| 'கோதை ஆயமும் அன்னையும் அறிவுற, |
| போது எழில் உண்கண் புகழ் நலன் இழப்ப, |
| காதல் செய்து அருளாது துறந்தார்மாட்டு, ஏது இன்றி, |
| சிறிய துனித்தனை; துன்னா செய்து அமர்ந்தனை; |
5 | பலவும் நூறு அடுக்கினை; இனைபு ஏங்கி அழுதனை; |
| அலவலை உடையை' என்றி தோழீ! |
| கேள், இனி: |
| மாண் எழில் மாதர் மகளிரோடு அமைந்து, அவன் |
| காணும் பண்பு இலன் ஆதல் அறிவேன்மன்; அறியினும், |
10 | பேணி அவன் சிறிது அளித்தக்கால், என் |
| நாண் இல் நெஞ்சம் நெகிழ்தலும் காண்பல் |
| இருள் உறழ் இருங் கூந்தல் மகளிரோடு அமைந்து, அவன் |
| தெருளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்மன்; அறியினும், |
| அருளி அவன் சிறிது அளித்தக்கால், என் |
15 | மருளி நெஞ்சம் மகிழ்தலும் காண்பல் |
| ஒள் இழை மாதர் மகளிரோடு அமைந்து, அவன் |
| உள்ளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்மன்; அறியினும், |
| புல்லி அவன் சிறிது அளித்தக்கால், என் |
| அல்லல் நெஞ்சம் மடங்கலும் காண்பல் |
20 | அதனால், |
| யாம நடு நாள் துயில் கொண்டு ஒளித்த |
| காம நோயின் கழீஇய நெஞ்சம் |
| தான் அவர்பால் பட்டதாயின், |
| நாம் உயிர் வாழ்தலோ நகை நனி உடைத்தே |