
5 | கடுந் தாம் பதிபு, ஆங்குக் கை தெறப்பட்டு, |
| வெறி நிரை வேறாகச் சார்ச்சாரல் ஓடி, |
| நெறி மயக்குற்ற நிரம்பா நீடு அத்தம் |
| சிறு நனி நீ துஞ்சி ஏற்பினும், அஞ்சும் |
| நறுநுதல் நீத்துப் பொருள்வயிற் செல்வோய்! |
10 | உரனுடை உள்ளத்தை; செய் பொருள் முற்றிய |
| வளமையான் ஆகும் பொருள் இது என்பாய்! |
| இளமையும் காமமும் நின் பாணி நில்லா |
| இடை முலைக் கோதை குழைய முயங்கும் |
| முறை நாள் கழிதல் உறாஅமைக் காண்டை |
15 | கடை நாள் இது என்று அறிந்தாரும் இல்லை |
| போற்றாய் பெரும! நீ, காமம் புகர்பட |
| வேற்றுமைக் கொண்டு, பொருள்வயிற் போகுவாய்! |
| கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு |
| மாற்றுமைக் கொண்ட வழி |