| ஒண் சுடர் கல் சேர, உலகு ஊரும் தகையது, |
| தெண் கடல் அழுவத்துத் திரை நீக்கா எழுதரூஉம், |
| தண் கதிர் மதியத்து அணி நிலா நிறைத்தர, |
| புள்ளினம் இரை மாந்திப் புகல் சேர, ஒலி ஆன்று, |
5 | வள் இதழ் கூம்பிய மணி மருள் இருங் கழி |
| பள்ளி புக்கது போலும் பரப்பு நீர்த் தண் சேர்ப்ப! |
| தாங்கருங் காமத்தைத் தணந்து நீ புறம் மாற, |
| தூங்கு நீர் இமிழ் திரை துணையாகி ஒலிக்குமே |
| உறையொடு வைகிய போது போல், ஒய்யென |
10 | நிறை ஆனாது இழிதரூஉம், நீர் நீந்து கண்ணாட்கு |
| வாராய் நீ புறம் மாற, வருந்திய மேனியாட்கு |
| ஆர் இருள் துணையாகி அசைவளி அலைக்குமே |
| கமழ் தண் தாது உதிர்ந்து உக, ஊழ் உற்ற கோடல் வீ |
| இதழ் சோரும் குலை போல, இறை நீவு வளையாட்கு |
15 | இன் துணை நீ நீப்ப, இரவினுள் துணையாகி, |
| தன் துணைப் பிரிந்து அயாஅம் தனிக் குருகு உசாவுமே |
| ஒண் சுடர் ஞாயிற்று விளக்கத்தான், ஒளி சாம்பும் |
| நண்பகல் மதியம் போல், நலம் சாய்ந்த அணியாட்கு |
| என ஆங்கு |
20 | எறி திரை தந்திட, இழிந்த மீன் இன் துறை |
| மறி திரை வருந்தாமல் கொண்டாங்கு, நெறி தாழ்ந்து, |
| சாயினள் வருந்தியாள் இடும்பை |
| பாய் பரிக் கடுந் திண் தேர் களையினோ இடனே |